உலக மகளிர்தின வாழ்த்துகள்
👧👧👧👧👧👧👧👧👧
வெ.க.வாசு,
தமிழாசிரியர்,
அ.உ.நி.பள்ளி,
தணிகைப்போளூர்,
இரா.பே.மாவட்டம்
வேய்ங்குழல் துளையில்
நுழைந்த காற்று நீ!
நீ நுழைந்த பிறகே பலரது
வாழ்வு இசை(புகழ்) பெறுகிறது!
தாயாய்,தாரமாய்,மகளாய்,
உடன் பிறப்பாய்...
கண் விழித்தது முதல்
கண்ணுறங்கும் வரை
எத்தனை முறை
கூடு விட்டு கூடு பாய்கிறாய்?
சிரிக்கும் போது
நீயும் சிரிக்க வேண்டும்!
அழும்போது நீயும்
அழ வேண்டும்!
புலவுச் சோறும் பிடிக்க வேண்டும்!
புளிக்குழம்பும் பிடிக்க வேண்டும்!
ஏட்டுச்சுரைக்காயில் மட்டுமே சரிசமம் எனும் விதை இருக்கும் போல???
நிமிர்ந்து நடந்தால் பிடாரிப் பட்டம்!!
குனிந்து நடந்தால் பூச்சி பட்டம்!!
இயந்திர நெம்புகோலில்
மூன்று வகைகளாம்!!
இயற்பியலில் படித்தேன்!!
பூமிப்பந்தின் சுழற்சியை சமநிலைப்படுத்தும், உன்னுள் எத்தனை வகை நெம்புகோல் உள்ளது??
எதில் படிப்பேன்???
தொழுது பின்செல்ல வேண்டியோர் உணவை விளைவிக்கும் உழவர் மட்டுமல்லர்!!
பலரது வாழ்வை விடியவைக்கும் நீங்களும் தான்!!
அனைத்து ஆற்றல் மிகு மகளிருக்கும் உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