10 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY WEEK 2

  10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

 

நாள்                 :          11-07-2022 முதல்  15-07-2022         

 மாதம்               :            ஜூலை     

வாரம்               :           2 ஆவது  வாரம்                                 

 வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                           

 பாடத்தலைப்பு     :  1. முல்லைப்பாட்டு

                                             2. புயலிலே ஒரு தோணி

கருபொருள்                            :

Ø  சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட மழைக்கால வாழ்க்கை நிலைகளை அறிதல்

Ø புயலின் சீற்றத்தைப்பற்றி வருணனைகளுடன் அறிதல்

உட்பொருள்                           :

Ø  விரிச்சி கேட்டலைப்பற்றி அறிதல்

Ø புயலின்போது நடுக்கடலில் சிக்கிய நிலையில் மக்கள் பட்ட இன்னல்களை அறிதல்.

அறிமுகம்                               :

Ø  மழை பெய்தவுடன் என்னென்ன நிகழ்வுகள் நிகழும்? என்ற வினாவைக்கேட்டு அதன்மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்

Ø  யாரெல்லாம் கப்பலில் பயணம் செய்துள்ளீர்கள்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

அகன்ற உ லகத்தை வளைத்துப்பெருமழை பொழிகிறது. வலம்புரிச்சங்குபொறித்த கைகளையுடைய திருமால் ,குறுகிய வடிவம் கொண் டு மாவலி மன்னன்நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும்விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம்.அம்மழைக்காலத்தில் தலைவிக்காக விரிச்சி கேட்டு நின்றனர்


இயற்கையின் அசைவுகள் அனைத்தும் அழகிய நாட்டியமாய் அமையும்போ து இனிமையும் மகிழ்வும் ஒருங்கே பெறுகிறோம். அதேஇயற்கையின் அசைவு சீற்றமாய்,ஊழித்தாண்டவமாகமாறுகையில்   எதிர்நிற்க இயலாது தோற்றுத்தான் போகிறோம். சுற்றியுள்ளஇயற்கை நம் மைச் சுருட்டிச் செல்ல   எத்தனிக்கும்போ து, புயலின்பெருங்காட்சி உயிரை உறையவைக்கிறது. அதில் கிடைக்கும் அனுபவம் சொல்லொணாதது.


ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø முல்லைப்பாட்டு பாடலின் பொருளை உணர வைத்தல்

Ø  இலக்கணக்குறிப்பைப் புரிய வைத்தல்

Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

Ø  காற்று எவ்வளவு வலிமையானது என வருணனைகள் மூலம் விளக்குதல்

Ø  காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்


கருத்து வரைபடம்:
முல்லைப்பாட்டு

புயலிலே ஒரு தோணி

மாணவர் செயல்பாடு               :             

Ø சங்க இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø  நப்பூதனார் பற்றிய குறிப்புகளை அறிதல்

@ காற்று புயல் வடிவில் மனிதனை எவ்வகையிலெல்லாம் அச்சுறுத்துகிறது என்பதை அறிதல்.

Ø  வட்டார வழக்குச் சொற்களை  அறிதல்

வலுவூட்டல்                             :

Ø  பாடலை மீண்டும் வாசித்தல்

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்

Ø விரிவானம் பகுதியில் முக்கியச்சொற்களை அடிக்கோடிட்டு படித்தல்.

மதிப்பீடு                                 :

Ø முல்லைப் பாட்டை இயற்றியவர் யார்?

Ø நேமி என்பதன் பொருள் யாது?

Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?

Ø  கப்பித்தான் என்ற சொல்லின் பொருள்?

தொடர்பணி

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

கற்றல் விளைவு


குளிர்கால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன்
மொழிப் பயன்பாட்டுத் திறத்தினையும் படித்துச் சுவைத்தல்.

கதை நிகழ்வுகளைச் சுவையுடன் படிக்கவும் அது போன்ற படைப்புகளை
உருவாக்கவும் முனைதல்.


மற்ற வகுப்புகளுக்கான பாடக்குறிப்புகளைப்பெற



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை