சென்னை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024
அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 சென்னை மாவட்டம்
வினாத்தாள்👇👇
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
ஈ. வானத்தையும்
, பேரொலியையும் |
1 |
|
ஆ. சமூகப்பார்வையோடு
கலைப்பணி புரியவே எழுதினார் |
1 |
|
அ. தஞ்சை |
1 |
|
ஆ. கலைஞர்
என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது |
1 |
|
ஆ. இல்லாததைக்
கற்பனை செய்தல் |
1 |
|
ஈ . நெறியோடு
நின்று காவல் காப்பவர் |
1 |
|
ஈ. பாடல்,
கேட்டவர் |
1 |
|
ஆ. அதியன்
, பெருஞ்சாத்தன் |
1 |
|
ஆ. அன்மொழித்தொகை |
1 |
|
இ. மருந்தும்
மூன்று நாள் |
1 |
|
இ. வலிமையை
நிலை நாட்டல் |
1 |
|
ஆ. திருவிளையாடற்
புராணம் |
1 |
|
அ. பரஞ்சோதி
முனிவர் |
1 |
|
இ. ஓங்கு
- நீங்குவம் |
1 |
|
ஈ. கடம்பவனம் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
இல்லை,விருந்தினரை நன்றாக உபசரிக்க வேண்டும் என்ற எண்ணமே தேவை. |
2 |
17 |
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு நான் எழுதுவதற்கு
ஒரு காரணம் உண்டு |
2 |
18 |
சித்தாளுடைய
வாழ்வைக் குறித்துக் கூறுகிறார். |
2 |
19 |
சரியான வினாத்தொடரை
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
20 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
21 |
குன்றேறி
யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை. |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
தஞ் /
சம் - நேர் நேர் - தேமா எளி /
யன் - நிரை நேர் - புளிமா பகைக் /
கு - நிரைபு - பிறப்பு. |
2 |
23 |
கலைஞர் முரசொலி ஏட்டைக்
கையெழுத்து இதழாகத் தொடங்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை வார
இதழாக்கினார். கலைஞர் முரசொலி ஏட்டை
நாளேடாக்கினார் |
2 |
24 |
பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட
பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச்சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட
வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன், - ம.பொ.சி. |
2 |
25 |
கவிஞர்-பெயர்ப்பயனிலை , சென்றார் – வினைப்பயனிலை , யார் - வினாப்பயனிலை |
2 |
26 |
அ.
திரைக்கதை ஆ. நாடக ஆசிரியர் |
2 |
27 |
பதிந்து
- பதி +த்(ந்) + த் +உ பதி
- பகுதி த்
- சந்தி (ந் -ஆனது விகாரம்) த்
- இறந்தகால இடைநிலை உ-வினையெச்ச
விகுதி |
2 |
28 |
அ. குறவர்கள்
மலையில் தேனெடுத்தனர் ஆ. நெய்தல்
பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
அ)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
30 |
ü தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப்
பரவலாக்கினார் ü 2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
31 |
அ. கடவுச்சொல்லும்
கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது ஆ. உரிமையாளரின்
முகத்தை அடையாளம் கண்டு திறப்பது இ. செயற்கை
நுண்ணறிவு |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
|
33 |
ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற
காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் ,
நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக
அமைந்தவரேஅமைச்சராவார். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
நிரல்நிரையணி. சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள்
கொள்வது. |
3 |
||||||||||||||||||||||||
36 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர்
மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற
தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில்
முடியும் |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||
38 அ. |
உரிய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ) விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று
முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல
தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக
வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. |
5 |
39 |
அ) அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின் உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல் முகவரி ஆ) ü அனுப்புநர்
முகவரி
,நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
42
அ. |
உரிய
விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின்
உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும்
மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும்
சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) தமிழ்ச்சொல்
வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். ஆ) ü என்னை மிகவும் கவர்ந்த அறிஞர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆவார். இங்கு அவரே சில நிகழ்வுகளைப்பற்றி
கூறுவதைக் காண்போம் ü வறுமையால் எனது கல்வியை இழந்தேன். இருந்தாலும், கேள்வியறிவால்
ஞானம் பெற்றேன் ü வறுமையிலும் நூல்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வமாய் இருந்தேன் ü தமிழர்களை ஒன்றிணைக்க முயன்றதற்காக ஆங்கிலேய அரசு என்னைச்
சிறையில் அடைத்த்து. ü பல எல்லைப்போராட்டங்களை நடத்தினேன். ü எனது போராட்டத்தால் திருத்தணியும், சென்னையும் தமிழகத்தோடு இணைந்தது |
8 |
44 |
அ. முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை
கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்: கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?”
