10.ஆம் வகுப்பு-தமிழ்
முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள்
(திருப்பத்தூர் மாவட்டம்)
முதல் திருப்புதல் தேர்வு-2023
திருப்பத்தூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
ஈ.வானத்தையும்,பேரொலியையும் |
1 |
2.
|
ஆ.கொன்றை
வேந்தன் |
1 |
3.
|
அ.அகவற்பா |
1 |
4.
|
ஆ.அன்மொழித்தொகை |
1 |
5.
|
ஈ.சருகும்,சண்டும் |
1 |
6.
|
அ.பால்வழுவமைதி |
1 |
7.
|
இ.நக்கீரனார் |
1 |
8.
|
ஈ.மெய்க்கீர்த்தி |
1 |
9.
|
இ.சதாவதானி |
1 |
10. |
ஆ.வழாநிலை |
1 |
11.
|
இ.
ஜூன் 15 |
1 |
12. |
ஆ.சிலப்பதிகாரம் |
1 |
13. |
அ.பகர்வணர்,பட்டினும் |
1 |
14. |
ஈ.நெசவாளர் |
1 |
15. |
ஈ.
இளங்கோவடிகள் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.தப்பாட்டம்
எத்தகைய ஆட்டக் கூறுகளைக் கொண்டது? ஆ.ஒயிலாட்டத்தில்
பயன்படுத்தpபடும் இசைக் கருவிகள் யாவை? |
2 |
17 |
ü காடு
அதை நாடு,அப்போதுதான் செழிக்கும் நாடு ü மரங்கள்
மானு டத்தின் நரம்புகள் |
2 |
18 |
பிற திராவிட
மொழிச்சொற்கள் தமிழில் உள்ளன. |
2 |
19 |
இளம்பயிர்
வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை
இழந்து வாடினான் |
2 |
20 |
இயந்திரமனிதன்,செயற்கைக்கோள் |
2 |
21 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன் றுண்டாகச்
செய்வான் வினை |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
வெட்சி-கரந்தை ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை ,தும்பை - வாகை |
2 |
23 |
|
2 |
24 |
அ.தொலைவில் நிற்க ஆ.மீண்ட இன்பம் |
2 |
25 |
அ.ஒப்பெழுத்து ஆ.உயிரெழுத்து |
2 |
26 |
அ.குழலி
தனது தோட்டினைத் தொட்டுப்பார்த்தாள் ஆ.மாலையில்
மலைமீது ஏறினான். |
2 |
27 |
தணி+த்(ந்)+த்+அ+து தணி-பகுதி,த்-சந்தி, ந்-விகாரம், த்- இறந்தகால
இடைநிலை , அ-சாரியை , து-படர்க்கை வினைமுற்று விகுதி |
2 |
28 |
முதல்நிலை,இடைநிலை,கடைநிலை |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
ü காற்று
தன்னைப்பற்றிப் பேசினால் ü மரம்
தன்னைப்பற்றிப் பேசினால் ü ஆறு
தன்னைப்பற்றிப் பேசினால் ü உழைப்பு
தன்னைப்பற்றிப் பேசினால் ü முயற்சி
தன்னைப்பற்றிப் பேசினால் ü மலை
தன்னைப்பற்றிப் பேசினால் |
3 |
30 |
அ.ஜெர்மன் ஆ.நாளிதழ் இ.பரந்துபட்ட அறிவு |
3 |
31 |
கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச்
சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில்
கொண்டு மதிப்பெண் வழங்குக. |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||
32 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
||
33 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
||
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
3 |
|
36 |
புளிமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய் கூவிளம்
தேமா மலர். |
3 |
37 |
நிரல்
= வரிசை; நிறை= நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி
அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது
நிரல்நிறைஅணி எனப்படும். |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) விளம்பரம்: சிலப்பதிகார
மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. வணிகம்
செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது.
ஆனால் இன்றளவிலோ வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும்
பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம்
விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில்
நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து
பண்டமாற்றம் செய்தனர்.ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில்
ஒரு பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம்
கூறும் மருவூர்ப்பாக்கத்தில், அகில் சந்தனம் உள்ளிட்ட நறுமணப்
பொருள் விற்பவர்களும், தானியங்கள் விற்பவர்களும், உப்பு விற்பவர்களும்,எண்ணெய்
விற்பவர்களும், பலவிதமான இறைச்சி விற்பவர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய
சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு
இடங்களில் உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும்
ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி நுகர்வோரை பாதிப்படையச்
செய்கின்றனர். பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம்
வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும்,
தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும்
அத்தொழிலைc செய்வோர் பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப்
பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம்
பெயர்ந்து உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை
மகிழ்விக்க பாணன்,பாடினி,விறலி,கூத்தர் உள்ளிட்ட இயல் இசை நாடகக்
கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும் வணிக வளாகங்களில் மக்களையும்
பொழுதுபோக்கிற்காக நிறைய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. (அல்லது) ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
5 |
39 |
ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். (அல்லது) ஆ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü அங்க
அடையாளங்கள் என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
நூலக உறுப்பினர் படிவம் மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு மைய / உறுப்பினர் சேர்க்கை அட்டை அட்டை எண்:
1234
உறுப்பினர் எண்:321 1. பெயர் : செழியன் 2. தந்தை பெயர் : கலையரசன் 3. பிறந்த நாள் : அ அ – அ அ- அ அ அ அ 4. வயது : ஆ ஆ ஆ 5. படிப்பு : 10.ஆம் வகுப்பு 6. தொலைபேசி / அலைபேசி எண் : 9876543210
7. முகவரி :
7 பாரதி தெரு ,ஊசூர், மதுரை மாவட்டம் (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) நான் மதுரை மைய நூலகத்தில்
உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. 100 சந்தா தொகை ரூ. 25 ஆக மொத்தம் ரூ. 125 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன். இடம்: மதுரை நாள்: 19-01-2023 செழியன்
தங்கள்
உண்மையுள்ள
ஆஆஆ
பிணையாளர் கையொப்பம் |
5 |
42 |
அ)
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட
ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால்
தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆ) 1. நான் செல்லும் வழி இன்சொல்
வழி. 2. என் நண்பர்களை இன்சொல் வழியில் நடக்கச் செய்வேன். 3. தீய செயலில் ஈடுபட விடமாட்டேன் 4. பிறர் மனம் மகிழும்படி
நடப்பேன்.பிறருக்கு நன்மை செய்வேன். |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது கவிதாஞ்சலி கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்: ”பூமித் தாயே என்
அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக” எனக் கருணையன் வேண்டினான்.
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன்
அன்னையின் உடலை மண் இட்டு மூடி அடக்கம் செய்தான்.அதன்மேல் மலர்களையும் தன்
கண்ணீரையும் ஒருசேரப் பொழிந்தான். கருணையன்
தாயை இழந்து வாடுதல்: என் தாய் கூறும் உண்மையான
சொற்களையே மழைநீராகக் கொண்டு தாயின் மார்பில் ஒரு மணிமாலைபோல் அசைந்து அழகுற
வாழ்ந்தேன்.இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி
இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த வாடுகிறேன் என்று
கருணையன் வருந்தினான். கருணையனின்
தவிப்பு: ”எனது
மனம் பரந்த மரக்கிளையில் இருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல் வாடுகிறது.
தீயையும்,நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான புண்ணின்
வலியால் வருந்துவது போன்றது எனது துயரம்.துணையைப் பிரிந்த பறவையைப் போல்
நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே
விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான். தனித்து
விடப்பட்ட கருணையன்: “எனக்கு
உயிர் பிழைக்கும் வழி தெரியவில்லை, எனது உடல் உறுப்புகள் இயங்காத நிலையாய் நான்
உணர்கிறேன்.உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொள்ளும் வழிகளை என்னால் அறிய
முடியவில்லை. காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன். எனது தாய் தன்
கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிந்துள்ளேன். என்னைத் தனியாகத் தவிக்க விட்டு
விட்டு எனது தாய் மட்டும் சென்று விட்டாளே” என்று அழுது புலம்பினான் பறவைகளும்,வண்டுகளும்
கூச்சலிட்டன: நவமணிகள் பதித்த மணி
மாலைகளைப் பிணித்தது போன்று, நல்லறங்களை மாலையாக அணிந்த கருணையன்
இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார். அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும், வண்டுகளும் அழுவதைப்போன்றே
கூச்சலிட்டன. (அல்லது) ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச்
சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக்
கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
அ) கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி
இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த
இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.அந்த
வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச
தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில்
ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த
இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா
தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். முடிவுரை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை
கொடுத்து மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. (அல்லது) ஆ. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: அறிவியல் வளர்ச்சியால், உலகம் வேகமாக இயங்கி
கொண்டிருக்கிறது. இந்நிலையில், மனித நேயம் என்பது மங்கி
தான் காணப்படுகிறது. ஆதரவின்றி வாழ்வது இரங்கத் தக்கதாகும்.மனிதநேயம் நலிந்து
வரும் இவ்வுலகில், எங்கேயாவது எப்போதாவது மனிதநேயம்
அரும்பத்தான் செய்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாத
ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர்.
இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி
தனது “ ஒருவன் இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்
ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். விறகு
கடையில், வேலை செய்தவன் ஆறுமுகம்.வீரப்பன் கட்டிட
மேஸ்திரியாக கூலி வேலை செய்யும் தொழிலாளி. நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அங்கு குப்புசாமி ஒருவரும் மனமுவந்து ஏற்றுக்
கொள்ளவில்லை. அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். கடிதத்தில் இருந்த செய்தி: அக்கடிதத்தில், குப்புசாமி ஊரை விட்டுப் போனது தன்
உயிரே போய்விட்டது போல இருந்தது என்று கூறுகிறான். மேலும், குப்புசாமி தினமும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதாகவும்
எழுதியிருந்தான்.கடன் வாங்கி மூன்று ரூபாய் கொடுத்து
அனுப்பியுள்ளதாகவும், நேரில் வருவதைவிட, பேருந்துக்கு ஆகும் செலவு குப்புசாமிக்கு உதவியாக இருக்கும் என்பதால்,
பணத்தைக் கொடுத்து விட்டதாகவும் எழுதியுள்ளான். இதை மட்டும் வெளிப்படுத்தவில்லை மனிதநேயம் இல்லாமல் இருந்த தங்கவேலுவின்
பக்கத்து வீட்டு நபரையும் மனமாற செய்தது. ஆறுமுகம்: குப்புசாமி வேலைசெய்த சைக்கிள் கடைக்கு எதிரே இருந்த விறகுக் கடை
ஒன்றில் கூலி வேலை செய்யும் ஏழைத் தொழிலாளி தான் ஆறுமுகம்.வீரப்பன் அளவிற்கு
குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர் குப்புசாமியை
மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்த வுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4
சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு
ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
45 |
அ) முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில்
பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும்
இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு
30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும்
பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும்
நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு
பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன்
விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும்
நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற
அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். (அல்லது) ஆ) தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு
,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |