7 TH STD MODEL NOTES OF LESSON -SEPTEMBER 1 ST WEEK

     7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 05-09-2022 முதல் 09-09-2022      

மாதம்          செப்டம்பர்          

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   திருக்குறள்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø அற இலக்கியங்கள் உணர்த்தும் கருத்துகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø உங்களுக்குப் பிடித்த திருக்குறள் யாது? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • திருக்குறள்களை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

திருக்குறள்


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • பெருநாவலர்,முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப் படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர். 

  • திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

  • அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஒன்பது இயல்களையும் கொண்டது

  • திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை ஆகும்.

  • திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது

@ அழுக்காறாமை
@ புறங்கூறாமை
@ அருளுடைமை
@ வாய்மை
@ இறைமாட்சி

7.வலுவூட்டல்:

விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.திருக்குறளை இயற்றியவர் யார்?
2.திருக்குறள் எவ்வாறு போற்றப்படுகிறது?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.திருக்குறளுக்கு வழங்கப்படும் வேறுபெயர்கள் யாவை?
2.திருவள்ளுவர் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறார்?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.திருக்குறளின் கருத்துகள் வாழ்வில் எந்த அளவிற்கு அவசியம் என விளக்குக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி

பாடப்பகுதியில் உள்ள திருக்குறள்களை மனப்பாடம் செய்துவரச் சொல்லுதல்

12.கற்றல் விளைவு

    Ø அற இலக்கியங்கள் உணர்த்தும் கருத்துகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை