7. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 05-09-2022 முதல் 09-09-2022
மாதம் : செப்டம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø அற இலக்கியங்கள் உணர்த்தும் கருத்துகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உங்களுக்குப் பிடித்த திருக்குறள் யாது? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
திருக்குறள்களை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
பெருநாவலர்,முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப் படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பிரிவுகளையும் ஒன்பது இயல்களையும் கொண்டது
திருக்குறளின் பெருமைகளைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
திருக்குறள் உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
பாடப்பகுதியில் உள்ள திருக்குறள்களை மனப்பாடம் செய்துவரச் சொல்லுதல்
12.கற்றல் விளைவு
Ø அற இலக்கியங்கள் உணர்த்தும் கருத்துகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்