10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON AUGUST 4 TH WEEK

      10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  21-08-2023 முதல் 25-08-2023     

மாதம்          ஆகஸ்டு  

வாரம்     :   நான்காம் வாரம்                                            

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.கம்பராமாயணம்

                                            2. பாய்ச்சல்

                                            3.அகப்பொருள் இலக்கணம்             

1.கற்றல் நோக்கங்கள்   :

   # இயற்கையழகை நுகர்ந்து அதனைப் பாதுகாத்தல்.


   #  கலையைப் போற்றுதல் 

    # சங்க காலத் தமிழரின் வாழ்வியல் நெறிகளை அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

விளக்கப்படங்களைப் பதிவிறக்க

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        # தழுவல் இலக்கியம் குறித்துக் கூறுதல்.


        #  சங்கத் தமிழரின் ஐவகை நிலப் பகுப்புகள் குறித்துக் கூறச் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

   @ சரயுநதி பாய்தல்- மருதமும் இயற்கை அழகும்-கோசல நாட்டின் இருப்பும் இல்லாமையும்- இராமனின் அழகு- குகனின் பண்பு- கும்பகருணனை எழுப்புதல்.


   @ அனுமன் வேடம்- தெருமுனை -சிறுவன் செயல் -கலைஞனின் பண்பு .

   @  நிலமும் பொழுதும்- கருப்பொருள்கள்

5.ஆசிரியர் செயல்பாடு              :

      #  கம்பன் பற்றிய சிறப்புகள், படைப்புகள் குறித்துக் கூறுதல்.


    #    கம்பராமாயணம் பாடலைப் பொருள் விளங்க பாடுதல்.

     #  அரிய சொற்களுக்குப் பொருள் கூறுதல்.

     #  பாய்ச்சல் விரிவானத்திற்குக் குறிப்புகள் அளித்தல்.

     #  அகத்திணை, அன்பின் ஐந்திணை, முதற்பொருள், கருப்பொருள் போன்றவற்றைப் பட்டியலிடுதல்.

6.கருத்துரு வரைபடம்:

கம்பராமாயணம்


பாய்ச்சல்



அகப்பொருள் இலக்கணம்

7.மாணவர் செயல்பாடு:

  #  கடினச் சொற்களுக்கு அடிக்கோடல்.

  # பொருள் விளக்கம் அறிதல்.

  # இராமன், குகன், அனுமன் குறித்துத் தெரிந்து கொள்ளுதல்.

  # கலைகளைப் போற்றுதலின் அவசியம் உணர்தல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. உயிரென உலவும் நதி_____________.
2. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் __________.
3. குறிஞ்சிக்குரிய சிறுபொழுது__________

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

4.ஐந்திணைக்குரிய நிலங்கள் யாவை?
5. கும்பகர்ணனை எழுப்பும் விதம் குறித்துக் கூறுக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

6.வண்மையில்லை யோர் வறுமை  யின்மையால் - இடைஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

*  1030-அழகியலும் ,கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தியுள்ளமையை அறிந்து, செய்யுளைப்படித்தல் ,ஓசை நயங்களை உணர்தல்.
# 1031- கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல்
# 1032- இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்

       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை