நாள் : 06-12-2021 முதல் 11-12-2021
மாதம் : டிசம்பர்
வாரம் : டிசம்பர் - முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :1. கம்பராமாயணம்
2. அகப்பொருள் இலக்கணம்
கருபொருள் :
Ø சந்த நயமும்,தொடை நயமும் கொண்ட பாடல்களை மனனமாக பாடுதல், நா நெகிழ்,நா பிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.
Ø தமிழரின் அகப்பொருள் இலக்கணம் அறிதல், இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்.
உட்பொருள் :
Ø கம்பரின் அழகுணர் கற்பனைத் திறனை கம்பராமாயண வழி மூலம் அறிதல்.
Ø அகப்பொருள் இலக்கணம் கூறும் முதற் பொருள்,கரு பொருள், உரி பொருள் பற்றி அறிதல்
அறிமுகம் :
Ø இயற்கை அமைப்பு படங்கள் கொண்டு மாணவர்களுக்கு எழக் கூடிய கற்பனைத் திறனை கூற வைத்து ஆயப்படுத்துதல்.
Ø மக்கள் வாழும் நிலப்பகுதியினைக் குறிக்கும் படங்களைக் காட்டி ஆயத்தப்படுத்துதல்.
கற்றல் விளைவுகள் :
Ø இயற்கையினை போற்றும் திறன் அறிதல்
Ø நிலப்பகுதியினையும், ஆண்டுகளின் கூறுகளையும், நாட்களின் கூறுகளையும் அறிதல்.
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø கம்ப ராமாயண குறிப்புகள் மற்றும் கம்பர் பற்றிய பெருமைகள்
Ø பால காண்டம் – ஆற்றுப்படலம் – சரயு ஆற்றின் தோற்றத்தை வருணித்தல
Ø பால காண்டம் – நாட்டுப்படலம் – இயற்கைக் காட்சியினை கலை நிகழ்வாக காணுதல்
Ø நாட்டின் பெருமையினை மெய்யியல் வாயிலாக அறிதல்.
Ø அயோத்தியா காண்டம் – கங்கை படலம் – இராமனின் அழகை வருணித்தல்
Ø கங்கை காண் படலம் – குகனின் இயலாமையை அழகிய சந்த நயத்துடன் பாடுதல்
Ø யுத்த காண்டம் – கும்ப கருணன் வதை படுவது
Ø அகப்பொருள்
o முதற் பொருள் – நிலம்,பொழுது
o நிலம் – குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
o பொழுது – சிறு பொழுது, பெரும் பொழுது
o பெரும்பொழுது – ஓர் ஆண்டின் ஆறு கூறுகள்
o சிறு பொழுது – ஒரு நாளின் ஆறு கூறுகள்
ஆசிரியர் செயல்பாடு :
Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.
Ø செய்யுளினை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø செய்யுளில் உள்ள கடினச் சொற்களுக்கு பொருள் கூறல்
Ø செய்யுளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø செய்யுளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.
Ø அகப்பொருள் கூறும் முதற் பொருளை அன்றாட வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்.
Ø ஆண்டின் கூறுகளைக்கூறி அவற்றை முதற்பொருளோடு ஒப்பிடல்.
Ø நாளின் கூறுகளைக்கூறி அவற்றை முதற்பொருளோடு ஒப்பிடல்.
கருத்துரு வரைபடம் : கம்பராமாயணம்
அகப்பொருள் இலக்கணம்,
மாணவர் செயல்பாடு :
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø பாடலினை மனனம் செய்யும் திறன் பெறுதல்
Ø பாடலில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.
Ø பாடல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன் பெறுதல்.
Ø இலக்கணத்தின் பொதுவான கூறுகளை அறிதல்
Ø அன்பின் ஐந்திணைகள் பற்றி அறிதல்
Ø பெரும்பொழுதின் கூறுகளை அறிதல்
Ø சிறு பொழுதின் கூறுகளை அறிதல்
Ø கருபொருள் பற்றியவற்றை அட்டவணை வாயிலாக அறிதல்.
வலுவூட்டல் :
Ø பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.
குறைதீர் கற்றல் :
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.
Ø எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்
Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்
Ø அகத்திணையைப் பற்றி அறிதல்
மதிப்பீடு :
Ø கம்பரை ஆதரித்த வள்ளல் _____________
Ø கம்பராமாயணத்தில் உள்ள காண்டகள் ______________
Ø தண்டலை என்னும் செய்யுளில் இடம் பெறும் நயங்களை கூறுக.
Ø அன்பின் ஐந்திணை யாவை?
Ø ஆறு பெரும் பொழுதும் வரும் திணைகள் எவை?
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----