8. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: உரைநடை உலகம் (தமிழ் வரிவடிவ வளர்ச்சி)
விரிவானம் (சொற்பூங்கா)
நாள் : ஜூன் 4 ஆவது வாரம்
(27-06-2022 முதல் 01-07-2022 வரை)
அறிமுகம் :
# மனிதன் பேசத்தொடங்கும் முன் தனது எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்தினான் என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
# ஓரெழுத்தொருமொழிகள் சிலவற்றைக்கூறி,அவற்றுக்கு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
பாடச் சுருக்கம் :
Ø எழுத்துகள் தொடக்கத்தில் படிப்படியாகத் தோற்றம் பெற்றன.அச்சுக்கலையே வரிவடிவம் விரைவாக வளர்ச்சிபெற உதவியது.வட்டெழுத்து,கண்ணெழுத்து முதலியன எழுத்துகளின் தொடக்கநிலையாக இருந்தன. வரி வடிவத்தில் காலப்போக்கில் உருவமாற்றமும்,சீர்திருத்தமும் ஏற்பட்டது.
Ø உயிரெழுத்து வரிசையில் 6 எழுத்துகளும், உயிர்மெய் வரிசையில் 36 எழுத்துகளும் ஓரெழுத்தொருமொழிகளாகும்.
ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சியைப் படிப்படியாக விளக்குதல்
Ø எழுத்து சீர்திருத்தஙகள் வரிவடிவ வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின எனபதை உணர்த்துதல்
Ø உரைப்பகுதியை உரிய ஏற்ற இரக்கத்துடன் படித்துக்காட்டுதல்
Ø ஓரெழுத்தொருமொழிகளின் பொருளை மாணவர்களுக்குக் கூறுதல்
கருத்துரு வரைபடம்
மாணவர் செயல்பாடு:
Ø மாணவர்கள் தமிழ் வரிவடிவ வளர்ச்சி எவ்வாறு படிப்படியாக நிகழ்ந்துள்ளது என உணர்தல்.
Ø எழுத்துச்சீர்திருத்தததைப் பற்றி அறிதல்
@எழுத்துகளின் உருவமாற்றத்தைப் பற்றி அறிதல்
@ஓரெழுத்தொருமொழிகளின் பொருளறிதல்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø ஓவிய எழுத்து என்பது யாது?
Ø வளைந்த கோடுகளால் ஆன எழுத்து யாது?
Ø வீரமாமுனிவர் செய்த சீர்திருத்தம் யாது?
Ø ஓரெழுத்தொரு மொழிகள் மொத்தம் எத்தனை?
தொடர்பணி:
· பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.