மூன்றாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2024
மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 மார்ச் , மதுரை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ. இலா |
1 |
2. |
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
3. |
ஆ. புகார் |
1 |
4. |
ஈ. கல்வி |
1 |
5. |
இ.
சருகும்,சண்டும் |
1 |
6. |
அ.
அருமை+துணை |
1 |
7. |
ஈ.
கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை? |
1 |
8. |
ஆ. ஞாயிறு மறையும் நேரம் |
1 |
9. |
இ. உழவு ,
ஏர், மண், மாடு |
1 |
10. |
அ. அகவற்பா |
1 |
11. |
ஆ.
ஜெயகாந்தன் |
1 |
12. |
ஈ.
பெருமாள் திருமொழி |
1 |
13. |
அ.
குலசேகராழ்வார் |
1 |
14. |
அ.
தீராத |
1 |
15. |
இ.
வாளால் , மாளாத |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
தம்பி, அழாதே! அம்மா இப்போது வந்து விடுவார், வரும்போது
தின்பண்டங்கள் வாங்கி வருவார் |
2 |
18 |
பெரியாரைத் துணையாகக் கொள்ளுதல் |
2 |
19 |
அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும்
நீதின்மன்றம்.
|
2 |
20 |
வாருங்கள்,நலமா? , நீர் அருந்துங்கள். |
2 |
21 |
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
அ. நம்பிக்கை ஆ. சின்னம் |
2 |
23 |
ü சொட்டு – முதனிலை தொழிற்பெயர் ü வழிபாடு – விகுதிபெற்ற தொழிற்பெயர் ü கேடு – முதனிலை திரிந்த தொழிற்பெயர் ü பாடுதல் – விகுதிபெற்ற தொழிற்பெயர் |
2 |
24 |
பொறித்த- பொறி + த் + த் +அ பொறி - பகுதி த் – சந்தி த் - இறந்தகால இடைநிலை அ - பெயரெச்சவிகுதி |
2 |
25 |
4 வகை – வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
2 |
26 |
அ. மிஞ்சினால் அமுதமும்
நஞ்சு ஆ. பண்டம் குப்பையிலே |
2 |
27 |
அகவற்பா ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர்
மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற
தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில்
முடியும்
|
2 |
28 |
அ. காலவழுவமைதி ஆ.வினா தவறு (வாடா
செல்லம் (அ) மகன் என இடம்பெற்றிருக்க வேண்டும்) (பால் வழுவமைதி)
|
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன்.
ஆ) கன்று- வாழைக்கன்று
வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை
அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ்
அழகானது. |
3 |
30 |
அ)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்விற்கான பண்புநலன்களை உருவாக்குகின்றன. ஆ) இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் , அறம் செய்ய வேண்டும்
என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும்
பொருந்தக்கூடியது. ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே |
3 |
31 |
அ.
புலி ஆட்டம் ஆ. புலியைப் போன்று நடந்தும் பதுங்கியும் பாய்ந்தும் எம்பிக்குதித்தும்
நாக்கால் வருடியும் பற்கள் தெரிய வாயைப்பிளந்தும் உறுமியும் பல்வேறு அடவுகளை
வெளிப்படுத்து கின்றனர்.
இ.
புலி
ஆட்டம் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட
“சித்தாளு” கவிதையின் வரிகள் இவை பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள்
செங்கற்களுக்குத் தெரியாது விளக்கம்: கற்களைச்
சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல்
உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது. |
3 |
|
33 |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆகியவையும் ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை ஆடுக. |
3 |
|
34 |
அ. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை
அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும்
ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும்
கல்வியென்றே போற்று
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. |
||||||||||||||||||||||||||
35 |
மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப் பண்புத்தொகை பூங்கொடி-
உருபும் பயனும் உடன் தொக்க தொகை ஆடுமாடு -உம்மைத்தொகை |
3 |
||||||||||||||||||||||||
36 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது
தற்குறிப்பேற்ற அணி. சான்று: “ போருழந் தெடுத்த ஆரெயில்
நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில்
அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை ”மதுரை நகருக்குள் வரவேண்டாம் ”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை
ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
38 |
அ)
விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது (அல்லது) ஆ) ü குலேச
பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச
பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
5 |
||||||||||||||||||
39 |
அ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.
ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||||||||||
40 |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி! காற்றைப்
பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து நடக்க
வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! |
5 |
||||||||||||||||||
41 |
மேல்நிலை
வகுப்பு – சேர்க்கை விண்ணப்பப் படிவம்
சேர்க்கை
எண்:
1234 நாள்: 10-03-2024 வகுப்பும் பிரிவும்: பதினொன்றாம்
வகுப்பு/ ஆ 1. மாணவரின் பெயர் : ரா. குணசேகரன் 2. பிறந்த நாள் : 05-06-2008 3. தேசிய இனம் : இந்தியன் 4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : ராஜாமணி 5. வீட்டு முகவரி : புது தெரு, தஞ்சாவூர் 6. இறுதியாகப் படித்த வகுப்பு : பத்தாம் வகுப்பு 7. பயின்ற மொழி : தமிழ் 8. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி : அரசு மேனிலைப் பள்ளி, தஞ்சாவூர் 9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
9. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம் 10. தாய்மொழி : தமிழ் 11. சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று
மொழியும் : அறிவியல் பிரிவு/தமிழ் ரா.
குணசேகரன் மாணவர்
கையெழுத்து
|
5 |
||||||||||||||||||
42 |
அ)
ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள்
காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென
உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். . (அல்லது) ஆ) முன்னுரை: ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து
வருகின்றன. நிகழ்கலையின் வடிவங்கள்: பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும். இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல்
பாடல்களோடு நடைபெறும். சிறப்பும், பழைமையும் வாழ்வியல் நிகழ்வில்
பிரிக்க முடியாத, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை
மூலம் அறிய முடிகிறது. பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற
இக்கலைகள் எல்லாம் நம்முன்னோர் காலத்தில் இருந்த பழமை வாய்ந்த கலைகளாகும். குறைந்து வருவதற்கான காரணங்கள்: நாகரிகத்தின் காரணமாகவும்,
கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், திரைத்துறை வளர்ச்சியினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன. வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன நம் இல்லங்களில் நடைபெறும்
விழாக்களில் நல்ல வாழ்வியல் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும்,
கலைஞரையும் பாராட்டுவோம். முடிவுரை: நாமும் நிகழ்கலைகளைக் கற்று,
கலைகளை அழியாமல் காப்போம். |
8 |
44 |
அ. முன்னுரை:-
இலக்கியங்களில் நிலவிய
அறிவியல் கோட்டுபாடுகளைும் நம்பிக்கைகளையும் அறியும் பொருட்டு நானும், எம் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரோடு
ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டோம். பேரண்டம்:- பேரண்டப் பெருவெடிப்பு,
கருந்துளைகள் பற்றியதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் முக்கியமானவை.
இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உண்டானதே என்பதற்கான சான்றுகளைக் கணிதவியல்
அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். விண்மீன்கள்:- ஒரு விண்மீனின் ஆயுள் கால
முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருக்கத்
தொடங்குகிறது. விண்மீன் சுருங்கச் சுருங்க அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே
சென்று அளவற்றதாகிறது என் விளக்கினார். கதிர்வீச்சும் துகளும்:- “சில நேரங்களில் உண்மையானது, புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைகிறது. அப்படி ஓர் உண்மைதான்
கருந்துளைகள் பற்றியதும் என்பதை அறிந்து கொண்டோம். திரும்புதல்:- விண்வெளி ஓடம் பூமிக்கு
திரும்பிக் கொண்டிருந்தபோது பல வடிவிலான விண்கற்கள் மற்றும் தொலைவில் தூசுகள்
போன்ற பால்வீதிகளையும் கண்டு அதனைப் பற்றிய சில கருத்துகளைப் பேசிக் கொண்டே
பூமியை வந்தடைந்தோம். எங்களை வரவேற்க பலரும் கூடி வந்திருந்தனர். முடிவுரை:- விண்வெளிப் பயணம் மேற்கொண்ட
எங்களை வரவேற்றுப் பாராட்டி, வாழ்த்துக்களைத்
தெரிவித்தனர். இந்நிகழ்வுகள் அனைத்தும் எம் வாழ்வில் மறக்க முடியாதவையாகவே
இருக்கின்றன. (அல்லது) ஆ. முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம்
நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ) முன்னுரை: ”உள்ளம் கொள்ளை போனதே மக்கள் நிறைந்த பொடுட்காட்சியில்” குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக்
கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம்
தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ”அழகு நிறைந்த பொருட்காட்சி அதன் அரங்குகளே அதற்கு சாட்சி” பொருட்காட்சியின்
தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு
குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை
மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின் அமைப்பு
கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: ”மெல்ல மெல்ல இருண்டதே! பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே!” பொருட்காட்சியில்
விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள்,
சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள்,
குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட கலைகள்: ”சுற்றியது இராட்டினங்கள்
மட்டுமல்ல அதனோடு சேர்ந்து எங்கள்
மனங்களும்தான்” பொருட்காட்சியின் உள்ளே
இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில்
ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை
மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக
இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனம் கவரும் வகையில் பல விளையாட்டு அரங்குகளும்
அமைக்கப்பட்டிருந்தன. பேச்சரங்கம்: இலக்கிய விரும்பிகளுக்கு
விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த
மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர்.
நாலும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு
விட்டு வந்தோம். அரசின் நலத்திட்டங்கள்: பொருட்காட்சிக்கு
முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை
வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது
பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும்
விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர். முடிவுரை: இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில்
வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில்
வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில்
ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக
இந்நிகழ்வு அமைந்தது. ஆ) தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர் முன்னுரை: ”வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி! மக்கள்
மனதில் நிலையாய் நிற்பவர் யாரோ?” படிப்பால் உயர்ந்தோர்,
உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு
பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில்
தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா? பிறப்பும்
இளமையும்: ”விருதுப்பட்டிக்கு இவரை விட பெரிய விருது தேவையா?” விருதுப்பட்டி
என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15
-7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல்
திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார்.
இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை
நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில்
ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார். நாட்டுப்பற்றும்
மொழிப்பற்றும்: சுதந்திரப்போராட்டக்
கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர
ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள்
பிரித்தபோது, பெரும் பங்காற்றினார்.
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார். தூய்மையும்
எளிமையும்: ”எளிமையின் இலக்கணம் – இவர் மனதில் கொண்டது
பெருங்குணம்” பள்ளி விழா ஒன்றில் கலந்து
கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத்
தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த
பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று
ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர
அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக திகழ்ந்தவர் காமராஜர், மக்கள் பணியே
மகத்தான பணி: 1954 இல்முதல்வராகப்
பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள்
அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில்
பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18
மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில்
விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப்
படிப்பார். முடிவுரை: ”இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவன்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” 'கல்விக் கண் திறந்த
காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது
"ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை
தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய
ஒப்பற்ற தலைவர் இவரே |
8 |