6 TH STD TAMIL 3 RD TERM QUESTION AND ANSWERS -UNIT 1

 

6.ஆம் வகுப்பு-தமிழ்-மூன்றாம் பருவம்

வினா விடைகள்

இயல்-1 கவிதைப்பேழை- பாரதம் அன்றைய நாற்றாங்கால்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

அ) திருவாசகம் ஆ) திருக்குறள்  இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை

2.காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

அ) காவிரிக்கரைஆ) வைகைக்கரை இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்ரை

3. கலைக்கூடமாகக் காட்சி தருவது

அ ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம் இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்

4. நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) நூல்+ஆடை ஆ) நூலா+டை இ) நூல்+ லாடை ஈ) நூலா+ஆடை

5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க இ) எதிரொலிக்க ஈ) எதிரொலிக்க

நயம் அறிக

1.பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை: மெய்களை,மெய்யுணர்வு

           ன்னை, அன்னிய

2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.

விடை: மெய்களை,மெய்யுணர்வு

           ன்னை, ன்னிய

           தெய்வ,தேசம்

3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை: நூலாடை , மேலாடை

           பூத்தொடுக்கும்,கேட்கும்

குறுவினா

1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை: வள்ளுவர்.காளிதாசர்,கம்பர்

2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

விடை: மேற்கில் தோன்றும் நதிகள் கிழக்குவரை பாய்ந்து வளம்சேர்க்கின்றன.

சிந்தனை வினா

நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.

விடை:

ü  நாட்டுப்பற்றுடையவராக இருத்தல்

ü  பொதுநல நோக்கோடு செயல்படுதல்

ü  கடமைகளைச் சரிவரச் செய்தல்

ü  பல்துறை அறிவுபெற்று விளங்குதல்

ü  கல்வியறிவில் சிறந்து விளங்குதல்.

 

 

இயல்-1 உரைநடை உலகம்-தமிழ்நாட்டில் காந்தி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் _____________

அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்

2.காந்தியடிகள் ____ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

அ) நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்

பொருத்துக

1. இலக்கிய மாநாடு – சென்னை

2. தமிழ்நாட்டுக் கவிஞர்_ பாரதியார்

3. குற்றாலம் - அருவி

4. தமிழ்க் கையேடு – ஜி.யு.போப்

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. லோசனை – பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட வேண்டும்.

2. பாதுகாக்க – இயற்கையைப் பாதுகாத்தல் நமது கடமை.

3. மாற்றம் – வாழ்க்கையில் அவ்வப்போது மாற்றம் வந்துகொண்டே இருக்கும்.

4. ஆடம்பரம் – நாம் ஆடம்பரம் இல்லாமல் வாழவேண்டும்.

குறுவினா

1.காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

விடை: எல்லா மக்களுக்கும் செல்ல அனுமதி இல்லாததால் நுழையவில்லை.

2.காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

விடை: ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடும்,திருக்குறளும் காந்தியடிகளுக்குத் தமிழ்கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தின.

 

சிறுவினா

1.காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.

விடை:

ü  காந்தியடிகள் தமிழகத்தில் பயணம் செய்யும்போது உழவர்கள் அரைகுறை ஆடையுடன் இருப்பதைக் கண்டார்.

ü  இந்தியாவில் பல ஏழைகள் உடையின்றி இருக்கும்போது,தான் ஆடம்பர ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என எண்ணினார்.

2.காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

ü  ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடும்,திருக்குறளும் காந்தியடிகளுக்குத் தமிழ்கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

ü  1937ல் சென்னையில் நடந்த இலக்கியவிழா ஒன்றில் உ.வே.சாவிடம் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார்.

சிந்தனை வினா

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை ?

விடை:

ü  எளிமை

ü  சிக்கனம்

ü  நாட்டுப்பற்று

 

 இயல்-1 வேலுநாச்சியார்

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்த நிகழ்வைச் சுருக்கமாக எழுதுக.

v  வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.

v  காளையார் கோவிலில் நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரிடம் போரிட்டு மரணம் அடைந்தார்.

v  வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார்.

v  அம்முயற்சிக்கு ஐதர் அலி படைகளை அனுப்பி உதவினார்.

v  காளையார் கோவிலில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் வேலுநாச்சியாரின் கூட்டுப்படை ஆங்கிலேயரைத் தோற்கடித்தது.

v  இப்போரில் மருது சகோதரர்கள்,குயிலி,உடையாள் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.

v  இறுதியாக அனைவரது ஒத்துழைப்புடன் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்தார்.

 

இயல்-1 நால்வகைச்சொற்கள்

கற்பவை கற்றபின்

பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக.

1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர்.

2. நாள் தோறும் திருக்குறளைப் படி.

3. "ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது" என்றார் ஆசிரியர்.

விடைகள்:

  பெயர்ச்சொற்கள்: வளவன்,தங்கை,பேருந்து,திருக்குறள்,ஏழை,ஆசிரியர்

  வினைச்சொற்கள்: ஏறினர்,படி,என்றார்

  இடைச்சொற்கள் : உம்,ஐ,கு.

  உரிச்சொற்கள்: மா,சால

கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக.

  மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

  சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

விடை: மற்று,கு

சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக.

1. அ) படித்தாள்  ஆ) ஐ      இ) மற்று        ஈ) கு

2. அ) மதுரை   ஆ) கால்  இ) சித்திரை    ஈ) ஓடினான்

3. அ) சென்றாள் ஆ) வந்த  இ) சித்திரை ஈ) நடந்து

4. அ) மா   ஆ) ஐ    இ)உம்   ஈ) மற்று

குறுவினாக்கள்

1. சொல் என்றால் என்ன ?

விடை: ஓர் எழுத்து தனித்தோ,ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்.

 

2. சொற்களின் வகைகளை எழுதுக.

விடை: இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

3. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?

விடை: பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும்.

 

இயல் 1 - மொழியை ஆள்வோம்

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்க ளுக்கு விடை எழுதுக

1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

விடை: வ.உ.சிதம்பரனார்

2.வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ?

விடை: பாரதியார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார் ?

விடை: பாரதியார்

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை ?

விடை: வழக்கறிஞர் , எழுத்தாளர் , பேச்சாளர் , தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார் .

5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை ?

விடை: தமிழ்,ஆங்கிலம்.

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக

1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.

விடை: ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள்.

விடை: ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது ஒருநாள்.

3. அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

விடை: அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.

4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை .

விடை: அது நகரத்திற்குச் செல்லும் சாலை .

5. அது ஒரு இனிய பாடல்.

விடை: அஃது ஓர் இனிய பாடல்.

அகரவரிசைப்படுத்துக

பெண்கள், பாரதம், புதுமை , பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு

விடை: பழங்கள், பாரதம், பின்னிரவு, பீலி, புதுமை, பூமி, பெண்கள், பேருந்து, பையன், பொதுக்கூட்டம், போக்குவரத்து.

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை:

            மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை:

      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,

       “ முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 

         மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.

தேசிய ஒருமைப்பாடு-சுதந்திரத்தின் அடித்தளம்:

இன்று நாம் அனுபவிக்கும் சுதந்தரம் எளிதாகக் கிடைத்ததில்லை. ஒருமைப்பாட்டு உணர்வு என்னும் உரமிட்டு, கண்ணீரும் செந்நீரும் சிந்தி, எண்ணற்றோர் இன்னுயிர்த் தியாகம் செய்து சொல்ல முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கிப் பெற்றதாகும். இவ்வாறு பெற்ற விடுதலைக்கு அடித்தளமாக அமைந்தது தேசிய ஒருமைப்பாடே ஆகும்.

முடிவுரை

நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 

  எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.

ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!

உலக அரங்கில் உயர்வோம்!

இயல் 1 – மொழியோடு விளையாடு

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு.

விடை: வடக்குண்டு,வடக்கில்லை

           பந்துண்டு,பந்தில்லை

           பாட்டுண்டு,பாட்டில்லை

விடைகள்:

·        பாரி வீட்டுக்கு வந்தான்

·        எழிலி வீட்டுக்கு வந்தாள்

·        மாணவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்

·        மாடு வீட்டுக்கு வந்தது

·        மாடுகள் வீட்டுக்கு வந்தன

விடைகள்:

  பெயர்ச்சொல்: குமரன்,கரம்,மாடு,பேருந்து,சிவன்,தாய்,வண்டி,செறு,பண்,பசி,நகரம்

  வினைச்சொல்: நடக்கிறாள்,செய்தான்.

  இடைச்சொல்: கு,ஐ,உம்,மற்று,தான்

  உரிச்சொல்: உறு,மாநகரம்.

PDF வடிவில் பதிவிறக்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை