7..ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 22-07-2024 முதல் 27-07-2024
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
பாடம்: தமிழ்
தலைப்பு: திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)
1.கற்றல் நோக்கங்கள்:
@ நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.
2.கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,விளக்கக் காணொளிகள்,விளக்கப்படம்
3.அறிமுகம்:
திருக்குறளை இயற்றியவர் யார்? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல்:
திருக்குறளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
8.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
நீத்தார் - பொருள் தருக ( LOT)
உலகப்பொதுமறை எது? ஏன்? (MOT)
அணியல்ல மற்றுப் பிற - விளக்குக ( HOT)
9. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
10.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
11.தொடர்பணி:
@ பாடநூலில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதிவரச் செய்தல்
@ 601 - பல்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில்
கலந்துரையாடவும் செய்தல். ஒன்றைப் படித்து முழுமையான பொருண்மையை உணர்ந்து அதன் பயன்பாட்டினைக் கூறுதல்