வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கவிதைப்பேழை -ஓடை
கற்கண்டு - வினைமுற்று
நாள் : பிப்ரவரி( இரண்டாம் வாரம்)
(07-02-2022 முதல் 11-02-2022 வரை)
1.அறிமுகம்:
மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப் பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை. அவ்வா று மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்
எழுவாய் செய்யும் செயலைக்குறிப்பது வினைச்சொல் என்று நீங்கள் அறிவீர்கள். முடிவு பெற்ற வினைச்சொல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர், சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளைப் படித்துக்காட்டுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
வினைமுற்று
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
ஓடை:
கவிஞர் வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுகிறார்.
இவரது இயற்பெயர் எத்திராசலு.இவர் பாரதிதாசனின் மாணவர்.
பல மொழிகளில் வல்லவரான இவர் கவிஞரேறு பாவலர்மணி என்று புகழப்படுகிறார்.
இவருக்குப் பிரென்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.
ஓடை எனும் பாடல் தொடுவானம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
வினைமுற்று
ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும்.
வினைச்சொல் வினைமுற்று, எச்சவினை என இருவகைப்படும்.
ஒரு செயல் முடிவு பெற்றதைக் குறிப்பது வினைமுற்று ஆகும்.இது தெரிவிலை, குறிப்பு என இருவகைப்படும்.
ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று ஏவல் வினைமுற்று.
வாழ்த்துதல்,வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
ஓடை என்ற பாடலை இயற்றியவர் யார்?
எ த்திராசலுவின் புனைபெயர் என்ன?
வினைச்சொல் என்றால் என்ன?
வினைமுற்று என்றால் என்ன?
குறிப்பு வினைமுற்றிற்குச் சான்று தருக.
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.
9.தொடர்பணி:
மலை ,அருவி, ஓடை, மரங்கள், வயல்கள் ஆகியன இடம் பெறுமாறு ஒரு இயற்கைக் காட்சியை வரைந்து வரச் செய்தல்.
வினைச்சொல் மற்றும் வினைமுற்று வகைகளுக்குச் சான்றுகளை எழுதி வரச்செய்தல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை