வகுப்பு: 9.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: விரிவானம்-தாய்மைக்கு வறட்சியில்லை
நாள்: 21-02-2022 TO 26-02-22வரை (பிப்ரவரி நான்காம் வாரம்)
பொது நோக்கம்:
மனிதம் சார்ந்த படைப்புகளைப் படைப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புடன் வாழக் கற்றுக்கொள்ளுதல்.
சிறப்பு நோக்கம்:
எது வறண்டாலும் மனிதம் வறண்டுவிடக் கூடாது என்பது பன்னெடுங்கால விழைவாகவும் செய்தியாகவும் திகழ்கிறது. தமிழ்ச் சிறுகதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை, சு.சமுத்திரம் அவர்களின் சிறுகதை வாயிலாக அறிதல்
சு.சமுத்திரம் அவர்களின் படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø தாயைப் பிடிக்காதவர்கள் இவ்வுலகில் யாரேனும் இருப்பார்களா? என்ற வினாவைக் கேட்டு,மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
தாய்மைக்கு வறட்சி இல்லை:
கர்நாடக மாநிலம், குல்பர்கா நகர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஒரு வறுமையான குடும்பம் வாழ்ந்து வந்தது.
ஒருநாள் அங்கு வந்த அரசு அதிகாரி அந்த வறுமையான குடும்பத்திற்கு உணவளித்து உதவி செய்ய முற்பட்டார்.
ஆனால் பசியை விட மானம் பெரிது என்று எண்ணிய அந்த குடும்பத்தினர் இந்த உணவை வாங்குவதற்குத் தயங்கினர்.
ஒரு வழியாக அவர் அளித்த உணவை வாங்கியதும், அவர்களுடைய குழந்தைகளோடு வளர்ந்து வந்த நாய்க்குட்டிகளும் பசியால் ஒலியெழுப்பின.
அந்த ஏழைத் தாய் தன்னிடம் இருந்த உணவை அந்த நாய்க் குட்டிகளுக்கு ஊட்டிவிட்டாள்.
அவனது தட்டில் உணவு குறைய குறைய தாய்மை கூடிக்கொண்டே சென்றது.
ஆசிரியர் செயல்பாடு:
§ ஆசிரியர், தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற இந்த சிறந்த கதையை உடல் மொழிகள் மூலமும் மெய்ப்பாடுகள் மூலமும் மாணவர்களுக்குப் பொருள் விளங்குமாறு எடுத்துக் கூறுதல்.
§ இக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்து தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற கதையை நாடகமாக நடித்துக் காட்டச் செய்தல்
மாணவர் செயல்பாடு:
Ø மாணவர்கள் வறுமையை விடத் தன்மானம் பெரிது என உணர்தல்.
Ø தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை அறிந்துகொள்ளுதல்.
கருத்துரு வரைபடம்
தாய்மைக்கு வறட்சி இல்லை
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø கதை நடக்கும் களம் எந்த மாநிலத்தில் இருந்தது?
Ø ஏழை குடும்பத்திற்கு உதவி செய்த அதிகாரி என்ன மொழி பேசினார்?
Ø அதிகாரி அந்த குடும்பத்திற்கு என்ன உணவு கொடுத்தார்?
Ø ”தாய்மைக்கு வறட்சி இல்லை” என்ற சிறுகதையை எழுதியவர் யார்?
தொடர்பணி:
· தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற சிறுகதையை உரையாடல் வடிவில் எழுதி வரச் செய்தல்.