7 TH STD TAMIL QUESTION ANSWER TERM-1 UNIT-3

 


7.ஆம் வகுப்பு-தமிழ்-முதல் பருவம்

வினா விடைகள்

இயல்-3 புலி தங்கிய குகை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 'யாண்டு' என்ற சொல்லின் பொருள்

அ) எனது ஆ) எங்கு இ) எவ்வளவு ஈ) எது

2. 'யாண்டுளனோ?' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) யாண்டு + உளனோ?   ஆ) யாண் + உளனோ?

இ) யா + உளனோ?     ஈ) யாண்டு + உனோ?

3. 'கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

அ) கல்லளை  ஆ) கல்அளை  இ) கல்லளை  ஈ) கல்லுளை

குறு வினா

1. தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?

விடை:தம் வயிற்றுக்குத் தாய் 'புலி தங்கிய குகையை உவமையாகக் கூறுகிறார்.

சிறு வினா

1. தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

விடை:

ü  சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு எதுவும் தெரியாதவள் போல நீ 'உன் மகன் எங்கே?' என்று என்னைக் கேட்கின்றாய்.

ü  அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் 'புலி தங்கிய குகை' போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.

ü  அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.

சிந்தனை வினா

1. தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?

விடை:

ü  புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது. அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.

ü  புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.

ü  அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.

கற்பவை கற்றபின்

1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.

1. காவற்பெண்டு 2. அள்ளூர் நன்முல்லையார்  3. ஒக்கூர் மாசாத்தியார்

4. ஆதி மந்தியார்  5. . குறமகள் இளவெயினி  6. காக்கைப் பாடினியார்

இயல்-3 பாஞ்சை வளம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஊர்வலத்தின் முன்னால் ----அசைந்து வந்தது.

அ) தோரணம்  ஆ) வானரம் இ) வாரணம் ஈ) சந்தனம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் -----நாயை விரட்டிடும்.

அ) முயல்  ஆ) நரி  இ) பரி  ஈ) புலி

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது

அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு  ஆ) படுக்கையறை உள்ள வீடு

இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு   ஈ) மாடிவீடு

4. 'பூட்டுங்கதவுகள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பூட்டு + கதவுகள்    ஆ) பூட்டும் + கதவுகள்

இ) பூட்டின் + கதவுகள்   ஈ) பூட்டிய + கதவுகள்

5. 'தோரணமேடை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தோரணம் + மேடை  ஆ) தோரண + மேடை

இ) தோரணம் + ஒடை    ஈ) தோரணம் + ஓடை

6. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) வாசல்அவங்காரம் ஆ) வாசலங்காரம் இ) வாசலலங்காரம் ஈ) வாசலிங்காரம்

பொருத்துக.

பொக்கிஷம் - செல்வம்

சாஸ்தி - மிகுதி

விஸ்தாரம் - பெரும்பரப்பு

சிங்காரம் - அழகு

குறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

விடை:  பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.

ü  அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

விடை: பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

சிறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

விடை:

Ø  பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.

Ø  வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.

Ø  வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.

விடை: வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும்  வேட்டை நாயை எதிர்த்து விரட்டும். பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

சிந்தனை வினா

1. நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?

விடை:

Ø  மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர். அஞ்சா நெஞ்சினர்.

Ø  ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர்.

Ø  ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும்

Ø  நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

இயல்-3 தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முத்துராமலிங்கத்தேவர் முதன் முதலில் உரையாற்றிய இடம்

அ) தூத்துக்குடி   ஆ) காரைக்குடி   இ) சாயல்குடி  ஈ) மன்னார்குடி

2. முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர்

அ) இராஜாஜி  ஆ) நேதாஜி  இ) காந்திஜி  ஈ) நேருஜி

3. தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர்

அ) இராஜாஜி   ஆ) பெரியார்  இ) திரு.வி.க  ஈ) நேதாஜி

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1.'காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு' என்று அழைக்கப்படும் விலங்கு புலி

2. யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.  - 

3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் அடர்ந்த முடிகள்

குறு வினா

1. முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

விடை:  உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி. என்று முத்துராமலிங்கத்தேவரைப் பெரியார் பாராட்டியுள்ளார்.

2. முத்துராமலிங்கத்தேவரின் பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படக் காரணம் யாது?

விடை:

ü  முத்துராமலிங்கத்தேவர், ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்படும்  வகையில் வீர உரையாற்றினார்.

ü  அவரது பேச்சைக் கேட்டு மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறுகொண்டு எழுந்தனர்.

ü  மேலும், வாய்ப்பூட்டுச் சட்டம் முலம் மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று அவருக்குத் தடைவிதித்தது.

3 . முத்துராமலிங்கர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.

விடை:  முத்துராமலிங்கத்தேவர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார். சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகிய பலதுறை ஆற்றல் உடையவராக விளங்கினார்.

சிறு வினா

விடை:

1. நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.

விடை:

ü  நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார். அவரைத் தம் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார்.

ü  நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் முத்துராமலிங்கத்தேவரின் முயற்சியால் ஏராளமான தமிழர்கள் இணைந்தனர்.

ü  விடுதலைக்குப் பின்னர் நேதாஜி என்ற பெயரில் வார இதழ் நடத்தினார்

2. தொழிலாளர் நலனுக்காக முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?

விடை:

ü  1938 காலகட்டத்தில் மதுரையில் 23 தொழிலாளர் சங்கங்களின் தலைவராகத் தேவர் திகழ்ந்தார்.

ü  மதுரையில் இருந்த நூற்பாலை ஒன்றில் வேலை செய்த தொழிலாளர்களின் உரிமைக்காகத் தோழர் ப.ஜீவானந்தத்துடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.

ü  அதற்காக ஏழு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

சிந்தனை வினா

சிறந்த தலைவருக்குரிய பண்புகள்எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?

விடை:

ü  உரிமைக்காகப் போராடுதல்

ü  பொதுநல வாழ்வு

ü  சாதி, மத, இன,மொழி ஆகியன பாராமை

ü  பிறர்நிலையில் தன்னை வைத்துப்பார்த்தல்

ü  நாட்டுப்பற்று

இயல்-3 கப்பலோட்டிய தமிழர்

1. வ.உ.சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக. முன்னுரை

   கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியவர் வ.உ.சிதம்பரனார்.

சுதேசக் கப்பல்

  ஆங்கிலேயர் கப்பல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரையாரைத் தலைவராகக் கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார்.இக்கப்பல் முதன் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறை

   சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரது நண்பர்களையும்  சிறையில் அடைத்தது.

வ.உ.சிதம்பரனாரின் தியாகம்

   வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர்ச் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார்.  சிறையில் செக்கிழுத்தார்.சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார்.செந்தமிழும் கன்னித் தமிழும் கண்ணீரைப் போக்கியது.

தமிழ்ப்பற்று

   வ.உ.சிதம்பரனார் சிரையிலும்  தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை 'மனம் போல் வாழ்வு' என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார்..

முடிவுரை

   "பாயக் காண்பது சுதந்திர வெள்ளம்

    பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்"

          என்று நாம் பாடும் நாள் எந்நாளோஎன்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார்.

இயல்-3 வழக்கு,போலி

பொருத்துக.

1.     பந்தர் – கடைப்போலி

2.    மைஞ்சு – முதற்போலி

3.    அஞ்சு – முற்றுப்போலி

4.    அரையர் - இடைப்போலி

குறு வினா

1. வழக்கு என்றால் என்ன?

விடை:   முன்னோர்கள் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினரோ , அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.

2. தகுதி வழக்கு வகைகள் யாவை?

விடை:  தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை:

 

1.     இடக்கரடக்கல்

2.    மங்கலம்

3.    குழூஉக்குறி

 

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

விடை:

இத்தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்: நஞ்சு

சரியான சொல் : நைந்து.

கற்பவை கற்றபின்

மூவகைப்போலிகளிலும் எந்தெந்த எழுத்துகள் எந்தெந்த எழுத்துகளாக மாறுகின்றன என்பதை அறிந்து எழுதுக.

விடை:

முதற்போலி

ü  பசல் – பைசல்  (ப-பை)

ü  மஞ்சு – மைஞ்சு (ம-மை)

ü  மயல் – மையல் (ம-மை)

இடைப்போலி

ü  அமச்சு – அமைச்சு (ம-மை)

ü  இலஞ்சி – இலைஞ்சி (ல-லை)

ü  அரயர் – அரையர் ( ர –ரை)

கடைப்போலி

ü  அகம் – அகன் (ம்-ன்)

ü  நிலம் – நிலன் (ம்-ன்)

ü  பந்தல் – பந்தர் (ல்-ர்)

மொழியை ஆள்வோம்

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

2. பொதுமக்கள் அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக் கொடி பறந்தது.

4. திருக்குறளை எழுதியவர் யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

எழுவாய்:

   வீரர்கள், பொதுமக்கள், பாண்டியனுடைய,  திருக்குறளை

பயனிலை:

    காத்தனர், எரித்தனர், பறந்தது, யார்?,

செயப்படுபொருள்:

   நாட்டைக் , அந்நியத் துணிகளைத், கொற்கைத் துறைமுகத்திலே, எழுதியவர்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

விடை:

1. கண்ணன் பாடம் படித்தான்.  2. மேரி ஓவியம் வரைந்தாள்.

3. நான் கவிதை எழுதினேன்.  4. விதை விருட்சமாக வளர்ந்தது.

5. ஆசிரியர் செய்யுளைக் கற்பித்தார்.

 கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

 நான் விரும்பும் தலைவர் காமராசர்

முன்னுரை: 

      கர்மவீரர், கறுப்பு காந்தி என்று அழைக்கப்படும் காமராசர் மிக உயர்ந்த தமிழகத்துக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். அவரால் ஏழைகள் கல்விக்கண் திறந்தனர்.பல தலைவர்களை உருவாக்கியதால் பெருந்தலைவர் என்றழைக்கப்பெற்ற காமராசரை அறிவது மாணவர் கடமைகளுள் ஒன்றாகும். 

இளமைக்காலம்: 

      காமராசர் விருதுநகரில் 15.07.1903 ஆம் ஆண்டு குமாரசாமிக்கும் சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.அவரது இயற்பெயர் காமாட்சி என்பதாகும். தனது பள்ளிப் படிப்பைசத்ரிய வித்யாசாலா பள்ளியில் தொடங்கினார். வறுமை காரணமாக ஆறாம் வகுப்பு வரையே கல்வியைக் கற்க முடிந்தது. 

      தந்தை இளமையிலேயே மறைந்ததால் தாய்மாமன் வீட்டிலேயே வளர்ந்தார். அங்கிருக்கும்போது தேசத் தலைவர்களின் பேச்சால் கவரப்பட்டு அரசியலிலும், சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.  பின்னர் காங்கிரசில் இணைந்தார் 1954 ஆம் ஆண்டு தமிழக முதல்வரானார் 

கல்விப்பணி: 

     பள்ளிகளில் ஏற்றத் தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத்திட்டத்தை அறிமுகம் செய்தார்  மாணவர்கள் உயர்கல்வி பெறப் பல கல்லூரிகளைப் புதிதாகத் தொடங்கினார் 

நிறைவேற்றிய பிற திட்டங்கள்:

         காமராசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார். மாணவர்கள்பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். 

          ஒன்பது நீர்ப்பாசனத்திட்டங்களை நிறைவேற்றினார்.கிண்டி அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழிற்சாலைகளை அமைத்தார்.நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலைகளை நிறுவினார்.

முடிவுரை:

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

தெய்வத்துள் வைக்கப் படும்"

               என்ற குறளுக்கேற்ப தனது பன்னிரண்டாம் வயது முதல் 02.10.1975 ஆம் ஆண்டு மறையும் வரை உண்மையாய் உழைத்தார். தனக்கென எதையும் சேர்க்காமல் மறைந்த காமராசரைப் போற்றுவோம்; நற்பணி ஆற்றுவோம்.

மொழியோடு விளையாடு

இடைச்சொல் 'கு' சேர்த்து எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் வீடு+கு+சென்றான்.

1. மாடு புல் கொடுத்தார்  - மாட்டுக்குப் புல் கொடுத்தார்.

2. பாட்டு பொருள் எழுது - பாட்டுக்குப் பொருள் எழுது.

3. செடி பாய்ந்த நீர் - செடிக்குப் பாய்ந்த நீர்

4. முல்லை தேர் தந்தான் பாரி - முல்லைக்குத் தேர் தந்தான் பாரி.

5. சுவர் சாந்து பூசினாள்  -  சுவருக்குச் சாந்து பூசினாள்.

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை எழுதுக.

1.     கண் கண்ணழகு கண்ணுண்டு

2.    மண் மண்ணழகு மண்ணுண்டு

3.    விண் விண்ணழகு விண்ணுண்டு

4.    பண் பண்ணழகு - பண்ணுண்டு

அகம் என முடியும் சொற்களை எழுதுக.

1. நூலகம்   2. குறளகம்   3. நகலகம்  

4. அச்சகம்  5. துறைமுகம்   6. தமிழகம்

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் பால்களைக் கொண்டது.

2. எனது வயது கக

3. நான் படிக்கும் வகுப்பு

4. தமிழ் இலக்கணம் ரு வகைப்படும்.

5. திருக்குறளில் ௩௩ அதிகாரங்கள் உள்ளன.

6. இந்தியா ககூசஎ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

1. மூதறிஞர்   - திருப்பூர் குமரன்

2. வீரமங்கை   - வேலுநாச்சியர்

3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் - கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்வன்  - சின்னமலை

5. கொடிகாத்தவர்  - திருப்பூர் குமரன்

6. எளிமையின் இலக்கணம் - கக்கன்

7. தில்லையடியின் பெருமை  - வள்ளியம்மை

8. கப்பலோட்டிய தமிழர் - சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன் - பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர் - காமராசர்

11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி  - நாகம்மை

12. மணியாட்சியின் தியாகி - வாஞ்சி நாதன்

கலைச்சொல் அறிவோம்

1. கதைப்பாடல் -  Ballad

2. துணிவு -  courage

3. தியாகம் - sacrifice

4. அரசியல் மேதை - Political Genius

5. பேச்சாற்றல் -Elocution

6. ஒற்றுமை - Unity

7. முழக்கம்  - Slogan

8. சமத்துவம் -Equality

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை