6.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 29-01-2024 முதல் 02-01-2024
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. நீங்கள் நால்வர்
2. பசிப்பிணி போக்கிய பாவை
1.கற்றல் நோக்கங்கள் :
@ வாழும் முறைகளை அறிதல்
@ பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளரத்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் யாவை?
Ø உலகில் சிறந்த தானமாக கருதப்படுவது எது?
Ø பசியின் கொடுமையை சில காணொளிக் காட்சிகள் கொண்டு காண்பித்து பாடத்தினை ஆர்வமூட்டல்
என்ற வினாவைக்கேட்டு, விடைகூறச்செய்து ஓவியங்களை அறிமுகம் செய்தல்
4.படித்தல் :
செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
வாழ்க்கை வாழும் முறை
கோமுகி : கோ – பசு , முகி – முகம், பசுமுகம் கொண்ட பொய்கை
வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.
அமுத சுரபி சிறப்பு : அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
ஏ ழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம் . உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்
8.மதிப்பீடு:
1. பசிப்பிணி போக்கிய பாவை யார்?
2. கவிஞர் கலீல் கிப்ரானைப் பற்றி குறிப்பு எழுதுக
3. பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதையாகச் சுருக்கிக் கூறுக.
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளைக்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
உங்கைள் நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேறறும் வழிகைள் குறித்துக் கலந்துரையாடுக.
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தைக் கதையாகச் சுருக்கிக் கூறுக.
12.கற்றல் விளைவு:
Ø 609 - மிக நுட்பமாக ஒரு நூலை ஆய்ந்து, குறிப்பிட்ட செய்திகளைத் தேடிக்கண்டு பிடித்தல், ஊகித்தறிதல் மற்றும் முடிவு செய்தல்.
@ 610 - பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை
(செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்
போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான
கருத்துரைகளைப் பகர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்