9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள் :20-09-2022 முதல் 24-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.சிறுபஞ்சமூலம்,
2. வீட்டுக்கு ஒரு புத்தகசாலை,
3.இடைச்சொல், உரிச்சொல்
1.கற்றல் நோக்கங்கள் :
# பஞ்ச மூலங்கள் குறித்து அறிதல்.
#நூல் வாசிப்புப் பழக்கம் பற்றி உணர்தல்.
#மொழியைப் பிழையின்றி எழுதும் திறன் பெறுதல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# நீதி நூல்கள் சில கூறுக.
# ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றது உண்டா?
# ஞாலம்,மாஞாலம்- வேறுபடுத்துக.
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
# நன்றறிவார் - மூவாது மூத்தவர் .தாமே உணர்வர் - மேதையர்.
#மனவளம் பெற நூல்கள் படிக்கவும்.
# வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும். அதில் நல்ல நூல்கள் இருக்க வேண்டும்.
# ஒரு சொல் பல பொருள், பல சொல் ஒரு பொருள்.
5.ஆசிரியர் செயல்பாடு :
#சிறுபஞ்சமூலம்- பெயர்க் காரணம் கூறுதல்.
#பாடலைப் பொருள் விளங்க படித்துக் காட்டுதல்.
#வீட்டுக்கு ஒரு புத்தக சாலை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கூறுதல்.
#அண்ணாவின் பொன்மொழிகளைப் பட்டியலிடல்.
#இடைச்சொல் வகை, உதாரணம், பயன்பாடு குறித்து விளக்கம் தருதல்.
#உரிச்சொல் வரையறை, பயன்பாடு குறித்துக் கூறுதல்.
6.கருத்துரு வரைபடம்:
சிறுபஞ்சமூலம்
வீட்டிற்கோர் புத்தகசாலை
இடைச்சொல்,உரிச்சொல்
7.மாணவர் செயல்பாடு:
@சொல் பொருள் அறிதல்.
@கல்வியின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல்.
@நூலகத்தின் தேவை பற்றி தெரிந்து கொள்ளுதல்.
@இடைச் சொற்களை அறிந்து பயன்படுத்தும் முறையைப் புரிந்து கொள்ளுதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. சிறு பஞ்சமூலம்_________நூல்களுள் ஒன்று.
2. "வாசிக்காத புத்தகத்தை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" எனக்கூறியவர் ________
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
3.சிறுபஞ்சமூலம்- பெயர் காரணம் தருக.
4. இடைச்சொற்கள் சில கூறுக.
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
5. நூலகம் ஏன் வேண்டும்?
6.நூலகத்தில் எத்துணை நூல்கள் உள்ளன? பிழை அறிந்து சரிசெய்க.
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# நீதி நூல்கள் குறித்து அறிந்து கொண்டனர்.
# நூல் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொண்டனர்.
#உவமையணி குறித்தும் சொற்களின் இலக்கயணவகைகள் குறித்தும் அறிந்துள்ளனர்.