6 TH STD TAMIL MODEL NOTES OF LESSON -SEPTEBER 1 ST WEEK

     6. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        : 05-09-2022 முதல் 09-09-2022        

மாதம்         செப்டம்பர்         

வாரம்     :   முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஆறாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1.மொழி முதல்,இறுதி எழுத்துகள்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø தமிழில் பிழையின்றி எழுதுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø யாருக்கெல்லாம் தமிழில் பிழையில்லாமல் எழுதும் ஆசை உள்ளது? என்ற வினாவைக்கேட்டு,மாணவர்களை விடைகூறச் செய்து, பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • இலக்கண விளக்கப் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

மொழி முதல்,இறுதி எழுத்துகள்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  @ உயிரெழுத்துகள் 12 ம் சொல்லின் முதலில் வரும்.
@ மெய்யெழுத்துகளில் க,ச,த,ந,ப,ம,ங,ஞ,ய,வ ஆகியன் சொல்லின் முதலில் வரும் எழுத்துகள் ஆகும்
@ ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய மெய்கள் சொல்லின் முதலில் வராது.
@ ஞ,ண,ந,ம,ய,ர,ல,வ,ழ,ள,ன ஆகிய மெய்கள் சொல்லின் இறுதியில் வரும்
7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

        1.மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துகள் யாவை?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.மொழிக்கு முதலில் வரும் மெய்யெழுத்துகளைச் சான்றுடன் விளக்குக.
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

மொழிக்கு முதலிலும்,இறுதியிலும் வரும் மெய்யெழுத்துகளுக்குச் சான்றுகளை எழுதி தொகுத்துவரச் செய்தல்

 112.கற்றல் விளைவு:

     Ø தமிழில் பிழையின்றி எழுதுதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை