12. சிக்கனமும் சிறுசேமிப்பும்
பொருளடக்கம் |
v முன்னுரை v வருவாய்க்கும் தேவைக்கும்
ஏற்ப செலவு v சிக்கனம் கஞ்சத்தனம் அன்று v சேமிப்பதால் ஏற்படும்
நன்மைகள் v சேமிப்புக்கு ஏற்ற
நிறுவனங்கள் v முடிவுரை |
முன்னுரை
’சிறுக கட்டி பெருக வாழ்’ என்னும் தொடரும், ‘ சிறுதுளி பெருவெள்ளம்’ என்னும் தொடரும் சிக்கன வாழ்வின் இன்றியமையாமையை உணர்த்துவன. அவ்வகையில் சிக்கனத்தோடு
செலவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் பொருளைச் சேமிப்பதன் அவசியம் குறித்தும்
இக்கட்டுரையில் காண்போம்.
வருவாய்க்கும் தேவைக்கும் ஏற்ப செலவு
நாம் நம் வருவாய்க்கு ஏற்ப
செலவு செய்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் புலையைப் பார்த்துப்
பூனை சூடு போட்டுக்கொண்டதைப் போல் செல்வந்தர்களைப் பார்த்து நாம் நம் வருவாயை மறந்து
தேவைக்கு அதிகமாகச் செலவு செய்தல் கூடாது. இதைத்தான்
’ முன் பெருகளின் பின் சிறுகாமை நன்று’ என்று தமிழிலக்கியம் கூறுகிறது.
சிக்கனம் கஞ்சத்தனம் அன்று
நம் தேவைக்கு மட்டும் செலவு
செய்வது சிக்கனம் ஆகும். நம் தேவைக்குக்கூட செலவு செய்யாதது கஞ்சத்தனம்
ஆகும். எனவே, அத்தியாவசிய செலவான கல்வி,
மருத்துவம், உணவு முதலியவற்றிற்குச் செய்யும் செலவுகள்
வீண்செலவுகளாகக் கருதுதல் கூடாது.
சேமிப்புக்கு ஏற்ற நிறுவனங்கள்
நாம் ஈட்டும் பணத்தைத் தினியார்
நிறுவனங்களில் சேமித்து ஏமாறாமல் அரசுடைமை நிறுவனங்களான வங்கிகள், அஞ்சல் அலுவலகம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம்,
கூட்டுறவு வங்கி முதலியவற்றில் சேமித்தால் நம் பணத்திற்குப் பாதுகாப்பு கிடைப்பதோடு சேமிப்பாகவும்
அமைந்து அவசரத்திற்கு உதவும்.
சேமிப்பதால் ஏற்படும் நன்மைகள்
’ சிறுதுளி பெருவெள்ளம்’
என்பது போல நாம் நம் தேவைக்குச் செலவு செய்து எஞ்சியிருக்கும் பணத்தைச்
சிறுக சிறுக சேமித்தால் பின்னாளில் அது நமக்கு மொத்தமாகக் கிடைக்கும். அவற்றைக் கொண்டு கல்வி மேற்படிப்பு, வீடு கட்டுதல்,
மனைவாங்குதல் முதலான செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முடிவுரை
’ பணம் பத்தும் செய்யும்’
என்னும் பழமொழியும்,
’பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற குறளும் பொருளின் தேவையை நமக்குச்
சுட்டுகின்றன. அனைத்தையும் செய்யக்கூடிய பொருளை நல்வழியில் ஈட்டுவதோடு அதை சிக்கனமாகப் பயன்படுத்தியும்
சேமித்தும் பயனடைவோம்.
பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்...