9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் :05-02-2024 முதல் 09-02-2024
மாதம் : பிப்ரவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தாய்மைக்கு வறட்சியில்லை
1.கற்றல் நோக்கங்கள் :
@ சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண் புடன் வாழ்தல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தாயைப் பிடிக்காதவர்கள் இவ்வுலகில் யாரேனும் இருப்பார்களா? என்ற வினாவைக் கேட்டு,மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
கர்நாடக மாநிலம், குல்பர்கா நகர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு வறுமையான குடும்பம் வாழ்ந்து வந்தது.
ஒருநாள் அங்கு வந்த அரசு அதிகாரி அந்த வறுமையான குடும்பத்திற்கு உணவளித்து உதவி செய்ய முற்பட்டார்.
ஆனால் பசியை விட மானம் பெரிது என்று எண்ணிய அந்த குடும்பத்தினர் இந்த உணவை வாங்குவதற்குத் தயங்கினர்.
ஒரு வழியாக அவர் அளித்த உணவை வாங்கியதும், அவர்களுடைய குழந்தைகளோடு வளர்ந்து வந்த நாய்க்குட்டிகளும் பசியால் ஒலியெழுப்பின.
அந்த ஏழைத் தாய் தன்னிடம் இருந்த உணவை அந்த நாய்க் குட்டிகளுக்கு ஊட்டிவிட்டாள்.
அவனது தட்டில் உணவு குறைய குறைய தாய்மை கூடிக்கொண்டே சென்றது.
5.ஆசிரியர் செயல்பாடு :
# ஆசிரியர், தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற இந்த சிறந்த கதையை உடல் மொழிகள் மூலமும் மெய்ப்பாடுகள் மூலமும் மாணவர்களுக்குப் பொருள் விளங்குமாறு எடுத்துக் கூறுதல்.
§ இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்து தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற கதையை நாடகமாக நடித்துக் காட்டச் செய்தல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
Ø மாணவர்கள் வறுமையை விடத் தன்மானம் பெரிது என உணர்தல்.
Ø தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை அறிந்துகொள்ளுதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 9047- மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயம் பண்புகளைத் தக்க சூழலில் உணர்ந்து பின்பற்துதல்.
திறன்கள்:
@ பேசுதல்,எழுதுதல்
9.ஆம் வகுப்பு கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க👇