வகுப்பு: 10.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கவிதைப்பேழை.- தேம்பாவணி
நாள்: 07-03-2022 முதல் 12-03-2022 வரை
பொது நோக்கம்:
@ மனித மாண்புகளையும் விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வாயில்களான இலக்கியங்களின் உட்பொருளை அறிய முற்படுதல்.
சிறப்பு நோக்கம்:
# துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள். சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தை பகிர்ந்து கொள்ளும் மனிதம் இருந்தால் மிகுந்த ஆறுதல் அளிக்கும். அவ்வகையில் தாயை இழந்த கருணையன் எவ்வாறு அழுது புலம்பினான் என்பதை இப்பாடத்தில் மாணவர்கள் அறிவார்கள்.
பாட அறிமுகம் (ஆர்வமூட்டல்)
Ø தாயைப் பிடிக்காதவர்கள் இவ்வுலகத்தில் யாரேனும் இருக்க முடியுமா? என்ற வினாவை கேட்டு மாணவர்களை இடையூறு செய்து அவர்கள் கூறும் இடையில் இருந்து, சில விளக்கங்களை அளித்து பாட அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், , கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
தேம்பாவணி
@ கிறிஸ்துவிற்கு முன் தோன்றியவர் திருமுழுக்கு யோவான். இவரை அருளப்பன் என்றும் அழைப்பர். வீரமா முனிவர் இயற்றிய தேம்பாவணி என்னும் நூலில் இவரை கருணையங் என்று அழைக்கிறார்.
@ கருணையன் தன் தாயான எலிசபெத் இறந்த பிறகு, காட்டில் தனியாக மனம் வருந்தி இயற்கையுடன் அழுது புலம்பினான் என்பதே இப்பாடத்தின் சுருக்கம் ஆகும்.
@ தேம்பா+அணி=வாடாத மாலை ,
@ தேன்+பா+அணி=இனிமையான பாடல் தொகுப்பு.
கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தை சூசையப்பர். தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் இவராவார். வீரமாமுனிவர் கிபி பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் இவரது இயற்பெயர் கான்சுடான்சு சோசப் பெசுகி.இவர் தூய துறவி என்று அழைக்கப்படுகிறார்
ஆசிரியர் செயல்பாடு:
§ இலக்கியங்களில் சொல்லப்பட்ட தாயன்பிற்கும், நிஜவாழ்வில் மாணவர்கள் கொண்ட தாயன்பிற்கும் உள்ள வேறுபாட்டை ஆசிரியர் விளக்க முற்படுதல்.
§ கரும்பலகையைப் பயன்படுத்தி, பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பு உள்ளிட்டவற்றை,செய்யுள் பகுதி நடத்தும்போதே இடையிடையே விளக்க முற்படுதல்
மாணவர் செயல்பாடு:
Ø இலக்கியங்களில் புலவர்கள் படைத்த கதாபாத்திரங்கள் தங்கள் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்தின என்பதை உணர்ந்து கொள்ளுதல்.
Ø மேலை நாட்டார் ஒருவர் தமிழ் கற்று அதன் மீது பற்றுக்கொண்டு மாபெரும் இலக்கியத்தை எழுதியுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளுதல்
கருத்துரு வரைபடம்:
தேம்பாவணி
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø தேம்பாவணி இயற்றியவர் யார்?
Ø வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
Ø கிறிஸ்துவின் வருகையை உலகுக்கு அறிவித்தவர் யார்?
Ø இஸ்மத் சன்னியாசி என்ற சொல்லின் பொருள் என்ன?
தொடர்பணி:
# நவமணி வடக்கயில் போல் என்ற மனப்பாடபாடலை வீட்டில் படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.