7 TH STD TAMIL -FIRST MID TERM MODEL QUESTION PAPER(RANIPET DISTRICT)

முதல் இடைப்பருவத்தேர்வு -மாதிரி வினாத்தாள் (2022-2023)

 

   ஏழாம் வகுப்பு                                                     பாடம்- தமிழ்                                                 மதிப்பெண்கள்: 60

அ)பலவுள்தெரிக:                                                                                                                                                                    5X1=5

1.விரதம் என்ற சொல்லின் பொருள்                       

 அ) மாறி  ஆ) மாரி  இ) நோன்பு   ஈ)  தவம்

2.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்  ஆ) பரிபாடல்  இ) பரணி   ஈ) அந்தாதி

3.ஒலியின் வரிவடிவம்-----ஆகும்

அ) பேச்சு  ஆ)  எழுத்து   இ)  குரல்   ஈ) பாட்டு 

4.காடெல்லாம் எனும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

அ)கா+எல்லாம்  ஆ)காடு+எல்லாம்  இ) காடு+டெல்லாம் ஈ) கான்+எல்லாம் 

5.நேரம்+ஆகி என்பதைச் சேர்த்து எழுதக்கிடைப்பது 

அ) நேரமாகி  ஆ)நேரம் ஆகி   இ) நேராகி  ஈ) நேர் ஆகி

ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                                                5X1=5

6. காட்டுவளத்தின் குறியீடாகக் கருதப்படும் விலங்கு------

7.தீங்கு தராத சொற்களைப் பேசுதல்------ஆகும்

8.சிறுவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல்------

9.குறுக்கங்கள்------வகைப்படும்.   10.நாக்கு என்பது-----குற்றியலுகரம்

) தொகைச்சொல்லை விரித்து எழுதுக                                                                                                             5X1=5

11.இருதிணை 12.முக்கனி 13. முத்தமிழ்  14.நாற்றிசை  15.அறுசுவை

)நான்கு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                                   4X2=8

16.மொழியின் இரு வடிவங்கள் யாவை?

17.தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக

18.காட்டுப்பூக்களுக்கு உவமையாக சுரதா கூறுவது யாது?

19. யானைகள் மனிதனை ஏன் தாக்குகின்றன?

20.காடு-வரையறுக்க

21.சிறுவர்களுக்கு நாவல்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?

22..தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை? 

)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                                   3X2=6

23.ஔகாரம் எப்போது முழுமையாக ஒலிக்கும்?

24. மகரக்குறுக்கத்திற்கு இரண்டு சான்றுகள் தருக.

25.குற்றியலுகர வகைகளைப் பட்டியலிடுக. 

26.குற்றியலிகரம் என்றால் என்ன?

)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக:                                                       3X3=9

27.பேச்சுமொழிக்கும்,எழுத்துமொழிக்கும் இடையிலான வேறுபாடுகள் யாவை?

28.எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுக்க.

29.காட்டினால் மனிதர்கள் பெறும் நன்மைகள் யாவை?

30.புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.

.அடிமாறாமல் எழுதுக:                                                                                                                                                        1X4=4

31.அருள்நெறி எனத் தொடங்கும் குறளை அடி மாறாமல் எழுதுக.

.இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக                                                                                         4X1=4

32. அ.மழலை பேசும்----அழகு,  இனிமைத்தமிழ்-----எமது

     ஆ.----ஊருக்குச் சென்றேன் ,----- முல்லையும் இருந்தது

.கலைச்சொற்களை எழுதுக                                                                                                                                       4X1=4

33.MEDIA  34.MAGAZINE   35.PHONOLOGY  36.JOURNALISM          

எ)விரிவானவிடையளிக்க:                                                                                                                                             2X5=10

37.அ.தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

(அல்லது)

   ஆ.காடு பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

38.அ.பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாகத் தொகுத்து எழுதுக.

(அல்லது)

    ஆ.நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.


வினாத்தாளை PDFவடிவில் பதிவிறக்க தாங்கள் 15 வினாடிகள் காத்திருக்க வேண்டும்👇👇




You have to wait 15 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை