அலகுத்தேர்வு
வினாத்தாள்- இயல் 6
பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்-50
(அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க)
அ) பலவுள் தெரிக:-
1)குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ)குறிஞ்சி, பாலை,நெய்தல் நிலங்கள்
இ)குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ)மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2)கோசல நாட்டில் குறையில்லாத காரணம் என்ன?
அ)நல்ல உள்ளம்
உடையவர்கள் இல்லாததால்ஆ)ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ)அரசன் கொடுங்கோலாட்சி
புரிவதால் ஈ)அங்கு வறுமை இல்லாததால்
3)ஆறு ஒரு ஓவியமாக விரிந்து, உயிரெனக்
காட்சியளிப்பதாக உணர்வது------
அ) ஓவியக்கலை ஆ) அழகுணர்ச்சி இ)மெய்யுணரச்சி ஈ)நுண்கலை
4)கொடிவேலி உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி
பாய்வது
அ)காவேரி ஆறு ஆ)சரயு ஆறு இ)பாலாறு ஈ)வைகை ஆறு
5)மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? - இவ்வடியில் இடம்பெறும் நயம்
அ)எதுகை நயம் ஆ)மோனை நயம் இ)இயைபு நயம் ஈ)முரண் நயம்
6)”ஏழைமை வேடன் இறந்திலன்” என்று எனை ஏசாரோ? இவ்வடியில் வேடன் என்பது
அ)இராமன் ஆ)இலக்குவன் இ)துரியோதனன் ஈ)குகன்
7) தமிழர் வாழ்வியலை--------- , ------------ என வகுத்தார்கள்
அ)அகம், புறம் ஆ)இன்பம், துன்பம் இ)உயர்வு, தாழ்வு ஈ)நிகழ்வு, எதிர்வு
8)நிலமும் பொழுதும்----------- எனப்படும்.
அ)உரிப்பொருள் ஆ)கருப்பொருள் இ)திறைப்பொருள் ஈ)முதற்பொருள்
9)பொழுதின் இரு வகைகள்---------,-----------
அ)சிறுபொழுது,பெரும் பொழுது ஆ)காலை,மாலைஇ)இரவு,பகல் ஈ)அந்தி,சந்தி
10)விடை----------- வகைப்படும் அ)ஆறு ஆ)ஏழு இ)எட்டு ஈ)ஒன்பது
11) தான் அறியாதஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது---------வினா அ)அறியா வினா ஆ)ஐய வினா இ)ஏவல் வினா ஈ)அறிவினா
12)’பறந்தது வண்டா? பழமா? எனக் கேட்பது------------வினா
அ)அறிவினா ஆ)அறியா வினா இ) ஏவல் வினா ஈ) ஐயவினா
ஆ) குறு வினா
13. காட்டில் விளைந்த வரகில் சமைத்த
உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில்
அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி
எழுதுக.
14. ”நேற்று நான் பார்த்த அருச்சுனன்
தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும்
நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான்.
இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
15. உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி
எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொ ல்கிறார்கள்?
16. கீழ்வ ரும் தொ டர்களில் பொருந்தா த
கருப்பொருளைத் திருத்தி எழுதுக. உழவர்கள் மலையில் உழுதனர். முல்லைப் பூச் செடியைப்
பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
இ) சிறு வினா
17. ‘கடற்கரையில் உப்புக்
காய்ச்சுதல் நடைபெறுகிறது;
மலைப்
பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ -
காலப்போக் கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும்,பண்டைத் தமிழரின்
திணைநிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும்
எழுதுக
18. வெய்யோன் ஒளி எனத்தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிமாறாமல்
எழுதுக.
5 மதிப்பெண் வினாக்கள்:
19.காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
20)மொழி பெயர்க்க:
Therukoothu is, as its name indicates, a
popular form of theatre performed in the streets. It is performed by rural
artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and
other ancient puranas. There are more songs in the play with dialogues
improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small
orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists
sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright
makeup. Koothu is very popular among rural areas.
21)சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று
வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே!
வணக்கம். இயற்கை கொ லு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே
நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட...
இவ்வுரையைத் தொ டர்க.
22)
தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.
1. வானம்
கருக்கத் தொ டங்கியது. மழைவரும்போலிருக்கிறது.
2. அனைவரின்
பாராட்டுகளால், வெட்கத்தில்
பாடகரின் முகம் ...................
3. .............. மனம்
உள்ள வரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் .......... புல்வெளிகளில் கதிரவனின்
..............வெயில் பரவிக் கிடக்கி வெயிலில் அலையாதே; உடல் ..................
பொதுக்கட்டுரை:
24)உங்கள் பகுதியில் நடைபெற்ற
அரசுப்பொருட்காட்சிக்குச் சென்றுவந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க