10 STD TAMIL -THIRD REVISION EXAM MODEL QUESTION PAPER

 

திருப்புதல் தேர்வு -3

(இயல் 7,8,9 குறைக்கப்பட்ட பாடத்திட்டம்)

வகுப்பு: 10                                              பாடம் : தமிழ்                                              மதிப்பெண் : 100

பகுதி - I

 அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                            15 X  1 =15

 1. இளம் வயதில் சமூக விடுதலைக்காக போராடியவர் _______________

அ)ம.பொ.சி    ஆ) கே. எம். பணிக்கர்    இ) மார்சல் ஏ.நேசமணி      ஈ) பி.எஸ். மணி

2.சிற்றகல் ஒளி என்பது ________ என்னும் தன்வரலாற்று நூலில் இடம்பெற்றுள்ளது

அ)சுதந்திரப் போராட்டம்  ஆ)எனது  போராட்டம் இ) ஒத்துழையாமை போராட்டம் ஈ) சத்திய சோதனை

3.திருபுவன சக்கரவர்த்தி என்று பட்டம் பெற்றவர் .

அ)முதலாம் இராசராசன் ஆ) முதலாம் ராஜேந்திரன் இ) இரண்டாம் ராசராசன்    ஈ) இரண்டாம் ராஜேந்திரன்

4. ___________ காலந்தொட்டு மெய்க்கீர்த்திகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன .

அ) முதலாம் இராசராசன்  ஆ)முதலாம் ராஜேந்திரன் இ) இரண்டாம் ராசராசன் ஈ) இரண்டாம் ராஜேந்திரன்

5. புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்கள் கல்லில் பொறிக்கப்பட்டவை _____________

 அ) சிற்பம்                 ஆ) ஓவியம்                இ) கல்வெட்டு            ஈ) மெய்க்கீர்த்தி

6. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவது காக்க என்று ___________ வேண்டினார்.

அ) கருணையின் எலிசபெத்துகாக ஆ) எலிசபெத் தமக்காக இ) கருணையன்   பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக

7.வாய்மையே மழை நீராகி  --- இத்தொடரில் வெளிப்படும் அணி

அ)  உவமை              ஆ)  தற்குறிப்பேற்றம்              இ)  உருவகம்                      ஈ) தீவகம்

 8.__________ என்பது பேசும் மொழியின் ஓட்டம்

அ) மடை                   ஆ ) இசை                               இ) உரை              ஈ) பாட்டு

 9. நிரல், நிறை என்பதன் பொருள்

அ)  வரிசை      ஆ)  நிறுத்துதல் இ) நிறுத்துதல் வரிசை ஈ)  வரிசை நிறுத்துதல்

10. ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமானது

அ) பாரிசுக்கு போ ஆ) யுகசந்தி   இ) யாருக்காக அழுதான் ஈ) தேவன் வருவாரா?

11.சொற்பொழிவு ஆற்றுவது போன்ற ஓசை ________ க்கு உரியது

அ) வெண்பா    ஆ) அகவற்பா   இ) துள்ளலோசை ஈ) வஞ்சிபா

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை தருக  ( வினா 12முதல் 15 வரை )

பழுது இல் செய்வினை பால்கெழு மாக்களும் ;

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும்

வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்; 

12.பாடல்  இடம்பெற்றுள்ள நூல்

 அ)காலக்கணிதம் ஆ) சிலப்பதிகாரம்     இ) மணிமேகலை  ஈ)  தேம்பாவணி

13. பழுதின்றி கைத்தொழில் செய்வோர் நிறைந்துள்ள நகரம் எது?

அ)  மதுரை      ஆ) புகார் இ)  வஞ்சி ஈ) கொடும்பாளூர்

14. வழுவின்றி எனும் சொல்லை பிரித்து எழுதுக

அ) வழி + இன்றி ஆ) வழி + வின்றி   இ)வழு +  இன்றி ஈ) வழு + வின்றி  

15.இதில் இடம்பெறும் எதுகை சொற்கள் யாவை

அ)  குழலினும் - யாழினும் ஆ) பழுது இல் - குழலினும் இ)வழுவின்றி - அரும்பெறல்           ஈ)பழுதுஇல் -அரும்பெறல்

பகுதி-2  பிரிவு -1

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளி (வினா எண் 21 க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்)      4 X  2 =8

16.விடைக்கு ஏற்ற வினா அமைக்கவும்.

அ)  ஜெயகாந்தன் சிறுகதை மன்னன் என போற்றப்பட்டார் .

ஆ)கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை  மக்களிடையே

 கொண்டு சேர்த்தார்.

17. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர்  - சிலப்பதிகாரம் காட்டும் இவ் வணிகர்கள் யாவர்?

18. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அது  - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

19. “நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்!”-  யார் யாரிடம் கூறினார்?

 20. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டு தருக.

 21. உவமையை பயன்படுத்தி சொற்றொடர் அமைக்க: மழைமேகம் காணாப் பயிர்போல

பிரிவு 2

ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                                    5 X  2 = 10

22.கலைச்சொல் தருக            அ) Belief-    ஆ) Document-

23. தீவக அணியின் வகைகள் யாவை?

24.சொற்களைப் பிரித்து பார்த்து பொருள் தருக அ) கானடை    ஆ) வருந்தாமரை

25. இலக்கணக் குறிப்புத் தருக           அ) உய்முறை  ஆ) மெய்முறை

26.  கொள்வோர் கொள்க;  குரைப்போர் குரைக்க!

        உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது! –

அ) அடி எதுகை எடுத்து எழுதுக‌

ஆ)  இலக்கண குறிப்பு எழுதுக: குரைக்க, கொள்க

27. நிறுத்தற்குறியீடுக :

மாண்புமிகு வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது பெற்றதோடு தமிழக அரசின் ஔவை விருதையும் தூர்தர்ஷனின் பொதிகை விருதும் பெற்றுள்ளார். அண்மையில் தாமரைத்திரு விருதும் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்

28. ஊர்ப்பெயரின்  மரூஉ தருக

புதுக்கோட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நாகப்பட்டின ம்

பகுதி 4           பிரிவு - 1

ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி                                                           2 X  3 = 6

29. உரை பத்தியைப் படித்து   வினாக்களுக்கு விடையளி

தமிழர் போரிலும் அறநெறிகளை பின்பற்றினர் போர் அறம் என்பது வீர மற்றோர் புறமுதுகிட்டோர் சிறார் முதியோர் ஆகியோரை எதிர்த்து போர் செய்யாமையை குறிக்கிறது போரின் கொடுமையிலிருந்து பசு பார்ப்பனர் பெண்கள் நோயாளர் புதல்வரை பெறாதவர் ஆகியோருக்கு தீங்கு வராமல் போர்புரிய வேண்டும் என்று புறப்பாடல் கூறுகிறது தன்னை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்

அ) தமிழர் போரிலும் எதனை பின்பற்றினர் ?

ஆ) ஆவூர் மூலங்கிழார் எதனை குறிப்பிடுகிறார் .

30. தற்குறிப்பேற்ற அணி, தீவக அணி, நிரல்நிறை அணி  ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு தருக

31. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் - இடம் சுட்டி பொருள் தருக

பிரிவு - 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.. (வினா 34 கட்டாய வினா)           2 X  3 = 6 

32. மரபு தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

அ மனக்கோட்டை ஆ  கண்ணும் கருத்தும் இ  அள்ளி இறைத்தல்

33. தொகைச் சொற்களை பிரித்து எழுதி தமிழ் எண்ணுரு  தருக.

 மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழில் உலக மொழிகளில் உயர்ந்து என்ற செம்மாந்த கூற்றுக்கு தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும் முப்பாலை முழுமையாக தந்த தமிழிலன் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள் நானிலத்தில் பசித்தவர்க்கு அறுசுவை உணவு போல் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கு இனிமை ஈந்துதமிழ் பெருமை சாற்றுகிறது .

34. அடி பிறழாமல் எழுதுக

அ.தூசும் துகிரும் ஆரமும் எனத் தொடங்கும் சிலப்பதிகாரப்பாடல் (அல்லது)

ஆ.நவமணி வடக்கயில் போல் எனத் தொடங்கும் பாடல் 

பிரிவு - 3

எவையேனும் 2  வினாக்களுக்கு விடை அளிக்கவும்                                 2 X  3 = 6

35. அவந்தி நாட்டு மன்னன் மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்

       அப்போர் நிகழ்வை புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

36. கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

37. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

      சுற்றமாச் சுற்றும் உலகு  - இக்குறட்பாவின் அலகிட்டு வாய்பாடு எழுதுக

பகுதி - 4

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                            5  X  5 =  25

38. அ ) பாடலின் நயம் பாராட்டுக:

கவிஞன் யானோனர் காலக்கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலை மிகு பொருளின் செல்வம்!

இவை சரி யென்றால் இயம்புவதென் தொழில்

          இவைதவறாயின் எதிர்ப்பதென் வேலை!

 ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யானுமே அறிந்தவை; அறிக!           கண்ணதாசன்

(அல்லது)

ஆ ) மாற்றம் என்பது மானிட தத்துவம் என்பதை கண்ணதாசனின் காலக்கணிதம் வழிநின்று எழுதுக.

39 .  அ ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள்

கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ்  ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.

(அல்லது)

ஆ ) உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து

      செல்வோருக்கு இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

40 .  காட்சி உணர்த்தும் கருத்துக்களை எழுதுக.

41. பணி வேலைவாய்ப்பு வேண்டி மாணவி தன்னை தமிழ் அரசியாக கருதி படிவத்தை நிரப்புக

42. அ ) கோவில்களிலும் பழமையான நினைவுச் சின்னங்களிலும் கட்டியவர்கள் பெயர்களும் வரலாறும் இடம்பெற்றிருக்கும் அவை நம் பழம் பெருமையையும் வரலாற்றையும்  அறியச் செய்யும் அரிய ஆவணங்கள் என்றும் அறிவீர்கள் தானே இவற்றை  பராமரிக்கவும் பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்கள் யாவை?

(அல்லது)

ஆ ) மொழிபெயர்க்க :

Among the five geographical division of the Tamil country in Sangam literature the marudham region  was fit for cultivation as it had the most fertile lands they property of a farmer depended on getting the necessary sunlight seasonal rains and the fertility of the soil among these elements for nature sunlights was considered indispensable by the  ancient Tamils.                                                    பகுதி - 5

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை அளிக்கவும்                                     3 X  8 = 24

43. அ)  நாட்டு விழாக்கள்-விடுதலைபோராட்ட வரலாறு-நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் மாணவப் பருவமும் நாட்டு மற்றும் என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக .

(அல்லது)

  ஆ)ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க

44. அ.குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக. மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி .

                                                                      (அல்லது)

ஆ‌ ) அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

45. அ ) உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்கித் தருக.

(அல்லது)

ஆ ) நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக. மகளிர் நாள் விழா இடம்- பள்ளி கலையரங்கம் நாள் 08.3.2021 கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்- தலைமை ஆசிரியரின் வரவேற்பு- இதழாளர் கலையரசியின் சிறப்புரை- ஆசிரியர்களின் வாழ்த்துரை- மாணவத் தலைவரின் நன்றியுரை.

PDF வடிவில் பதிவிறக்க👇


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை