வேலூர் மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024
(வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)
அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாள்👇👇
அரையாண்டுப்பொதுத்தேர்வு-2024, வேலூர்
மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஆ. மணி வகை |
1 |
2. |
ஈ. இலா |
1 |
3. |
அ. திருப்பதியும், திருத்தணியும் |
1 |
4. |
ஆ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
5. |
ஈ. அங்கு வறுமை இல்லாததால் |
1 |
6. |
அ. கருணையன் எலிசபெத்துக்காக |
1 |
7. |
ஈ. அறியா வினா, சுட்டு விடை |
1 |
8. |
ஆ. காஞ்சித்திணை |
1 |
9. |
இ. மரபு வழுவமைதி |
1 |
10. |
ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி |
1 |
11. |
ஈ. கால் உடை – காலால் உடைத்தல் |
1 |
12. |
அ. நீதி வெண்பா |
1 |
13. |
ஆ. அருளை , அறிவை |
1 |
14. |
இ. அருமை + துணையாய் |
1 |
15. |
ஆ. கல்வி |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
சரியான
வினாத்தொடரை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
17 |
வாருங்கள்,நலமா?
,நீர் அருந்துங்கள் |
2 |
18 |
அவையம்=மன்றம் அல்லது
சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
19 |
# மருத்துவர்
புண்ணை அறுத்துச் சுடுகிறார் # நோயாளியும்
அதைப்பொருத்துக்கொள்கிறார் # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியம் |
2 |
20 |
இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக்
காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான். |
2 |
21 |
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
வெண்பா – செப்பலோசை , ஆசிரியப்பா – அகவலோசை
, கலிப்பா – தூள்ளலோசை, வஞ்சிப்பா - தூங்கலோசை |
2 |
23 |
|
2 |
24 |
சிறு பூனையும் சீறும் |
2 |
25 |
அ. திரைக்கதை ஆ. நாட்டுப்புற இலக்கியம் |
2 |
26 |
’எதற்காக எழுதுகிறேன்?’ என்று நான் சொன்ன காரணங்களுக்குப் புறம்பாக நடந்தால்
நான்கண்டிக்கப் படவும் திருத்தப்படவும் உட்பட்டிருக்கிறேன். |
2 |
27 |
மூன்று+
பால் – ௩
, ஐந்து + திணை
- ரு |
2 |
28 |
அமர்+த்(ந்)+த்+ஆன் அமர்
– பகுதி, த் – சந்தி
, ந் – விகாரம் , த்
– இறந்தகால இடைநிலை , ஆன் – ஆண்பால் விகுதி |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
#
மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.
# செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட்டுள்ளது. |
3 |
30 |
அ.
583 ஆ. கூத்தராற்றுப்படை இ. மலை
– யானை - உருவகம் |
3 |
31 |
வினாவுக்குப் பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü பழமையான நறுங்கனி ü பாண்டியன் மகள் ü சிறந்த நூல்களை உடைய
மொழி ü பழம்பெருமையும் தனிச்சிறப்பும்
உடைய மொழி |
3 |
|
33 |
வினாவுக்குப்
பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
விடை
8 வகைப்படும். அவை: 1.
சுட்டு
விடை 2.
மறை
விடை 3.
நேர்
விடை 4.
வினா
எதிர் வினாதல் விடை 5.
உற்றது
உரைத்தல் விடை 6.
உறுவது
கூறல் விடை 7.
ஏவல்
விடை 8.
இனமொழி
விடை |
3 |
||||||||||||||||||||||||
36 |
சொல்லையும்,
பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொறுத்துக் கொள்வது |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||
38
அ. |
ü குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குலேச பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குலேச பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி கருணையன் தனது தாயை நல்லடக்கம் செய்தான்: குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப்
பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை
மண் இட்டு மூடி அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும்
தன் கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன் தாயை இழந்து வாடுதல்: இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான். கருணையனின் தவிப்பு: துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன: கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன. |
5 |
||
39 |
அ) அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி
தெரு, சக்தி நகர், சேலம்
– 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001 ஐயா, பொருள்: கட்டுரையை
வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் : 04-03-2021
உறை
மேல் முகவரி: ஆ) வாழ்த்து
மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும்
தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப்
பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது
அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
||
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||
42 அ. |
(
மாதிரி விடை) 1.
கல்வெட்டுகளின் வழி அறியலாகும்
செய்திகளை அனிவருக்கும் கூறுதல். 2.
கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி
எதுவும் கூற, அனுமதிக்காமை. 3.
கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி,
அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல். 4.
கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய
உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். கல்வெட்டு
மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல். ஆ) 1.
If you talk to a man in a language he understand,thats goes to his head. If
you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela விடை : ஒருவரிடம்
அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது
– நெல்சன் மண்டேலா 2.
Language is the road map of a culture. It tells you where its people come
from and where they are going – Rita Mae Brown விடை: மொழி
என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக்
ப்ரெளன் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) முன்னுரை:
பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக்
கலைஞர்: தனது 14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தினார். பேச்சுக்
கலைஞர்: பல தமிழறிஞர்களின் பேச்சைக்
கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். நாடகக்
கலைஞர்: கலைஞர் சீர்திருத்த நாடகங்களை
இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார்.
இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் “ கலைஞர்
” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது. திரைக்கலைஞர்: எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார். இயற்றமிழ்க்
கலைஞர்: கலைஞர் பல சிறுகதைகள்,
புதினங்கள் மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார். முடிவுரை: தமிழின் மெருமிதங்களையும்,
விழுமியங்களையும் மீட்டெடுத்தவர் கலைஞர் கருணாநிதி. ஆ) விருந்தினரை வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு
வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர்
குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன். வாழை இலையில் விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது
தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும்
உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின்
விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து,
அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன்
பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு
பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத்
தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை
ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம்
திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத்
தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது
வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை
சென்று வழியனுப்பி வைத்தேன். |
8 |
44 |
அ.
முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்)
, முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ஆ.
வீரப்பனும், ஆறுமுகமும்(
ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப
நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு
மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45
|
அ.
முன்னுரை: கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன்
எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.
அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன். அறிவிப்பு: நுழைவாயிலின் வழியாக
நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே
நிகழ்த்தப் படுகின்றன? அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட
அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ஓரிடத்தில்
அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின்
எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. சிறு அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள்
மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும்
அமைக்கப்பட்டிருந்தது நிகழ்த்தப்பட்ட
கலைகள்: அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம்,தெருக்கூத்து
உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில்
நிகழ்த்தப்பட்டன. முடிவுரை: .கூட்ட நெரிசல் மிக
அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது.
ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச்
சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு
அமைந்தது. ஆ.
முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்)
, முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
|
|