மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024
மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024
, விருதுநகர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஆ. சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார் |
1 |
2. |
இ. இடையறாது அறப்பணி செய்தலை
|
1 |
3. |
அ. கால் |
1 |
4. |
ஈ. நெறியோடு
நின்று காவல் காப்பவர் |
1 |
5. |
இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள் |
1 |
6. |
அ. வேற்றுமை உருபு |
1 |
7. |
ஆ.
மணவை முஸ்தபா |
1 |
8. |
இ. மூன்று |
1 |
9. |
அ. அகவற்பா |
1 |
10. |
ஈ)
செய்தி 1,3 ஆகியன சரி |
1 |
11. |
ஆ. தேவநேயப் பாவாணர் |
1 |
12. |
இ.
செய்குத்தம்பி பாவலர் |
1 |
13. |
ஈ.
அருளை, மருளை |
1 |
14. |
அ. உயிருக்கு |
1 |
15. |
ஆ.
நீதிவெண்பா |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே
மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான். |
2 |
18 |
பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் |
2 |
19 |
வாருங்கள்,நலமா? , நீர் அருந்துங்கள். |
2 |
20 |
வாய்க்காலில் பாயும் நீரை
வயலுக்குத் திருப்பிவிடுவது மடை. உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்.இதனைச்
செய்யுளா கிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை. |
2 |
21 |
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார்
தொடர்கை விடல் |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
அ.
புலி ஆ. கொடுத்தப் பொருளைப் பற்றி உடனே பாடும் பாட்டு |
2 |
23 |
# மின்விளக்கின்
சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா # மின்சாரம்
இருக்கிறதா , இல்லையா? - ஐய வினா |
2 |
24 |
பதிந்து –
பதி +த்(ந்) + த் + உ; பதி –
பகுதி த் – சந்தி (ந்-ஆனது விகாரம்) த் –
இறந்தகால இடைநிலை உ –
வினையெச்ச விகுதி |
2 |
25 |
அ. சுழற்காற்று
ஆ. பக்தி இலக்கியம் |
2 |
26 |
அ.
தந்தையை இழந்த குடும்பம்
வருமானம் இன்றி மழைமுகம் காணாப் பயிர்போல வாடி இருக்கிறது. ஆ.
பெற்றோர் தங்கள் பெண்
குழந்தைகளை கண்ணினைக் காக்கும் இமைபோல காக்க வேண்டும். |
2 |
27 |
வஞ்சிப்பாவிற்குத் தூங்கல்
ஓசையும்,கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியது. |
2 |
28 |
அ. புதுவை ஆ. புதுகை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ.
ஜப்பானில் சாஃப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் ஆ.
வீட்டுக்கு , வணிகத்துக்கு, படிப்புக்கு இ.
பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக
நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள் |
3 |
30 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன்.
ஆ) கன்று- வாழைக்கன்று
வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை
அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ்
அழகானது. |
3 |
31 |
ஏடு எடுத்தேன் கவி
ஒன்று எழுத என்னை எழுது என்று
சொன்னது இந்தக் காட்சி கலை என் வரலாற்றைப்
பற்றி எழுது என்றது கலைஞர் என் திறமையைப்
பற்றி எழுது என்றார் நான் எழுதுகிறேன்
கலையே உயிர் என்று |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
3 |
|
33 |
வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி,
கட்டைத்தூரிகை ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும்
சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு
நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்… |
3 |
|
34 |
அ. நவமணி வடக்க யில்போல் நல்லறப் படலைப் பூட்டும் தவமணி மார்பன் சொன்ன தன்னிசைக்கு இசைகள் பாடத் துவமணி மரங்கள் தோறும் துணர்அணிச் சுனைகள் தோறும் உவமணி கானம்கொல் என்று ஒலித்து அழுவ போன்றே.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. |
||||||||||||||||||||||||||
35 |
கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர் பாடினேன் தாலாட்டு
–வினைமுற்றுத்தொடர் மாம்பூவே - விளித்தொடர் ஆடி ஆடி ஓய்ந்துறங்கு
– அடுக்குத்தொடர் |
3 |
||||||||||||||||||||||||
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “ போருழந் தெடுத்த ஆரெயில்
நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில்
அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை ”மதுரை நகருக்குள் வரவேண்டாம் ”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை
ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ)
விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது (அல்லது) ஆ) மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். |
5 |
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி! கொடையைப் பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து
நடக்க
வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! |
5 |
41 |
பணிவாய்ப்பு வேண்டி தன்விவரப்
பட்டியலை நிரப்புதல் 1. பெயர் : பாலகுமாரி 2. பாலினம் : பெண் 3. பிறந்த நாள் மற்றும் வயது : 12-10-2008 4. தேசிய இனம் : இந்தியன் 5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : அ அ அ 6. வீட்டு முகவரி : 10 கம்பர் நகர், அரிட்டாபட்டி, மதுரை 7. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210 8. பத்தாம் வகுப்பில் பெற்ற
மதிப்பெண்கள் : 490/500 9. தாய்மொழி : தமிழ் 10. பயின்ற மொழிகள் : தமிழ், ஆங்கிலம் 11. தட்டச்சு : இளநிலை, முதுநிலை
(தமிழ், ஆங்கிலம்) 12. கணினி : இளநிலை பட்டயம் மேற்கண்ட விவரங்கள்
அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில்
தட்டச்சர் பணியினைத் தந்தால் என் பணியைச்
சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள பாலகுமாரி |
5 |
42 |
அ) உரிய விடையைப்
பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. ஆ) மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம்
வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ்
பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத்
தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு
பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை
நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம்
காண அறிவியல் உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும்
செய்ய இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம்
போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை அளிக்கும்.. (அல்லது) ஆ) நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். விடுதலைப்
போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே
மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்
தூண்டினர். நாட்டு
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள்,
தீண்டாமை மூடப்பழக்கங்கள், ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய
பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். |
8 |
44 |
