9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள் : 01-08-2022 முதல் 05-08-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.ஏறுதழுவுதல் (உரைநடை உலகம்)
1.கற்றல் நோக்கங்கள் :
#தமிழர் பண்பாட்டு நிகழ்வுகளை உணர்தல்.
#தமிழரின் வீர பாரம்பரியத்தைப் பறைசாற்றுதல்.
#உயிர் இறக்கம் மிக்க தமிழர் விழாக்களை அறிதல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# பண்பாட்டுத் தொன்மை மிக்க தமிழர் வரலாறு, பல்வேறு விழாக்களைத் தொன்று தொட்டு நடத்தி வருகிறது. இவற்றுள் 'ஏறு தழுவுதல்' எனும் பண்பாட்டு நிகழ்வும் ஒன்று. என்று கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
# இலக்கியச் சான்றுகள்
#தொல் சான்று
#பண்பாட்டு அடையாளம்
#தமிழர் அறம்
# நம் கடமை
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
*தமிழரின் பண்பாட்டு விழா குறித்துக் கூறுதல்.
* பல்வேறு இலக்கியச் சான்றுகளைப் பட்டியலிடுதல்
*சங்கத் தமிழரின் ஐவகை நிலவாழ்வை விளக்குதல்.
* பத்தி வாரியாகப் படித்துக் கடினச் சொற்களுக்குப் பொருள் கூறுதல்.
* தமிழரின் அறவுணர்வை விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
ஏறுதழுவுதல்

7.மாணவர் செயல்பாடு:
*நிறுத்தற்குரிய றிந்து மாணவர்கள் படித்தல்.
* கடினச் சொற்களுக்கு அடிக்கோடிடுதல்.
எ-கா திமில், நடு கற்கள், புடைப்புச் சிற்பங்கள், சித்திரக்கல், மஞ்சுவிரட்டு, ஸ்பெயின்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1.ஏறு எனும் சொல்லின் பொருள் யாது?
2.தமிழர் வாழ்வு________அடிப்படையாகக் கொண்டது.
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
1.ஏறு தழுவுதல் எனப்படுவது யாது?
2.ஏறு தழுவுதலின் வேறு பெயர்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1.. நீர் எடுப்பவை நிலம் சாடுபவை- வரி இடம்பெறும் நூல் எது?
2..ஏறு தழுவுதல் குறித்த இலக்கியச் சான்றுகள் யாவை?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
#தமிழரின் பண்பாட்டு உணர்வை அறிந்து அதன் அவசியத்தை உணர்கின்றனர்.
#பிற உயிர்களிடம் இரக்கம் காட்டி மதிக்க முனைகின்றனர்.
# சங்கத் தமிழரின் வீர வாழ்வை அறிகின்றனர்.
மாதிரி பாடக்குறிப்பு ஆக்கம்:
க.பொன்னம்பலவாணன்,
தமிழாசிரியர்,
அ.பெ.மே.நி.பள்ளி,
குருவராஜப்பேட்டை,
இராணிப்பேட்டை மாவட்டம்.