10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON SEPTEMBER 2 ND WEEK

     10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 12-09-2022 முதல் 16-09-2022        

மாதம்          செப்டம்பர்   

வாரம்     :   இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.நிகழ்கலை

                                            2. பூத்தொடுத்தல்

                                            3.முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்              

1.கற்றல் நோக்கங்கள்   :

     தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மை யறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்செய்யவும் தங்களின் ப ங்களிப்பை நல்குதல்.

    எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறம றிந்து தானே கற்றல்.

    கவிநயம் நனிசொட்டச்  சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன்அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர் ந்து படித்தல், படைத்தல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  உங்களுக்குப் பிடித்த நாட்டுப்புறக்கலை எது? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

      # சில ஹைக்கூ கவிதைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

      # பிள்ளைத்தமிழ் என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

    # மயிலாட்டம்,காவடியாட்டம்,ஒயிலாட்டம்,தேவராட்டம்,பொய்க்கால் குதிரையாட்டம்,புலி ஆட்டம் தெருக்கூத்து பற்றி அறிதல்

     # பூத்தொடுப்போரின் வாழ்வியலின் இயல்பை அறிந்து கொள்ளுதல்

     #சிற்றிலக்கியங்களின் தன்மையை அறிதல்

     # வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசாமியைப் பாட்ட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழின் கருத்துகளை அறிதல்

5.ஆசிரியர் செயல்பாடு              :

       Ø  நிகழ்க்லைகளின் வகைகளையும்,அவை நிகழ்த்தப்படும் முறைகளையும் தெளிவுற விளக்குதல்

       Ø  இலக்கணக்குறிப்பை எளிமையாக விளக்குதல்

       Ø  பகுபத உறுப்பிலக்கணத்தை ஒவ்வொரு படிநிலையாக விளக்குதல்

       #  சிற்றிலக்கியச் சுவையை மாணவர்களை உணரச்செய்தல்.

6.கருத்துரு வரைபடம்:

நிகழ்கலை


பூத்தொடுத்தல்




முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்

7.மாணவர் செயல்பாடு:

      Ø  சிற்றிலக்கியச் சுவை அறிதல்
     Ø நூல்வெளி பகுதியில் உள்ள முக்கியக் கருத்துகளை அறிதல்
     Ø  இலக்கணக்குறிப்பை அறிதல்
     Ø  நிகழ்கலைகளின் தற்போதைய நிலையை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.கரகாட்டம்----என்றும் அழைக்கப்படும்
2.பூத்தொடுத்தல் பாடலை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.நிகழ்கலைகளைப் பட்டியலிடுக 
2.பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்கள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1..பூத்தொடுத்தல் என்ற கவிதை உணர்த்தும் நீதி யாது?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

        தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மை யறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்செய்யவும் தங்களின் ப ங்களிப்பை நல்குதல்.

    எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.

    கவிநயம் நனிசொட்டச்  சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன்அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்.


       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை