மூன்றாம் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2024
மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 பிப்ரவரி , சென்னை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ. கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? |
1 |
2. |
ஆ. இன்மையிலும் விருந்து
|
1 |
3. |
ஆ. அருமை , முயற்சி |
1 |
4. |
இ. உருவகம் |
1 |
5. |
ஈ.
கும்பகோணம் - குடந்தை |
1 |
6. |
இ. அன்மொழித்தொகை |
1 |
7. |
இ.
பொருநராற்றுப்படை |
1 |
8. |
அ. இரக்கம் |
1 |
9. |
இ. காடு , வாட |
1 |
10. |
இ. குறிஞ்சி, மருதம்,
நெய்தல் நிலங்கள் |
1 |
11. |
இ.
குழந்தையே வா ! |
1 |
12. |
அ.
வீரமாமுனிவர் |
1 |
13. |
ஆ.
தேம்பாவணி |
1 |
14. |
இ. பூக்கையை , சேக்கையை |
1 |
15. |
ஆ.
படுக்கை |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
இகழ்ந்து
ஏளனம் செய்யாமல் பொருள் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெறுபவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி
பொங்கும். |
2 |
18 |
# வாசவர்- நறுமணப்
பொருட்களை விற்பவர்கள் # # உமணர் – உப்பு விற்பவர் |
2 |
19 |
ü பூ தொடுப்பவரின் எண்ணங்களை விளக்குகிறது. ü மலரை உலகமாக உருவகம் செய்துள்ளனர். ü உலகத்தைக் கவனமாக கையாள வேண்டும் என்று பாடலில் கூறப்பட்டுள்ளது |
2 |
20 |
தம்பி, அழாதே! அம்மா இப்போது வந்து விடுவார், வரும்போது
தின்பண்டங்கள் வாங்கி வருவார் |
2 |
21 |
செயற்கை
அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை
அறிந்து செயல். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
அ.
சிலப்பதிகாரம் காப்பியச்சுவை மிகுந்தது, அன்றோ? ஆ. விடுமுறை நாளில் விளையாடச்செல்வது வழக்கம்தானே? |
2 |
23 |
மயங்கிய
–
மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு
–
பகுதி இ(ன்)
–
இறந்த கால இடைநிலை;
‘ன்’ புணர்ந்து
கெட்டது. ய்
–
உடம்படுமெய் அ
- பெயரெச்ச விகுதி |
2 |
24 |
அ. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும் புல்வெளிகளில்
கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது. ஆ. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும்
போலிருக்கிறது. இ. வெள்ளந்தி மனம்
உள்ளவரை அப்பாவி என்கிறோம். |
2 |
25 |
அ. அமிர்தமும் (அமுதமும்) நஞ்சு ஆ. சோற்றுக்கு
ஒரு சோறு பதம் |
2 |
26 |
இன்னிசையளபெடை – ஓசை குறையாதபோதும் இனிய ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது. |
2 |
27 |
பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம்,
செல்வம், புகழ், கருணை
முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை (பாடு+ஆண்+திணை= பாடாண்திணை). |
2 |
28 |
அ. ஒப்பெழுத்து ஆ.
மனிதநேயம் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆகியவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|
33 |
# மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார். # நோயாளியும் அதைப் பொறுத்துக்
கொள்கிறார். # அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன்
என்று குலசேகராழ்வார் கூறுகிறார். |
3 |
|
34 |
அ. சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், “கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த ்தர இன்னே
வருகுவர், தாயர்” என்போள் நன்னர்
நன்மொழி கேட்டனம்.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. |
||||||||||||||||||||||||||
35 |
அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை ,
தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை |
3 |
||||||||||||||||||||||||
36 |
நிரல்நிறைஅணி நிரல் = வரிசை; நிறை= நிறுத்துதல். சொல்லையும்
பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப்பொருள் கொள்வது நிரல்நிறைஅணி
எனப்படும்.
எ.கா. அன்பும் அறனும் உடைத்தாயின்
இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
-குறள்: 45 பாடலின் பொருள் இல்வாழ்க்கைஅன்பும்
அறமும் உடையதாக விளங்குமானால், அந்தவாழ்க்கையின்பண்பும் பயனும்
அதுவே ஆகும். அணிப்பொருத்தம் இக்குறளில் அன்பும் அறனும் என்ற
சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக்
கூறியுள்ளமையால் இது நிரல் நிறைஅணி ஆகும் |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||
38 |
அ)
மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். (அல்லது) ஆ) ü ஒரு
பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம். அஃது அல்லாமல்
உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை. ü முறையறிந்து
தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்;
இன்பத்தையும் தரும். ü மற்ற
வர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக்கொள்ளாமல்
நீக்கிவிடவேண்டும். ü தன்
கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண் டு யானைப்போரைக் காண்பது போன்றது ü ஒருவர்
பொருளை ஈட்ட வேண் டும்; அவருடைய பகைவரை
வெல்லும் கூர்மை யான ஆயுதம் அதைவிட வேறு இல்லை. |
5 |
||||||||||
39 |
ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||
41 |
நூலக உறுப்பினர் படிவம் தேனி மாவட்ட நூலக ஆணைக்குழு மைய /
உறுப்பினர் சேர்க்கை அட்டை அட்டை எண்: 1234
உறுப்பினர் எண்:
5678
1. பெயர் : பு.செங்குட்டுவன் 2. தந்தை பெயர் : புவியரசு 3. பிறந்த நாள் : 12-10-2009 4. வயது : 15 5. படிப்பு : பத்தாம் வகுப்பு 6. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210 7. முகவரி : 28, காமராசர் தெரு,
பாரதியார் நகர், தேனி மாவட்டம் (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) நான் கிருஷ்ணகிரி கிளை நூலகத்தில்
உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ100 சந்தா
தொகை ரூ20 ஆக மொத்தம் ரூ. 120 செலுத்துகிறேன்.
நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இடம்: தேனி நாள்: 05-03-2024 பு.செங்குட்டுவன்
தங்கள் உண்மையுள்ள திரு
/ திருமதி / செல்வி / செல்வன்
பு.செங்குட்டுவன் அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று
அளிக்கிறேன்.
பிணையாளர் கையொப்பம் அலுவலக
முத்திரை (பதவி மற்றும் அலுவலகம்) |
5 |
||||||||||
42 |
அ)
ஆ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட
ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத
ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) விருந்தினரை வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து
வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர
வைத்தேன். வாழை இலையில்
விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில்
உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை
விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச்
சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர்
ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன்.
பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை
மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என
விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த
இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன்
கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன். (அல்லது) ஆ) |
8 |
44 |
அ. ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம்
ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை
ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம்
என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக்
கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். (அல்லது) ஆ. பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
8 |
45 |
அ.
தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர் முன்னுரை: ”வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்கள்
மனதில் நிலையாய் நிற்பவர் யாரோ?” படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு
பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில்
தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா? பிறப்பும்
இளமையும்: ”விருதுப்பட்டிக்கு இவரை விட பெரிய விருது தேவையா?” விருதுப்பட்டி
என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15
-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல்
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார்.
இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை
நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில்
ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றும்
மொழிப்பற்றும்: சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள்
பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும்
மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார். தூய்மையும்
எளிமையும்: ”எளிமையின் இலக்கணம் – இவர் மனதில் கொண்டது
பெருங்குணம்” பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத்
தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த
பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று
ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர
அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர், மக்கள் பணியே
மகத்தான பணி: 1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில்
பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18
மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில்
விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப்
படிப்பார். முடிவுரை: ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” 'கல்விக் கண் திறந்த
காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது
"ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை
தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய
ஒப்பற்ற தலைவர் இவரே (அல்லது) ஆ) முன்னுரை: ”உள்ளம் கொள்ளை போனதே மக்கள் நிறைந்த பொடுட்காட்சியில்” குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக்
கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம்
தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ”அழகு நிறைந்த பொருட்காட்சி அதன் அரங்குகளே அதற்கு சாட்சி” பொருட்காட்சியின்
தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு
குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை
மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின்
அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: ”மெல்ல மெல்ல இருண்டதே! பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே!” பொருட்காட்சியில்
விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள்,
சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள்,
குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட கலைகள்: ”சுற்றியது இராட்டினங்கள்
மட்டுமல்ல அதனோடு சேர்ந்து எங்கள்
மனங்களும்தான்” பொருட்காட்சியின் உள்ளே
இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில்
ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை
மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக
இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனம் கவரும் வகையில் பல விளையாட்டு அரங்குகளும்
அமைக்கப்பட்டிருந்தன. பேச்சரங்கம்: இலக்கிய விரும்பிகளுக்கு
விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த
மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர்.
நாலும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு
விட்டு வந்தோம். அரசின் நலத்திட்டங்கள்: பொருட்காட்சிக்கு
முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை
வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது
பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும்
விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில்
வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில்
வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில்
ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக
இந்நிகழ்வு அமைந்தது. |
8 |