என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும்
புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற
குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ. போதை இல்லாப் புது
உலகைப் படைப்போம் - கட்டுரை முன்னுரை உலக
நாகரிகம் வளர வளர மனித வாழ்க்கை முறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. நாகரிகம்
வளர்ச்சி பாதையில் செல்கின்ற அதே தருணத்தில் சில தீய பழக்கங்கள் வலிமை பெற்றுச்
செல்கின்றது. அதில் முக்கியமான ஒன்று தான் போதைப் பாவனை. உலகம் முழுவதும் போதைப்
பொருட்களின் பயன்பாடு அதிகரித்து சமூக ஆரோக்கியத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
மது, போதைவஸ்து, சிகரட் பாவனை போன்ற
தீய பழக்கங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயர் வலிமை பெற்றுள்ளமை
வேதனைக்குரியதாகும். போதைப் பொருட்கள் என்பவை உடல், உளப்
பாதிப்புக்களை ஏற்படுத்துவதும், சமூகப் பிரச்சினைகளைத்
தோற்றுவிப்பதுமான போதைக்காக நுகரப்படும் அல்லது உடலினுள் செலுத்தப்படும்
பொருட்கள் போதைப் பொருட்கள் எனப்படும். உதாரணமாக அபின், கஞ்சா, ஹெரோயின், சாராயம்,
சிகரட், பீடி, கசிப்பு,
சுருட்டு போன்றவற்றைக் கூறலாம். போதைப் பொருளும் சமுதாயமும் சமுதாயத்தில்
மாணவர்களும், படித்தவர்களும் நிரம்பி இருக்கிறார்கள்.
இத்தகைய நல்ல சமூகத்துக்குச் சவாலாக இருக்கும் போதைப்பொருள் அந்த சமூகத்தின்
வளர்ச்சிக்கும் சவாலாக உள்ளது. போதைப்பொருளுக்கு அதிக அளவில் இளைஞர்கள்
இரையாவதன் மூலம் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. போதைப் பழக்கம்
சமூகத்தின் சாபக்கேடாக மாறிவருகிறது. போதைப்
பாவனையால் ஏற்படும் சமுதாய பிரச்சனைகள் போதைக்கு அடிமையாகிவிட்டால் சொந்த
வீட்டிலேயே திருடுதல், பொருட்களை எடுத்து அடகு வைப்பது,
பிச்சை எடுப்பது, அசிங்கமாக நடந்துகொள்வது,
பிறரை துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வெளியிடங்களில் அடிதடி,
கொலை, கொள்ளை, தீவிரவாதம்
மற்றும் பாலியல் தொந்தரவுகள் செய்வது போன்ற வன்முறை செயல்களிலும்
ஈடுபடுகின்றனர். போதை என்னும் ஆயுதம் ஒரு தேசத்தை அல்லது ஓர் சமுதாயத்தை அல்லது தனிநபரை திட்டமிட்டு
நசுக்கிவிட ஏவப்படுகின்ற ஆயுதமே போதைப் பொருளாகும். போதை எனும் ஆயுதம்
மனித வாழ்க்கையை மட்டுமல்லாது தனிமனித கௌரவம், அந்தஸ்து, பணம் போன்றவற்றை அழிப்பது மட்டுமல்லாது
உயிரையும் காவு கொள்கின்றது. எனவே இதனை ஒவ்வொரு மனிதர்களும் உணர்ந்து தமது
உள்ளத்தில் நற்சிந்தனைகளை வளர்த்து தீய வழிகளில் செல்லாமலும் போதைப் பாவனை
தொடர்பாக விழிப்புடனும் இருத்தல் வேண்டும். போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் சளி, இருமல்
போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு, உணவுக்குழாயிலும்,
கணையத்திலும், கல்லீரலிலும் பாதிப்பு
ஏற்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற பாரிய நோய்களும் ஏற்படுகின்றது. சரியாக உணவு எடுத்துக்கொள்ள
முடியாமல் போவதால் வயிற்றில் புண், எடை குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, உடல் சோர்வு போன்ற
பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கல்லீரல், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சினைகளும்,
கொலஸ்ட்ரால், நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சினைகளும் உண்டாகிறது. முடிவுரை உலக அளவில் போதைப்
பொருட்களின் தாக்கமும் அதனால் சமூகம் அடையும் பின்னடைவும், சீர்கேடும், சிதைவும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம்.
போதைப் பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்! ஆ. தலைப்பு : உழவெனும் உன்னதம் முன்னுரை: ”ஏர் முனைக்கு நேரிங்கே
எதுவுமே இல்லே” என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம். உழவுத்
தொழிலும் உழவர்களும்: ”நித்தமும் உழவே அவன்
நினைப்பு நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு” உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை
செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர்,
உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது. தமிழர்
வாழ்வில் உழவு ”தமிழனின் உதிரத்தில்
கலந்தது உழவு உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?” பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில்
மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை
மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில்
அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை
முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை
பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர். இலக்கியங்களில்
உழவுத் தொழில்: ”உழவர்கள் உழுத உழவினை நல்லேர்
நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன உழவின்
சிறப்பு: உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும்
காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை
தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்
பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும்
அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார்
உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம். உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம்: உழவர் சேற்றில் கால்
வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம்
வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும். முடிவுரை: 'சுழன்றும் ஏர்பின்னது
உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள்
எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார்
மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம்
அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப்
போற்றுவோம். |
|