10 TH STD TAMIL IMPORTANT QUESTIONS

10. ஆம் வகுப்பு – தமிழ்

2 மதிப்பெண் வினாக்கள்



1) மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில் இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை

2) தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக

3) வசன கவிதை – குறிப்பு வரைக

4) பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் ஊஊரும் ஆறுதல் சொற்களை எழுதுக

5) விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.                                                                6) 'இறடிப் பொம்மல் பெறுகுவிர்' – இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.                                                                                                                                                    

  7) வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக  எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள். 

8) செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.                                               

9)” கலைஞர் , பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்" - பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

10) உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச்  சொல்கிறார்கள்?

11) 'கரப்பிடும்பை இல்லார்' - இத்தொடரின் பொருள் கூறுக.

12)  வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

13) பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

14). பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்  யாவர்?

15) மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

16) வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம்  கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

17) குறிப்பு வரைக:- அவையம்                                    

18)  காலக்கழுதை கட்டெறும்பானதும்  கவிஞர் செய்வது யாது?

19)  நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டுஇத்தொடரை இரு தொடர்களாக்குக.

20). விடைக்கேற்ற வினாத்தொடர் அமைத்தல் (மாதிரி)

) தமிழ்த்தென்றல் திரு.வி..போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்

) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.

)  இஸ்மத் சன்னியாசி என்னும் பாரசீகச் சொல்லுக்கு தூய துறவி என்பது பொருள்.

) தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது வினையாலணையும் பெயர்.

21. மனப்பாடத் திருக்குறள்   (வினா எண்: 21, கட்டாயவினா)

(இயல் 3)

1. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்  

    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

2.  பல்லார்  பகைகொளலின் பத்தடுத்த  தீமைத்தே

     நல்லார் தொடர்கை விடல்.

3. பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

     கண்ணோட்டம் இல்லாத கண்.

4. அருமை  உடைத்தென் றசாவாமை  வேண்டும்

     பெருமை முயற்சி  தரும்.

5. முயற்சி  திருவினை ஆக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும்.

22) 'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

23) உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

  வடுக்காண் வற்றாகும் கீழ்இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.

24) ' எழுது என்றாள் ' என்பது விரைவு காரணமாக' எழுது எழுது என்றாள் ' என அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?                                                                 25) பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை ?                                                                                                                         26) "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.                                                                                        27) இந்த அறை இருட்டா க இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ ... இருக்கிறதே ! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

28) கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப் பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர். 

29)  புறத்திணை களில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

30)  பொருத்தமான இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்குஅடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.

31) வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

32)  தீவக அணிகளின் வகைகள் யாவை?

33) பகுபத உறுப்பிலக்கணம்

1. பொறித்த - பொறி + த் + த் +அ       2. உரைத்தஉரை + த் + த் +  

3. கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ   4.தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ+து

5.அறியேன் - அறி + ய் + ஆ + ஏன்

1. கலைச்சொல் அறிதல்


1.      Vowel

2.    Consonant

3.    Homograph

4.    Monolingual

5.    Conversation

6.    Discussion

7.    Storm

8.    Land Breeze

9.    Tornado

10.   Sea Breeze

11.   Tempest

12.  Whirlwind

13.  செவ்விலக்கியம்

14.  காப்பிய இலக்கியம்

15.  பக்தி இலக்கியம்

16.  பண்டைய இலக்கியம்

17.  வட்டார இலக்கியம்

18.  நாட்டுப்புற இலக்கியம்

19.  நவீன இலக்கியம்

20.  Nanotechnology

21.  Space Technology

22. Biotechnology

23. Cosmic rays

24. Ultraviolet rays

25. Infrared rays

26. Emblem - சின்னம்

27. Intellectual

28. Thesis

29. Symbolism

30.  PLAY WRIGHT

31.  SCREENPLAY

32. STORYTELLER

33. AESTHETICS

34. Consulate

35. Patent

36. Document

37. Guild

38. Irrigation

39.  Territory

40.  Belief

41.  Philosopher

42. Renaissance

43. Revivalism

44. Humanism

45. Cultural Boundaries

46. Cabinet

47. Cultural va



2. ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-         

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

புதுக்கோட்டை

 

கோயம்புத்தூர்

 

கும்பகோணம்

 

திருச்சிராப்பள்ளி

 

நாகப்பட்டினம்

 

திருநெல்வேலி

 

உதகமண்டலம்

 

புதுச்சேரி

 

மன்னார்குடி

 

மயிலாப்பூர்

 

சைதாப்பேட்டை

 

தஞ்சாவூர்

 

 

3. குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-          குறிப்புஎதிர்மறையான சொற்கள்

மீளாத் துயர்

 

கொடுத்துச் சிவந்த

 

மறைத்துக் காட்டு

 

அருகில் அமர்க

 

பெரியவரின் அமைதி

 

புயலுக்குப் பின்

 

 

                                                    

 

 

 

4. பழமொழியை நிறைவு செய்க:-                                       

1

உப்பில்லாப்

 

2.

ஒரு பானை

 

3

உப்பிட்டவரை

 

4

விருந்தும்

 

5

அளவுக்கு

 

5) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-

       தேணிலே ஊரிய செந்தமிழின்சுவை

            தேரும் சிலப்பதி காறமதை

       ஊனிலே எம்முயிர் உல்லலவும்நிதம்

             ஓதி யுனர்ந்தின் புருவோமே

6. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

சொற்கள் -ஆடு, கல், புல், பழம்விடை:

சொல்

கூட்டப்பெயர்

சொல்

கூட்டப்பெயர்

கல்

 

புல்

 

பழம்

 

ஆடு

 

9. செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டு, தமிழ் எண்ணில் எழுதுக.

செய்யுள் அடி

எண்ணுப்பெயர்

தமிழ் எண்

நாற்றிசையும் செல்லாத நாடில்லை

 

 

எறும்புந்தன் கையால் எண் சாண்

 

 

ஐந்து சால்பு ஊன்றிய தூண்

 

 

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

 

ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி

 

 

11. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-                                                  

1

சிலை - சீலை

 

2.

தொடு - தோடு

 

3

மடு - மாடு

 

4

மலை - மாலை

 

5

வளி - வாளி

 

6

விடு - வீடு

 

7

இயற்கைசெயற்கை

 

8

கொடு - கோடு

 

9

கொள் - கோள்

 

10

சிறு - சீறு

 

11

தான் - தாம்

 

12

விதி - வீதி

 

 

3 மதிப்பெண் வினாக்கள்

1) புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளதுஇதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

2) சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க .

3)  தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள்  நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக

4) “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

5) உரைப்பத்தியைப் படித்து விடையளித்தல்      (பயிற்சிக்காக)

1.    பருப் பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(இ) பெய்த மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

6) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

7) தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

8) "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமைசுட்டும் செய்தியை விளக்குக.

9) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் ?

10) முதல்மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

11) மனப்பாடம்

பெருமாள் திருமொழி

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!

நீ ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.

-குலசேகராழ்வார்

நீதிவெண்பா

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.

-கா..செய்குத்தம்பி பாவலர்

சிலப்பதிகாரம்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்

12.  'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும்.

             -இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

13) 'கண்ணே கண்ணுறங்கு!

     காலையில் நீயெழும்பு!

     மாமழை பெய்கையிலே

     மாம்பூவே கண்ணுறங்கு!

     பாடினேன் தாலாட்டு!

     ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' -இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

14) முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பா வில் அமைந் துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

15) அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

16) ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

5 மதிப்பெண் வினாக்கள்

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.                                                                                2. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.                                                             3. மெய்க்கீர்த்தி பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.                                   4. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.                                                                                                                                                           5. மரம் இயற்கையின் வரம்  என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

6. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

7. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. 

8. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக

    எந்த படம் தரப்பட்டாலும் பின்வரும் கவிதை வரிகளை எழுதலாம். எனவே மாணவர்கள் பிவருவதைப் பிழையின்றி எழுத நன்கு பயிற்சி செய்யவும்.

9. படிவம் நிரப்புதல்

10. நிற்க அதற்குத்தக

8 மதிப்பெண் வினாக்கள்

1. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

2. உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

3. போராட்டக் கலைஞர்பேச்சுக் கலைஞர்நாடகக் கலைஞர்திரைக்கலைஞர்இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக

4. அன்னமய்யா  என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினை கோபல்லபுரத்து மக்கள் கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

5. ’கற்கை நன்றே கற்கை நன்றே

     பிச்சை புகினும் கற்கை நன்றே ’ என்கிறது வெற்றிவேற்கை . மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கை யில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க

6. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.  

7. ‘சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை