காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉சென்னை மாவட்டம்
காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 சென்னை மாவட்டம்
9.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
ஆ. ஊரகத் திறனறி
தேர்வு |
1 |
|
அ. ஆராயாமை
, ஐயப்படுதல் |
1 |
|
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
அ. கீழே |
1 |
|
ஆ. அகல் |
1 |
|
இ. மோனை,எதுகை,இயைபு |
1 |
|
இ. சொல்லாடாதே |
1 |
|
ஆ. திருவாரூர்,கரிக்கையூர் |
1 |
|
அ. ச.அகத்தியலிங்கம் |
1 |
|
விடை : ஆ |
1 |
|
அ. மேலும்,கீழும் |
1 |
|
அ. மணம் |
1 |
|
அ. வினையெச்சம் |
1 |
|
ஆ. தமிழ் ஒளி |
1 |
|
ஈ. பட்ட மரம் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
பொருந்திய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
17 |
இடம் : கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர். பொருள்
: விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும்
பழைய மணலை மாற்றிப் புது மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. விளக்கம் : மணிமேகலைக் காப்பியத்தில்
முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க
உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன்
அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும்
மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான். |
2 |
18 |
1.
அலைபேசி 2.
கணிப்பொறி 3.
தொலை நகல் 4.
அட்டை தேய்ப்பி இயந்திரம் 5.
ஆளறி சோதனைக் கருவி |
2 |
19 |
தன்னை இகழ்ந்து பேசுபவரிடம் |
2 |
20 |
ஏரி , குளம், குட்டை,
கண்மாய் |
2 |
21 |
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை
தரும் |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
நானும் ,தம்பியும் சேர்ந்து துடுப்பாட்ட்த்தில்
100 ஓட்டங்கள் சேர்த்தோம் |
2 |
23 |
பரப்பு+மின்
பரப்பு- பகுதி , மின் -
முன்னிலைப்பன்மை விகுதி |
2 |
24 |
அ.
ஏவுகணை ஆ. நடுகல் |
2 |
25 |
3 வகை – தோன்றல் ,திரிதல், கெடுதல் |
2 |
26 |
வீணையோடு வந்தாள் – செய்தித் தொடர் கிளியே பேசு – கட்டளைத் தொடர். |
2 |
27 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
28 |
தன்வினை : வினையின்
பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா: பந்து உருண்டது. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
ü நடுவண் அரசும் மாநில
அரசும் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஆண்டுதோறும் பல
போட்டித் தேர்வுகள் நடத்துகின்றன. அவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையத்தின் வழி
விண்ணப்பிக்கலாம். ü பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம்
வகுப்பும் முடிந்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய
வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையத்தின் வழியாகச்
செய்யப்பட்டு வருகிறது. ü பள்ளிக்கல்வி முடித்த
மாணவர்கள் கல்லூரிகளுக்கு இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், கல்லூரிக் கட்டணம்
ஆகியவற்றையும் இணையம் வழியாகவே செலுத்த முடியும். |
3 |
30 |
ஏறுதழுவுதல்,
முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும், மருதநிலத்து
வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து
மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே
வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது. |
3 |
31 |
அ.
தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி ஆ.
மெய்ப்பாடுகள், சைகைகள், ஒலிகள், ஒவியங்கள் இ.
சைகையோடு பொருள் உணர்த்திய ஒலி காலப்போக்கில் தனியாகப் பொருள் உணர்த்தும் வலிமை பெற்று
வளர்ந்தது. |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
v மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு
நாள் வரும் என வருத்தமடைந்தது. v இலைகளும் கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ
என வருத்தமுற்றது. v பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது. |
3 |
|
33 |
அ) எங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா
முன்னேற்பாடுகள்: 1. கோவிலையும்,
தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள் 2.தென்னையோலையால்
தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள் 3.வாழை
மரங்களைக் கட்டிவைப்பார்கள் 4. நாடகம்,
இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்திட ஏற்பாடு செய்வார்கள். ஆ) இந்திர விழா நிகழ்வுகள்: 1. தெருக்களிலும்,
மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை,
பாவை விளக்கு மற்றும் மங்கலப் பொருட்களைமுறையாக
அழகுபடுத்திவைப்பார்கள். 2.பாக்கு
மரம், வாழை மரம், வஞ்சிக் கொடி,
பூங்கொடி, கரும்பு போன்றவற்றை
நட்டுவைத்தனர். 3. வீடுகளின்
முன் தெருத்திண்ணையில் இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத்
தொங்கவிட்டனர். 4. விழாக்கள்
நிறைந்த மூதூரின் தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை
மாற்றிப் புதிய மணலைப் பரப்பினார்கள். 5. சொற்பொழிவு,
பட்டிமண்டபம் நடத்தினார்கள். |
3 |
|
34 |
அ. அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள் கரிகா லன்தன் பெருமை எல்லாம் கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
36 |
தோன்றல் , திரிதல், கெடுதல் |
3 |
37 |
1. துணைவினைகள் பேசுவோரின்
மனநிலை,
செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன. 2. இவை முதல் வினையைச்
சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன. 3. பேச்சு மொழியிலேயே
துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ.
முன்னுரை : நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர்
மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன்
நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர்
கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. களை பறிக்கும்
பருவம்: நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக்
கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்
பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள்
உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும்
கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வானவில் : அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள்
வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை
மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும்.
இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும். பொன்மாலைச் சாரல் : நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச்
செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும்
இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற
காட்சி போல உள்ளது. செழித்து
வளர்ந்துள்ளவை : சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குளிர்ந்த
மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை,
சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம்,
நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள்
நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன. முடிவுரை : காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது
பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது. (அல்லது) ஆ) பொருந்திய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
5 |
39 அ. |
அ. வரவேற்பு மடல் இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி,
தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம் சோறு போடும்" "கந்தையானாலும் கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி" என்னும்
பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக
மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும்
குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து
எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த
பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு
வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி
அலுவலர் அவர்களே! நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம். நன்றி.
இவண், இரா மணிமாறன், (மாணவர் செயலர் (அல்லது) ஆ) தமிழ் இலக்கிய மன்ற விழா இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி,
டஹ்ணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 இராணிப்பேட்டை
மாவட்டம், தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்
இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப்
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி
வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில்
எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் . தலைமை
ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற்
போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார்.
சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான்
சுவைகளை சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில்
இன்பச்சுவை” எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார். நிறைவாக, இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி அன்புச்
செல்வி நன்றியுரை ஆற்றினார். |
5 |
40 |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி! முயற்சியைப் பற்றி எழுதினேன்! அனைவரும் இதன் அருமை அறிந்து
நடக்க வேண்டும்! வாழ்க்கையில் மேலும் உயர
வேண்டும்! |
5 |
41 |
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
42 |
அ.
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ. 1. ஒவ்வொரு மாரும் இயற்கையாக
மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது. 2. சூரியன் மறைவு நிறம் எனக்கு
மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும் 3.
அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள் முழுவதும் ஆசியைத்
தரும். 4. வாழ்வது பட்டும் போதுமானதல்ல ஒவ்வொருவருக்கும் ஒளி, ஆற்றல், விடுதலை, மலரின் மென்மை அவசியம் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ. 1.
தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின்
நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப்
பயன்படுத்துவதும் உண்டு. 2. காளையை அடக்கும் வீரன்
வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை
சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு. 3.அது வன்மத்தையும் போர்
வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது. 4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு
தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. 5.நிகழ்வின்
தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். 6.எவராலும் அடக்கமுடியாத
காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும். 7. அன்பையும் வீரத்தையும்
ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப்
போற்றப்படுவர். ஆ) தமிழிலிருந்தே
"திராவிடர்" - என்னும் சொல்: தமிழிலிருந்தே "திராவிடர்” என்னும் சொல் பிறந்தது என்று மொழியியல்
வல்லுநர்கள் கருதுகின்றனர். "ஹீராஸ் பாதிரியார்" என்பவர் இக்கூற்றை
தமிழ் தமிழா தமிலா டிரமிலா * ட்ரமிலா→ த்ராவிடா → திராவிடா என்று விளக்குகின்றார். பிரான்சிஸ் எல்லிஸ்
கருத்து : தமிழ், தெலுங்கு,
கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆய்ந்து
ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை
"தென்னிந்திய மொழிகள்" என்றும் பெயரிட்டார். ஹோக்கன் - மாக்ஸ்
முல்லர் கருத்து : ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் "தமிழியன்"
என்று பெயரிட்டார். மேலும், இவை ஆரிய மொழிகளினின்று
மாறுபட்டவை என்று கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். திராவிட பொழிகளுக்கான
ஒப்பீட்டு அளவுகோல் தமிழே!: திராவிட மொழிகளுக்கான அடிச் சொல்லை மாற்றமின்றித் தொடர்ந்து வழக்கில்
கொண்டுள்ள பொழிதமிழ் எனவே, திராவிட மொழிகளை ஒன்றுக் கொன்று
ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, தமிழே ஒப்பீட்டு
அளவுகோவாகவும் கருவியாகவும் பயன்படுகிறது. இவற்றின் மூலம் திராவிட மொழிகளின் ஒப்பியல்
ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாய் இருக்கிறது என்பதை அறியலாம். |
8 |
44 அ |
இது, இந்திய
அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இதன் தலைமையகம், இந்தியாவில், பெங்களூருவில் நீயூஸல் சாலையில் 'அன்தரீஷி பவன்' என்ற பெயரில் உள்ளது. இதன் முதன்மை
விண்வெளி நிலையம் சதீஸ் தவன் விண்வெளிமையம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் விண்வெளி ஆய்வு
மையங்களில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளி
தொழில்நுடபத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப்
பயன்படுத்துவதும் ஆகும்.
இந்நிறுவனம், 1975 ஆம் ஆண்டில்
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் 'ஆரியப்படடா' அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது இதற்குக்
காரணமானவர் விக்ரம் சாராபாய் ஆவார் 1980 இல் இந்தியாவில்
கட்டமைக்கப்பெற்ற ஏவுதளம் SLV3 மூலமாக முதல் செயற்கைக்
கோள் 'ரோகினி' ஏவப்பட்டது.
இந்நிறுவனத்தின் சாதனையாக 2008 ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய
இந்தியாவின் முதற்பயணமாக "சந்திராயன்-I" ஏவப்பட்டது.
1957 ஆம் ஆண்டு முதலே ரஷ்யா உட்பட பல நாடுகள் செயற்கைக்
கோள்களை ஏவியிருக்கின்றன. அவற்றை எல்லாம் இராணுவத்துக்கு மட்டுமே
பயன்படுத்தினார்கள். வல்லரசு நாடுகள் அவற்றின் ஆற்றலைக் காண்பிக்கவே, இந்த தொழில் நுடபத்தைப் பயன்படுத்தின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்
நம்நாட்டு அறிவியலாளர் டாக்டர் விக்ரம் சாராபாய் இந்தத் தொழில்நுடபம் மக்களுக்கு
எவ்வாறு பயன்படும் என்றே சிந்தித்தார். (அல்லது) ஆ) முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன்
உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும்
கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே
உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே
இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக
ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும்
முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
45 |
அ) தலைப்பு: இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல்
பாதுகாப்பு) முன்னுரை: நமது
சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது.
மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா?
அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம். விசும்பின்
துளியும் பசும்புல் தலையும்: ”விசும்பின்
துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது" என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது
இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது..
வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில்
பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப்
படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. காற்று மாசு: ”உங்கள்
சுவாசத்தை நிறுத்தும் முன் காற்று
மாசுபாட்டை நிறுத்துங்கள்” மக்கள் தொகைப் பெருக்கம்,
மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு,
வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள்,
பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும்
நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி,
காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம். பசுமையைக்
காப்போம்: ”மரம்
தான் மரம் தான் எல்லாம் மரம்தான் மறந்தான்
மறந்தான் மனிதன் மறந்தான்” சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று
இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி
பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது
ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில்
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும். மரமும்
மழையும் வரமும் உயிரும்: 'விண்ணின்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி' ஒவ்வொரு மரமும் பல்லாயிரம்
உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர்
அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர்
நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய
வழிமுறைகளாகும். முடிவுரை: இயற்கைவளங்கள் தொடர்ந்து
மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என
அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா
பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி.
மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம். (அல்லது) ஆ. பொருந்திய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
8 |