10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 04-07-2022 முதல் 09-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கேட்கிறதா என்குரல்
2. காற்றே வா
கருபொருள் :
Ø வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்
Ø காற்றின் முக்கியத்துவத்தை அறிதல்
உட்பொருள் :
Ø பாரதியார் பற்றி அறிதல்
Ø காற்றின் சிறப்புகளைப் பற்றி அறிதல்.
அறிமுகம் :
Ø கவிதை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø உயிரை உள்ளிருத்தும் காற்று, ஓர் உருவம் கொண்டு
நம்மிடம் பே சினால்…எவ்வாறு இருக்கும் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
@ உயிராக நான் ,பலபெயர்களில் நான்,இலக்கியத்தில் நான், நான்கு திசையிலும் நான்,முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ,தடன் பதிப்பேன் நான் என்னும் தலைப்புகளில் காற்று மனித வாழ்விற்கு எவ்வளவு நலன்களைச் செய்கிறது என விளக்குதல்
@ காற்றே , வா. மகரந்தத் தூளைச்சுமந்து கொண்டு, மனதை
மயலுறுத்து கின்ற இனிய வாசனை யுடன் வா;
இலைக ளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த
ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு காட்டு.
என்று காற்றினை அழைக்கிறார் பாரதியார்
ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø காற்றே வா பாடலின் பொருளை உணர வைத்தல்
Ø இலக்கணக்குறிப்பைப் புரிய வைக்
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø காற்று பல்வேறு வடிவங்களின் எவ்வாறு மனிதர்களுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்குதல்
Ø காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்
மாணவர் செயல்பாடு :
Ø வசன கவிதையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
Ø பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்
@ காற்று எவ்வெவ்வடிவங்களில் மனிதனுக்குப் பயன்படுகிறது என்பதை அறிதல்
Ø காற்று ஆற்றல் வடிவில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிதல்
@ பருவமழை எவ்வாறு உருவாகிறது என அறிதல்.
வலுவூட்டல் :
Ø கவிதையை மீண்டும் வாசித்தல்
Ø விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
குறைதீர் கற்றல் :
Ø மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்
Ø முக்கியச்சொற்களை அடிக்கோடிட்டு படித்தல்.
மதிப்பீடு :
Ø வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Ø ப்ராண ரஸம் என்பதன் பொருள் யாது?
Ø கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
Ø உலக காற்றுநாள் எப்போது கொண்டாடப் படுகிறது?
Ø காற்றின் வேறுபெயர்கள் யாவை?
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.
கற்றல் விளைவு
@ காற்றுமாசுபாடு குறித்து விழிப்புணர்வு பெறுதல்.
@ இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்