ஆண்டு இறுதித் தேர்வு -மாதிரி வினாத்தாள்-2
10.ஆம்
வகுப்பு
தமிழ்
100 மதிப்பெண்கள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1)உள்ளக் கனல் என்பது
அ)உவமைத்தொகை ஆ)வினைத்தொகை
இ)உருவகம் ஈ)எண்ணும்மை
2)கரும்பின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ)
முளை ஆ) கொழுந்து
இ) கொழுந்தாடை ஈ) சண்டு
3)சிந்துக்குத் தந்தை எனப்போற்றப்படுபவர்
அ) வள்ளுவர் ஆ)கனகசபை இ)பாரதிதாசன்
ஈ)பாரதியார்
4)
“கேட்க வேண்டிய” என்பது-----பெயரெச்சம்
அ)தெரிநிலை
ஆ)தனிநிலை இ)கூட்டுநிலை ஈ)இறுதிநிலை
5)வலிமையை
நிலைநாட்ட இரு நாட்டு வேந்தரும் களத்தில் போரிடுவது
அ)வெட்சி ஆ)வஞ்சி
இ)நொச்சி ஈ)தும்பை
6)தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக
ம.பொ.சி கருதியது
அ)திருக்குறள்
ஆ)சிலப்பதிகாரம் இ) நாலடியார்
ஈ)இன்னிலை
7)”உண்மையான
செல்வம் பிறர்துன்பம் தீர்ப்பதுதான்” என்றவர்
அ)நல்வேட்டனார் ஆ)இளங்கோ
இ)பவணந்தி முனிவர் ஈ)திருமூலர்
8)மானிடத்
தத்துவமாக கண்ணதாசன் குறிப்பிடுவது
அ)உண்மை
ஆ)அறம் இ) மாற்றம்
ஈ) ஆற்றல்
9) கவிதை
வெளியீட்டுக்கு உரிய பாவகை
அ) ஆசிரியப்பா
ஆ)
மருட்பா இ)
வெண்பா ஈ) கலிப்பா
10)சோவியத் நாட்டு விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்
அ)சில நேரங்களில் சில மனிதர்கள் ஆ)யுகசந்தி இ)இமயத்துக்கு அப்பால் ஈ)வளத்தம்மா
11. தமிழின் முதல் அகராதி எது?
அ)அபிதான சிந்தாமணி ஆ)பேரகராதி இ)சதுரகராதி ஈ) பிங்கல நிகண்டு
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன
காரரும் தோலின் துன்னரும்
கிழியினும்
கிடையினும் தொழில்பல பெருக்கி
பழுதுஇல்
செய்வினைப் பால்கெழு மாக்களும்;
12)இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?
அ. இயேசு காவியம் ஆ.
கம்பராமாயணம் இ. தேம்பாவணி ஈ.சிலப்பதிகாரம்
13) இப்பாடலை இயற்றியவர்
யார்?
அ. குலசேகர ஆழ்வார் ஆ. இளங்கோவடிகள் இ. வீரமாமுனிவர் ஈ.
கம்பர்
14)செய்வினை- என்பதன்
இலக்கணக்குறிப்பு
அ.பண்புத்தொகை ஆ.வினைத்தொகை இ.இரண்டாம் வேற்றுமைத்தொகை ஈ)உவமைத்தொகை
15)கண்ணுள் வினைஞர் என்ற
சொல்லின் பொருள்
அ. பார்வையற்றோர் ஆ.ஓவியர்
இ.வணிகர் ஈ.இசைக்கலைஞர்
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21
கட்டாயவினா)
16)விடைகளுக்கேற்ற
வினாக்கள் அமைக்க:
அ)இந்திரன் முதலாகத் திசைபாலகர் எட்டுப்பேரும்
ஓருருவம் பெற்றதுபோல் ஆட்சி செலுத்தினான் சோழன்.
ஆ)ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச்
சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
17) "மன்னும் சிலம்பே! மணிமே
கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" – இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை
எழுதுக.
18)மாலவன் குன்றம்,வேலவன் குன்றம் என
ம.பொ.சியால் குறிப்பிடப்பட்டவை எவை?
19)பொய்யாச் செந்நா- விளக்குக
20)கம்பராமாயணம்-குறிப்பு வரைக
21)செயற்கை எனத்தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
22)
"உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்" –
இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன்
இலக்கணம் தருக.
23) சந்தக் கவிதையில் வந்த
பிழைகளைத் திருத்துக.
"தேணிலே ஊரிய
செந்தமிழின் – சுவை தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர்
உல்லலவும் – நிதம் ஓதியுனர்ந்தின் புருவோமே
"24)உறங்குவாய்-பகுபத உறுப்பிலக்கணம்
தருக.
