10.ஆம் வகுப்பு -தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு: 10.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: உரைநடை உலகம் - சங்க இலக்கியத்தில் அறம்
கவிதைப்பேழை -காலக்கணிதம்
நாள்: 01-02-2022 முதல் 05-02-22 வரை
பொது நோக்கம்:
@ அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல்
@ கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்படும் கருத்தை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்
சிறப்பு நோக்கம்:
# சங்க இலக்கியங்களில் அறமானது எந்தெந்த வடிவங்களில் எல்லாம் பாடப்பட்டது என்பதை அறிந்து கொள்ளுதல்
# எவ்வெவையெல்லாம் அறங்களாகக் கருதப்பட்டன என்பதையும் உணர்ந்து கொள்ளுதல்
# கவிஞர் கண்ணதாசனைப் பற்றி அறிந்துகொள்ளுதல்
# கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன?அவன் பணி என்ன? என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்ளுதல்.
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø கடையேழு வள்ளல்கள் யார்? என்ற வினாவைக்கேட்டு, அவர்கள் கொடை எனும் அறத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதை விளக்கி,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
Ø கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்றினைப்பாடி பாடத்தினை அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம்,பாடநூல்,சுண்ணக்கட்டி, கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
சங்க இலக்கியத்தில் அறம்:
@ அறத்தில் வணிகநோக்கம் கூடாது.
@ அரசியலிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
@ அறங்கூறும் அவையங்கள் சங்க காலத்திலேயே இருந்துள்ளன
@ போர்,பிறருக்கு உதவுதல்,உண்மை பேசுதல் முதலியவை அனைத்திலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
காலக்கணிதம்:
ü கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா
ü சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தார்.இவரது பெற்றோர் சாத்தப்பன்,விசாலாட்சி
ü கண்ணதாசனின் சேரமான் காதலி நூலுக்காக சாகித்ய அகாதமி பரிசு வழங்கப்பட்டது
ü திரையுலகிலும் இலக்கிய உலகிலும் தனிச்சிறப்புடன் விளங்கியவர் கண்ணதாசன்.
ü கவிஞர்கள் காலத்தை நன்றாகக் கணிக்கக் கூடியவர்கள்.
ü எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை கவிதையாக வடிக்கக் கூடியவர்கள்.
ü படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் இறைவனுக்கு அடுத்தபடியாகச் செய்யக்கூடியவர்கள்.
ü காலத்தின் தொடக்கம், முடிவு அனைத்தும் கவிஞர்களே.
ஆசிரியர் செயல்பாடு:
§ நிகழ்காலச்சான்றுகள் தற்கால அறத்தின் நிலையைப் பற்றி விளக்க முற்படுதல்
§ பாடத்தில் இடம்பெற்ற அறங்களுக்கு உகந்த காணொளிகளைக் காண்பித்தல்
§ கவிஞர்களின் இயல்புகளை தகுந்த சான்றுகள் மூலம் விளக்குதல்.
§ இலக்கணக்குறிப்பு பிரித்தெழுதல் பகுபத உறுப்பிலக்கணம் ஆகியவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தல்
மாணவர் செயல்பாடு:
Ø சங்ககாலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அரங்கில் தற்காலத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுதல்
Ø தற்காலத்தில் அறத்தின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுதல்
Ø கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்படும் கருத்தை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்
கருத்துரு வரைபடம்:
சங்க இலக்கியத்தில் அறம்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø சிறந்த அறங்கூறவையம் எங்கே இருந்தது?
Ø அறத்தில் வணிக நோக்கம் கொள்ளக்கூடாது என்று கூறியவர் யார்?
Ø காவிதின் மாக்கள் என்று அழைக்கப்படுபவர் யார்?
Ø கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
Ø கண்ணதாசன் எங்கு பிறந்தார்?
Ø கண்ணதாசனின் பெற்றோர் யாவர்?
தொடர்பணி:
# சங்க இலக்கியத்தில் அறம் என்ற பாடப்பகுதியை கட்டுரையாக எழுதிவரச்செய்தல்.
# காலக்கணிதம் மனப்பாடச்செய்யுளை மனப்பாடம் செய்து வரச்செய்தல்.
Ayyanar.R
பதிலளிநீக்கு