8 TH STD-TAMIL-MODEL LESSON PLAN(MARCH 3 RD WEEK)

 8.ஆம் வகுப்பு-தமிழ்-பாடக்குறிப்பு

நாள்                 :           21-03-2022 முதல்  26-03-2022       

மாதம்               :            மார்ச்  

வாரம்               :           மார்ச் – நான்காம்   வாரம்                     

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

பாடம்                :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :           1. திருக்கேதாரம்

                                                                                                                                     

                                     2. நாட்டுப்புற கைவினைக் கலைகள்        


கருபொருள்                            :

Ø  இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø  கைவினைக் கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்.

 

உட்பொருள்                           :

Ø  சுந்தரர் பற்றி அறிதல்

Ø  திருக்கேதாரம் நகரின் சிறப்பை அறிதல்

Ø  கைவினை கலைகள் பற்றி அறிதல்

Ø  கைவினைக் கலைகளின் பண்பாட்டுக் கூறுகளை அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள இசை பற்றிய செய்திகளை அறிந்து போற்றுதல்

Ø  கைவினைக் கலைகளின் சிறப்புகளை அறிந்து அவற்றை வளர்த்தல்

Ø  அகராதியைக் கொண்டு பொருள் அறிதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  முன் பாடங்களில் தான் கற்ற மனப்பாடப் பாடல்களை இசை இராகத்தில் பாடி இசையின் பயனை அறிய வைத்து ஆர்வ மூட்டல்.

Ø  முன்னர் ஒரு காலத்தில் வீட்டில் உணவு எப்படி சமைத்தார்கள்? இப்போது எப்படி உணவு சமைக்கிறார்கள்? என்பன போன்ற பல வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டல்

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

Ø  நிறுத்தற்குறி அறிந்து படித்தல்

நினைவு வரைபடம்                 :

                                                            திருக்கேதாரம்



                                                            நாட்டுப்புற கைவினைக் கலைகள்

                                                           

தொகுத்து வழங்குதல்             :

திருக்கேதாரம்

Ø  ஆசிரியர் : சுந்தரர்

Ø  சிறப்பு பெயர்கள் : நம்பியாரூரர்,தம்பிரான் தோழர்

Ø  எழுதிய நூல்கள் : தேவாரம்

Ø  திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர் மூவர் அருளியது தேவாரம்

Ø  தேவாரப்பாடல்களைத் தொகுத்தவர் : நம்பியாணடார் நம்பி

Ø  இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது

o   புல்லாங்குழல் முழவு இணைந்து ஒலிக்கிறது.

o   நீர்த்திவலைகள் வாரி இறைக்கும்

o   மதயானைகள்கள் மணிகளை வாரி வாரி வீசும்

o   ‘ கிண் ‘ என்ற ஒலி இசையாக முழங்கும்.

நாட்டுப்புற கைவினைக் கலைகள்

Ø  பானை வனைதல்

Ø  டெரகோட்டா: சுடுமண் சிற்பக் கலை

Ø  கூடை முடைதல்

Ø  பாய் பின்னுதல் : தடுக்குப்பாய்,பந்திப் பாய்,திண்ணைப் பாய், பட்டுப்பாய், தொழுகைப்பாய்

Ø  பனையோலை பொம்மைகள்

Ø  பிரம்புக் கலை : பிரம்பு குளிர்ச்சியானது. உடல்நலத்திற்கு ஏற்றது.

 

வலுவூட்டல்                             :

Ø  காணொளி காட்சிகள் மூலம் பாடப்பொருளை வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  காட்டிலிருந்து வந்த ________ கரும்பைத் தின்றன.

Ø  தேவாரத்தினைத் தொகுத்தவர் ___________

Ø  முதுமக்கள் தாழிகள் தமிழ்நாட்டில் எங்கு கிடைத்தன?

Ø  டெரகோட்டா என்றால் என்ன?

Ø  பானை ____-- ஒரு சிறந்த கலையாகும்.

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ணச் சொற்களைப் படித்தல்

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களைப் படித்தல்

தொடர் பணி                          :

Ø  தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகளைத் திரட்டி எழுதி வருதல்

Ø  பனையோலையால் செய்யப்படும் கைவினைப்பொருட்களின் படங்களைச் சேகரித்து பட த் தொகுப்பு உருவாக்குக.

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை