9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 11-07-2022 முதல் 15-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. நீரின்றி அமையாது உலகு
2.பட்ட மரம்
கருபொருள் :
Ø நீரின் இன்றியமையாமையை உணர்தல்
@ வறட்சியின் அவலத்தை உணர்தல்
உட்பொருள் :
Ø தமிழரின் நீர் மேலாண்மையை அறிதல்
@ கல்லணையைப் பற்றி அறிந்துகொள்ளுதல்
@ மரம் வறண்டு போவதன் அவலத்தை உணர்தல்
அறிமுகம் :
# உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø தமிழரின் நீர் மேலாண்மை
@ கல்லணை கரிக்காலனால் கட்டப்பட்டு நீர்ப்பாசனம் சிறந்திருந்தது
Ø ஜான் பென்னி குயிக் முல்லைபெரியாறு அணையைக் கட்டினார்.
# குமிழித்தூம்பு பயன்படுத்தப்பட்டது
@ மரங்களை அழிப்பது மனிதனுக்குப் பேராபத்து.
@ கவிஞர் தமிழ் ஒளி பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார்
ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø தமிழரின் நீர் மேலாண்மையை தெளிவாக விளக்குதல்.
Ø நீரின் தேவையை நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு உணர்ந்தனர் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்
Ø நீரின்மையால் மரங்கள் அழிந்து வருவதை மாணவர்க்குப் புரியவைத்தல்
கருத்துரு வரைபடம்
நீரின்றி அமையாது உலகு
பட்டமரம்
மாணவர் செயல்பாடு:
Ø நீரின்றி இவ்வுலகமே இயங்காது என அறிதல்
Ø நீர் மேலாண்மையில் நம் முன்னோர் எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதை அறிதல்
@ மரங்களை அழிப்பதன் தீய விளைவுகளை உணர்தல்
@ உண்ர்வுகளை வெளிப்படுத்த கவிதை மிகச்சிறந்த வழி என உணர்தல்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø குமிழித்தூம்பு என்றால் என்ன?
Ø கல்லணையைக் கட்டியவர் யார்?
Ø பென்னி குயிக் யார்?
Ø கவிஞர் தமிழ் ஒளி யாருடைய வழித்தோன்றல்?
தொடர்பணி:
· பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
கற்றல் விளைவு
@ நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
@ கருத்தரங்கில் கருத்தை வெளிப்படுத்த அறிந்து கொள்ளுதல்.
மற்ற வகுப்புகளுக்கான பாடக்குறிப்புகளைப்பெற