25)கலைச்சொல் தருக: GUILD ,
IRRIGATION
26) வினைமுற்றை
வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.
1. கலையரங்கத்தில் எனக்காகக்
காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்
27) அகராதியில்
கண்டு பொருள் எழுதுக. அ) ஊண், ஊன்
28) தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
பகுதி-3(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29)சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில சான்றுகள் தருக.
30)தானியங்களுக்கு வழங்கப்படும்
சொற்களைப் பட்டியலிடுக.
31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
ஒருவன் இருக்கிறான் கதை 'கு.அழகிரிசாமி சிறுகதைகள்' என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.கு.அழகிரிசாமி , அரசுப்பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை
மேற்கொண்டவர்; மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்பக்
கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவர்; கரிசல் எழுத்தாளர்கள்
வரிசையில் மூத்தவர் எனலாம். கி.ரா.வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம்
வாய்ந்தவை. படைப்பின் உயிரை முழுமையாக உணர்ந்திருந்த கு.அழகிரிசாமி பல இதழ்களில்
பணியாற்றியவர்; மலேசியாவில் இருந்தபோது அங்குள்ள
படைப்பாளர்களுக்குப் படைப்பு தொடர்பான பயிற்சி அளித்தவர். இவர் பதிப்புப் பணி,
நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழ் இலக்கியத்தில்
ஆர்வம்கொண்டு திறனாய்வு நூல்களையும் படைத்தவர்.
1.ஒருவன் இருக்கிறான் என்ற கதையை
இயற்றியவர் யார்?
2. கு.அழகிரிசாமி எதற்குப்பெயர்
பெற்றவர்?
3.கரிசல் எழுத்தாளர் வரிசையில் மூத்தவர்
யார்?
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
32) எவையெல்லாம் அறியேன் என்று
கருணையன் கூறுகிறார்?
33) தமிழன்னையை வாழ்த்துவதற்கான
காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
34)அ.வாளால் - எனத்தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக (அல்லது)
ஆ.நவமணி - எனத் தொடங்கும் பாடலை
அடிமாறாமல் எழுதுக
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு.
36) தொகாநிலைத்தொடர்
வகைகளை எழுதி,இரண்டனை விளக்குக
37)தற்குறிப்பேற்ற அணியைச் சான்றுடன்
விளக்குக.
38)நச்சப்
படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று - இக்குறட்பாவில் பயின்று வந்த அணியை விளக்குக
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க:
38)அ) கல்வியின்றி
இவ்வுலகில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழாது; கல்வியே அனித்திலும் சிறந்தது என்பனவற்றை
செய்குத்தம்பி பாவலரின் பாடல் வழி நிறுவுக.
(அல்லது)
ஆ) கருணையனின் தாய்
மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய
கவிதாஞ்சலியை விவரிக்க.
39) அ. உங்கள் பள்ளியில் நடைபெறும்
நாட்டுநலப்பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க
உரை ஒன்றை உருவாக்கித் தருக
(அல்லது)
ஆ. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை
வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி, தமிழ் எண்ணுரு
தருக
அ) மூவேந்தர்களால்
நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ்
இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த
தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில்
பசித்தவர்க்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது
(அல்லது)
ஆ)மொழி பெயர்க்க:
Among the five geographical divisions of
the Tamil country in Sangam literature, the Marutam region was fit for
cultivation, as it had the most fertile lands. The property of a farmer
depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of
the soil. Among these elements of nature, sunlight was considered indispensable
by the ancient Tamils
41)பூவேந்தன் மகள் மலர்மகள் என்பவர்
மேனிலை முதலாமாண்டு வகுப்பில், உயிர் அறிவியல் பாடப்பிரிவில் சேர விழைகிறார்.அவருக்கு
விண்ணப்பம் நிரப்பி உதவுக.
42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க:
3X8=24
43)அ) தமிழின்
சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான
உரைக் குறிப்புகளை எழுதுக
(அல்லது)
ஆ)நாட்டு
விழாக்கள் -விடுதலைப் போராட்ட வரலாறு -நாட்டின்
முன்னேற்றத்தில் மாணவர் பங்கு- குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப்
பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக
44)அ)அன்னமய்யா
என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து
மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
(அல்லது)
ஆ) 'அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை
வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.
45)அ.விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில்
கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ.குறிப்புகளைக் கொண்டு
கட்டுரை வரைக.
முன்னுரை-உணவே மருந்து-உடல்நலம் -நோய்கள் பெருக்கம்-உணவுப் பழக்கவழக்கங்கள்-மருத்துவம்-மூச்சுப்பயிற்சி-அன்றாடநடைபயிற்சி-சிறுதானியங்கள்- விழிப்புணர்வு- முடிவுரை
PDF வடிவில் பதிவிறக்க👇👇