10 TH STD TAMIL SECOND REVISION EXAM QUESTION AND ANSWER KEY (VILLUPPURAM, 2023)

இரண்டாம் திருப்புதல் தேர்வு-2023 விழுப்புரம் மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇

இரண்டாம் திருப்புதல் தேர்வு-2023 விழுப்புரம் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

2.    

ஆ. அன்மொழித்தொகை

1

3.     

ஈ. சிற்றூர்

1

4.     

ஈ. இலா

1

5.    

இ. கல்வி

1

6.    

இ. ஐந்து

1

7.     

இ. உழவு,ஏர்,மண்,மாடு

1

8.    

இ. உருவகம்

1

9.    

இ. உரிச்சொல் தொடர்

1

10.   

ஈ . உறவினர்

1

11.    

அ. போது+அவிழ்

1

12.  

ஆ. கு.ப.ராஜகோபாலன்

1

13.  

இ. ஏர் புதிதா?

1

14.  

இ. நண்பா

1

15.  

ஆ. விரைந்து

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

அ. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர் யார்?

ஆ. இளங்கோவடிகள் எம்மரபைச் சேர்ந்தவர்?

2

17

காற்று உயிருக்கு நாற்று, தூய காற்று அனைவரின் உரிமை

2

18

    நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்று விருப்பமான புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு பட்டினி கிடந்திருக்கிறார். இவையே மா.பொ.சி வறுமையிலும் படிப்பின் மீதும் நாட்டம் கொண்டவர் என்பதற்குச் சான்றாகும்

2

19

 சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி

2

20

குலேசபாண்டியன் , இடைக்காடனார்

2

21

குற்றம் இலனாய் குடிசெய்து வாழ்வாரைச்

சுற்றமாச் சுற்றும் உலகு.

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

இன்னிசையளபெடை – ஓசை குறையாதபோதும் நெடில்கள் அளபெடுப்பது.

2

23

வெட்சி-கரந்தை  , வஞ்சி-காஞ்சி, நொச்சி-உழிஞை

2

24

   பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபடவருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

2

25

அ. முருகனும், முகிலனும் தாமரை இலை தண்ணீர்போல இருந்தனர்.

ஆ. தாய் தனது குழந்தையைக் கண்ணினைக்காக்கும் இமைபோலக் காத்தாள்

2

26

அ. வயல் ,பகை  ஆ.சூரியன்

2

27

அமர்+த்(ந்)+த்+ஆன்   அமர்-பகுதி  ,த்-சந்தி, ந்- விகாரம் ,த்-இறந்தகால இடைநிலை  ,அ- பெயரெச்ச விகுதி

2

28

பள்ளி விட்டதும் வீட்டிற்குச் சென்றான்.

 

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ)நாற்று- நெல் நாற்று நட்டேன்.

ஆ)கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

இ)பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

ஈ)வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

உ)பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

30

    ஒரேநிறத் துணியை முண்டாசுபோலக் கட்டியும் காலில் சலங்கை அணிந்தும் கையில் வைத்துள்ள சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஒயிலாக ஆடும் குழு ஆட்டமே ஒயிலாட்டம்.

3

31

அ. தமிழர்

ஆ. வீரமற்றோர்,புறமுதுகிட்டோர்,சிறார்,முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை

இ.போர் அறம்

 

3

 

                                                                  பிரிவு-2                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

முல்லை நிலம்-வரகு,சாமை,முதிரை.

 மருத நிலம் -செந்நெல்,வெண்ணெல்

3

33

இடம்: நாகூர் ரூமியால் எழுதப்பட்ட “சித்தாளு” கவிதையின் வரிகள் இவை

பொருள்: சித்தாளு அனுபவிக்கும் துன்பங்கள் செங்கற்களுக்குத் தெரியாது

விளக்கம்: கற்களைச் சுமந்தால் மட்டுமே அடுத்தவேளை உணவு என்பதால் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைக்கூட பொருட்படுத்தாமல் உழைக்கும் சித்தாளின் மனச்சுமை யாருக்கும் புரியாது.

3

34


அ.

 

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

      வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

      எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

   போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

             ஒழுக்கமும் வழிபடும் பண்பே

ஆ. 

 

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோ மரகதமோ மறி கடலோ மழைமுகிலோ

     யோவிவன் வடிவென்ப தோரழியாவழ குடையான்.

3

 

                                                               பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35


3

36

தேமாங்காய்  தேமாங்காய்  தேமாங்காய்  கருவிளங்காய்

தேமாங்காய்  தேமா  மலர்.

3

37

தீவகம் – விளக்கு.

3

                                                                   பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

ü  ஆற்றுப்படுத்துதல் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது.

ü  ஆசிரியர்களும்,குறிப்பிட்ட துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர்.

ü  இணையதளம் கூட மாணவர்களுக்கும்,பிறருக்கும் பல நல்வழிகளைக் காட்டுகிறது.

(அல்லது)

ஆ)

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. வணிகம் செய்யும் மக்கள் வீதிகளில் அமர்ந்து செய்யும் வணிகமே விளம்பரமாகச் செயல்பட்டது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் செய்தித்தாள், தொலைக்காட்சி,துண்டு பிரசுரம் ஆகிய ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர்.ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளில் ஒரு பொருள் வாங்குவதற்குப் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்,  அகில் சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருள் விற்பவர்களும், தானியங்கள் விற்பவர்களும், உப்பு விற்பவர்களும்,எண்ணெய் விற்பவர்களும், பலவிதமான இறைச்சி விற்பவர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.அங்காடிகள் அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் ஆகும்செலவினத்தை,பொருட்களின் விலையை ஏற்றி  நுகர்வோரை பாதிப்படையச் செய்கின்றனர்.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் உள்ள வணிக வீதிகளில்,அங்கு வரும் மக்களை மகிழ்விக்க  பாணன்,பாடினி,விறலி,கூத்தர்  உள்ளிட்ட இயல் இசை நாடகக் கலைஞர்கள் இருந்தனர். இன்றளவிலும்  வணிக வளாகங்களில் மக்களையும் பொழுதுபோக்கிற்காக  நிறைய அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

5

39

உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

 

:                                                               இப்படிக்கு,

                                        தங்கள் உண்மையுள்ள,

                                                            அ அ அ அ அ

இணைப்பு

   . 1. விலை இரசீதுநகல்

     2. விலைப்பட்டியல்நகல்

இடம் : சேலம்

நாள் : 04-03-2021

 

 

                    பெறுநர்

                         உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

              உணவு பாதுகாப்பு ஆணையம்,

              சேலம் – 636001

 

 

உறை மேல் முகவரி:

 

 

 (அல்லது)

ஆ)

ü  அனுப்புநர் முகவரி

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்

உறுப்பினர் சேர்க்கை   விண்ணப்பப் படிவம்

 

1.     மாணவரின் பெயர்                                                         : செ.மங்கை     

2.    பாலினம்                                                                      : பெண்           

3.    பிறந்த நாள்                                                                   : அ அ -அ அ – அ அ அ அ 

4.    தேசிய இனம்                                                                :இந்தியன்       

5.    இரத்த வகை                                                                : O+   

6.    உயரம் மற்றும் எடை                                                      : 172 செ.மீ/60 கி.கி        

7.    பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                                          : செல்வம்        

8.    வீட்டு முகவரி                                                                : 18,வள்ளுவர் தெரு,

                                                                                                மதுரை          

9.    தொலைபேசி / அலைபேசி எண்                                         :  9876543210

10.   இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு                                      : பத்தாம் வகுப்பு

11.    பள்ளியின் முகவரி                                                          : அரசினர் மேனிலைப்பள்ளி, மதுரை-1

12.   சேர விரும்பும் விளையாட்டு                                              : பூப்பந்து விளையாட்டு   

                  

                                                                                                                                                                            செ.மங்கை                               

 மாணவரின் கையெழுத்து

 

5

42

அ) விடைக்கேற்ற வினாவைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

ஆ)

   1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

  2. மொழி என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும்ரீடா மேக் ப்ரெளன்

                                                                                                   

5

                                                                 பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 அ)    

   தமிழ்ச்சொல் வளம்:

v தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v திராவிட மொழிகளில் மூத்தது.

v பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v தமிழ்மொழி 1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது.

v பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

 (அல்லது)

ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

8

44 அ

கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

(அல்லது)

ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

45

அ) முன்னுரை:

   உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.மூன்று தமிழ்ச்சங்கங்களும் கடல்கோளால் அழிந்து போயின.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.

 (அல்லது)

ஆ) தரப்பட்ட குறிப்புகள் அல்லது தலைப்புகள் ,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு ,பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக.

 

8

 

 விடைக்குறிப்பை PDF  வடிவில் பதிவிறக்க👇

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை