மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள்- 6 (2023-2024)
மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள்-6 (2023-2024)
மொழிப்பாடம் - பகுதி I - தமிழ்
கால அளவு : 3.00 மணி நேரம் மொத்த மதிப்பெண்கள் : 100
அறிவுரைகள் :
(1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச்
சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்
உடனடியாகத் தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்
அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்புகள் :
(i) இவ்வினாத்தாள்
ஐந்து பகுதிகளைக் கொண்டது.
(ii)
விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி – I (மதிப்பெண்கள் : 15)
குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15x1=15
(ii)
கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
1. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்றவர்
(அ) பெருஞ்சித்திரனார் (ஆ) இளங்குமரனார் (இ) தேவநேயப் பாவாணர் (ஈ) கண்ணதாசன்
2.
குளிர்காலத்தைப் பொழுதாகக்
கொண்ட நிலங்கள்
அ)
முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி,
பாலை, நெய்தல் நிலங்கள்
இ)
குறிஞ்சி, மருதம், நெய்தல்
நிலங்கள் ஈ)
மருதம், நெய்தல், பாலைநிலங்கள்
3 பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
4. கூத்துக்கலைஞர் பாடத்
தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். இத்தொடர்களின் சரியான கலவைத் தொடர்
அ. கூத்துக்கலைஞர் பாடவில்லை
என்றால் கூடியிருந்த மக்கள் அமைதியாயிரார்,
ஆ.கூத்துக்கலைஞர்
பாடத்தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
இ.கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கினார்
என்பதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
ஈ. கூத்துக்கலைஞர் பாடத்தொடங்கி
கூட்டத்திலிருந்தவர்களை அமைதிப்படுத்தி வைத்தார்.
5.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?
(அ) நல்ல உள்ளம் உடையவர்கள்
இல்லாததால் (ஆ) ஊரில்
விளைச்சல் இல்லாததால்
(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி
புரிவதால் (ஈ)
அங்கு வறுமை இல்லாததால்
6. கொடுக்கப்பட்ட அனைத்துச்
சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.
(மலை, மழை, மேகம், ஆறு, ஏரி, குளம்)
அ. மலைமீது மழை பெய்து ஆற்று
வெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.
ஆ. கருத்த மேகம் மலைமீது மழையைப்
பொழிய ஆறு, ஏரி, குளம்,
அனைத்தும் நீரால் நிரம்பி
இ. திரண்ட மேகங்கள் மலையில்
மாரியாகி ஆறு, ஏரி, குளங்களில்
நிறைந்தன.
ஈ. மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள்
நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.
7. ”உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்” எனப்பாடியவர் யார்?
அ)
கம்பர் ஆ) தமிழழகனார் இ) பெரிஞ்சித்திரனார் ஈ) கண்ணதாசன்
8. தொழிலைச் செய்யும்
கருத்தாவைக் குறிப்பது
அ. தொழிற்பெயர் ஆ. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
இ. முதனிலைத் தொழிற்பெயர் ஈ. வினையாலணையும் பெயர்
9
. காய்ந்த
இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன
அ) இலையும் சருகும் ஆ)
தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ)
சருகும் சண்டும்
10.
அருந்துணை
என்பதைப் பிரித்தால்-
-------------என வரும்
அ) அரு+துணை ஆ) அருமை +துணை
இ) அருமை+இணை ஈ) அரு+இணை
11.
எர்லி மார்னிங் எழுந்து வாக்கிங் சென்று வந்து டீ குடித்த அம்மா,
நீயூஸ் பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். - இத்தொடரில்
அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச்சொல் வரிசையைத் தேர்க.
அ.வைகறை,
நடைப்பயிற்சி, பத்திரிக்கை, தேநீர் ஆ.
அதிகாலை, நடந்து, தேநீர், பத்திரிக்கை
இ. காலை,
நடை, தேநீர், செய்தி ஈ. வைகறை, நடைப்பயிற்சி தேநீர், செய்தித்தாள்
பாடலைப்
படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக
"விசும்பில் ஊழி ஊழ் ஊழ்
செல்லக்
கரு வளர் வானத்து இசையில் தோன்றி.
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"
12. ஊழ் ஊழ் - இலக்கணக் குறிப்பு
அ. இரட்டைக் கிளவி ஆ.பண்புத்தொகை இ.அடுக்குத்தொடர் ஈ. வினைத்தொகை
13. பாடலின் ஆசிரியர்
அ.கீரந்தையார் ஆ. பூதஞ்சேந்தனார் இ.நப்பூதனார் ஈ. குலசேகராழ்வார்
14. பாடலில் உணர்த்தப்படும்
கருத்து
அ. தத்துவக் கருத்து ஆ. அறிவியல் செய்தி இ.நிலையாமை ஈ.அரசியல் அறம்
15.விசும்பு, இசை, ஊழி - பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள்
முறையே
அ.காற்று,
ஓசை,கடல் ஆ. மேகம், இடி,
ஆழம் இ.வானம்,
பேரொலி, யுகம் ஈ.வானம்,காற்று,
காலம்
பகுதி – II பிரிவு - 1
குறிப்பு : எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21- க்கு கட்டாயமாக விடையளிக்கவும். 4x2=8
16. வறுமையின் காரணமாக
உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?
17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும் :
(அ) ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின்
அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.
(ஆ) ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்கவேண்டும் என்று
ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
18.
வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த
கண்டுபிடிப்புகள் இரண்டனை எழுதுக
19.
காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
20.
பாசவர், வாசவர், பல்நிண
விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்
?
21.
'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2
குறிப்பு: எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5x2=10
23. பத்தியிலுள்ள பிறமொழிச்
சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக.
உங்களிடம் செவன் கோல்டு
பிஸ்கட் உள்ளது. தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டை
வைத்தால் தராசு ஈக்வலாக இருக்கும். பேலன்ஸாக ஒரு கோல்ட் பிஸ்கட் உங்கள் கையில்
இருக்கும்.
24. "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்" -
இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி. அதன் இலக்கணம் தருக.
22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார் ? ஆகிய
தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை ?
25. பகைவேந்தர் இருவரும் வலிமையே
பெரிது என்பதை நிலைநாட்ட, போரிடும் திணை குறித்து எழுதுக.
26. மரபுத் தொடருக்கான
பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
அ) கண்ணும் கருத்தும் ஆ) கயிறு திரித்தல்
குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.
எதிர்மறையாக மாற்றுக. அ. மீளாத்துயர் ஆ. புயலுக்குப்
பின்
27. 'கிளர்ந்த' - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
28. கலைச்சொற்கள் தருக. அ) Ultraviolet Rays ஆ) Space Technology
பகுதி – III (மதிப்பெண்கள் : 18)
குறிப்பு : எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2x3=6
பிரிவு -1
29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா?என்பதை விளக்குக
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
பருப் பொருள்கள்
சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப்
பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்
தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி
வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில்,
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.
(அ) பத்தியில் உள்ள
அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
(ஆ) புவி ஏன் வெள்ளத்தில்
மூழ்கியது ?
(இ) பெய்த மழை -இத்தொடரை
வினைத்தொகையாக மாற்றுக.
31. ஹிப்பாலஸ் பருவக்காற்று – குறிப்பு
வரைக
பிரிவு - 2
குறிப்பு : எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.வினா எண் 34- க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
2x3=6
32. மன்னன் இடைக்காடனார்என்றபுலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம்தருக..
33. சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத்
திருக்குறள்வழி விளக்குக.
34. அடிபிறழாமல் எழுதுக.
(அ) "நவமணி" எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடலை எழுதுக (அல்லது)
(ஆ) "தூசும் துகிரும்"
எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு -3
குறிப்பு : எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும் 2x3=6
35. விடை வகைகளை எழுதுக. ஏதேனும் இரு வகை விடைகளைச் சான்றுடன் விளக்குக
36. "வேலொடு நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான் இரவு" -இத்திருக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக
37. உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு
தருக.
பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)
குறிப்பு : அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
5x5=25
38. (அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடு
ஒப்பிட்டு எழுதுக. (அல்லது)
(ஆ)
”பொருட்செல்வம் நமது
வாழ்க்கைக்கு இன்றியமையாதது” எனும் கூற்றினை வள்ளுவர் வழி விளக்குக.
39. (அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசுபெற்ற தோழனை வாழ்த்தி
மடல் எழுதுக. (அல்லது)
(ஆ)
பல்பொருள் அங்காடி ஒன்றில் வாங்கிய உணவுப்பொருள் நாள்பட்டதாக இருப்பது குறித்து உரிய
சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் எழுதுக.
40) கட்சியைக்கண்டு கவினுற எழுதுக
41. சேலம் மாவட்டம், திரு.வி.க. நகர், புதுதெரு, எண்-40 இல் வசிக்கும் இளமாறனின் வளர்ப்பு மகன் செங்கோடன் கிளை நூலகத்தில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை செங்கோடனாக கருதிக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் சரியான
படிவத்தை தேர்வு செய்து நிரப்புக.
42.
(அ) ) மாணவ நிலையில்நாம் பின்பற்றவேண்டிய அறங்களையும்
அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக (அல்லது)
(ஆ) மொழிபெயர்க்க :
Among the five geographical divisions of
the Tamil country in Sangam literature, the Marutam region was fit for
cultivation, as it had the most fertile lands. The property of a farmer
depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of
the soil. Among these elements of nature, sunlight was considered indispensable
by the ancient Tamils..
குறிப்பு : : செவி மாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர்
ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக்
காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர்
நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக்
குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய
அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின்
விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.
( I ).
ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்
யாவை?
( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?
( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?
( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.
பகுதி – V (மதிப்பெண்கள் : 24)
குறிப்பு : அனைத்து
வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும். 3x8=24
43. (அ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ்
மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.. (அல்லது)
(ஆ)
சங்க காலத்தில் தமிழர் பின்பற்றிய சிறந்த அறங்கள் இன்றைய வாழ்வியலுக்கும் தேவையே
என்பதை விவரிக்க.
44. (அ) என் மக்கள் அனைவர்க்கும் நலம் கிட்டும். எல்லாரும் நலமுடன் வாழ்வார்கள்'
என்ற இராமானுசரின் கூற்றுக்கு ஏற்ப தன்னலமற்ற பண்புகளைக்
கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்த எடுத்துகாட்டுகளுடன்
விளக்குக. (அல்லது)
(ஆ)
அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
45. (அ) ”உழவே உன்னதம்” என்ற தலைப்பில் குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை வரைக
முன்னுரை – உழவே தமிழர் மகுடம்-உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்
– சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் – முடிவுரை (அல்லது)
(ஆ)
குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச் சென்ற நிகழ்வைக் கட்டுரையாக எழுதுக.