அ. முன்னுரை: விடுதலைக்காக, சமுதாயக் கொள்கைகளுக்காக, மூடநம்பிக்கைகளுக்காக -இப்படி எண்ணற்ற கொடுமைகளுக்காக போராட்டம் நடத்திய
தியாகிகள் பலர். அவர்களில் பெண்களும் தம்மால் முடிந்த செயல்களைச்
செய்துள்ளார்கள். பாரதத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். சில பெண்கள் 'முயன்றால் வெல்லலாம்' என்பதை மனதிற் கொண்டு
சமுதாயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். அவர்களில் ஒரு சிலரைப் பற்றி இங்கு
காண்போம். எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை மேதை ஆனார். பதினேழு
வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற திரைப்படத்தில்
நடித்ததால் இந்தியா முழுவதும் பாராட்டு இவருக்குக் கிடைத்தது. காந்தியடிகளின்
முன் 'இரகுபதி இராகவ இராஜாராம்' என்ற
பாடலைப் பாடினார். சென்னை வானொலியில் 1947 இல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 'ஹரிதும் ஹரோ' என்னும் மீரா பஜன் பாடலைப் பாடினார். 1954 இல் இவருக்கு தாமரையணி விருதும், 1974 இல்
மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும் கிடைத்தது. இந்தி,
தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,
மலையாளம், இந்தி, குஜராத்தி
ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் கூடப்
பாடியுள்ளார். மோகனா (பாலசரஸ்வதி): இவர் பரதநாட்டியத்தில் சிறப்புப் பெற்றவர். இவர் பதினைந்து வயதில்
சென்னையில் உள்ள சங்கீத சமாஜம் என்னும் அரங்கில் தனது நடன நிகழ்ச்சியை
நடத்தினார். கல்கத்தாவிலும், காசியில் நடந்த அனைத்திந்திய
இசை மாநாட்டிலும், சென்னையில் நடந்த இந்திய தேசிய
காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய 'ஜனகணமன'
பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார். ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். வளர்மதி (இராஜம் கிருஷ்ணன்); இவர் சமூகத்தில் எழுந்த சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புதினங்களாகவும் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவர். இவர் 'பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி' என்னும் வரலாற்றுப்
புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின்
வாழ்க்கையை 'கரிப்பு மணிகள்' என்னும்
புதினமாக வடிவமைத்தார். படுகர் இனமக்களின் வாழ்வியலை 'குறிஞ்சித்
தேன்' என்னும் புதினமாகவும், கடலோர
மீனவர்களின் சிக்கல்களை 'அலைவாய்க்கரையில்' என்னும் புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின்
உழைப்பு கரண்டலை 'சேற்றில் மனிதர்கள்', வேருக்கு நீர்' என்னும் புதினங்களாகவும்
எழுதியுள்ளார். அன்பரசி (கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன்): இவர் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட
மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில்
பங்கு பெற்றவர். 'உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' எனத் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு இயக்கம்'
எனத் தொடங்கி வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வேறு பணிகள்
மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார். மாதவி (சின்னப்பிள்ளை): இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லாப்
பெண்களோடும் இணைந்து வேலை செய்து கூலியை எல்லாருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர்.
வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர்
திறமைக்கு ஏற்ற வேலை கொடுத்து அவர்களின் குடும்பங்களுக்கும் உதவியாக இருந்தார்.
நம் இந்திய நாட்டு நடுவண் முதன்மை அமைச்சராக இருந்த மாண்புமிகு. வாஜ்பாயிடம் 'பெண் ஆற்றல்" விருதையும், தமிழக அரசின் 'ஔவை' விருதையும், தூர்தர்ஷனின்
'பொதிகை' விருதையும் பெற்றவர். முடிவுரை: இந்திய சமுதாயத்தில் பல
பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு சாதித்துள்ளனர் என்பதற்கு
இவர்களே எடுத்துக்காட்டுகளாவர் (அல்லது) ஆ. முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப்
போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின்
மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர்
பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. |
8 |
45 |
அ) முன்னுரை: ”எங்களுக்கு நிலாச்சோறு சாப்பிடவும் தெரியும் நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும் தெரியும்” தமிழர்
அறிவியலை நான்காம் தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள்
இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது
தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல்
ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற
கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது. தமிழன் அறிவியலின் முன்னோடி: தமிழர் பழங்காலத்தில் தங்கள்
வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன.
பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால
இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று. “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" எனத்தொடங்கும் பரிபாடலில்
புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய
அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக்
கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர்
தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: ”கைகளை நீட்டிப்பார் ஆகாயம் உன்கைகளில் முயற்சிகளைச்
செய்துபார் ஆகாயம் உன் காலடியில்” விண்வெளிக்குப்
பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995 ஆம் ஆண்டு நாசா
விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி
ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த
விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது கடமை: ”அறிவியல் எனும்
வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் கரிகாலன் தன் பெருமையெல்லம் கணினியுள்ளே பொருத்துங்கள்” - வைரமுத்து அனைத்துக் கோள்களையும்
இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும்
ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத்
தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த
உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப்
பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின்
முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற
பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம்
முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப்
படைக்க வேண்டும். ஆ) v அனைவருக்கும்
வணக்கம். v நாட்டு
நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன். v சேவை
மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி. v மாணவர்களின்
உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும். v சேவை
மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும்,
பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள். |
8 |