7. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு: 7.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கவிதைப்பேழை (ஒன்றல்ல இரண்டல்ல)
உரைநடை உலகம் (பேச்சு மொழியும்,எழுத்து மொழியும்)
நாள் : ஜூன் 4 ஆவது வாரம்
(27-06-2022 முதல் 01-07-2022 வரை)
1.அறிமுகம்:
தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப்பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
ஒன்றல்ல இரண்டல்ல
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
ஒன்றல்ல இரண்டல்ல
தமிழ்நாட்டின் பெருமை அளப்பரியது.மிகுந்த பொருள்வளமும் செல்வ வளமும் உடையது.பல்வேறு இலக்கிய வளங்களை உடையது.
இப்பாடலை இயற்றியவர் உடுமலை நாராயண கவி ஆவார்
இவர் பகுத்தறிவுக் கவிராயர் எனவும் அழைக்கப்படுகிறார்
இவர் பல திரைப்படப்பாடல்களை இயற்றியுள்ளார்.
@ மொழியின் வடிவங்கள்
@ பேச்சுமொழி
@பொருள்வேறுபாடு
@வட்டார மொழி
@கிளைமொழி
@ எழுத்துமொழி
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
ஒன்றல்ல இரண்டல்ல பாடலை இயற்றிவர் யார்?
பகுத்தறிவுக் கவிராயர் யார்?
வட்டார மொழி என்பது யாது?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
9.தொடர்பணி:
ஒன்றல்ல இரண்டல்ல பாடலை இசையுடன் பாடி மகிழச் செய்தல்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை