10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE 4 TH WEEK(2023-24)

             10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 19-06-2023 முதல் 24-06-2023        

மாதம்         ஜூன்

வாரம்     :  நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1. கேட்கிறதா என்குரல்

                                             2. காற்றே வா

1.கற்றல் நோக்கங்கள்   :

     காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.

      Ø இயற்கை ஆற்றல்களை அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  கவிதை என்பதன் பொருள் உணர்த்தி பாடத்தை அறிமுகம் செய்தல்

       Ø  உயிரை உள்ளிருத்தும் காற்று, ஓர் உருவம்   கொண்டு  நம்மிடம் பேசினால்…எவ்வாறு இருக்கும் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

      உயிராக நான் ,பலபெயர்களில் நான்,இலக்கியத்தில் நான், நான்கு திசையிலும் நான்,முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ,தடன் பதிப்பேன் நான் என்னும் தலைப்புகளில் காற்று மனித வாழ்விற்கு எவ்வளவு நலன்களைச் செய்கிறது என விளக்குதல்

     காற்றே , வா. மகரந்தத் தூளைச்சுமந்து கொண்டு, மனதை மயலுறுத்து கின்ற     இனிய வாசனை யுடன் வா;  இலைக ளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த   ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு காட்டு  

                     என்று காற்றினை அழைக்கிறார் பாரதியார்

5.ஆசிரியர் செயல்பாடு              :

        Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

       Ø  காற்றே வா பாடலின் பொருளை உணர வைத்தல்

       Ø  இலக்கணக்குறிப்பைப் புரிய வைக்

       Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

       Ø  காற்று பல்வேறு வடிவங்களின் எவ்வாறு மனிதர்களுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்குதல்

       Ø  காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

கேட்கிறதா என்குரல்

காற்றே வா

7.மாணவர் செயல்பாடு:

         Ø  வசன கவிதையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
        Ø  பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்
       @ காற்று எவ்வெவ்வடிவங்களில் மனிதனுக்குப் பயன்படுகிறது என்பதை அறிதல்
       Ø  காற்று ஆற்றல் வடிவில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிதல்
       @ பருவமழை எவ்வாறு உருவாகிறது என அறிதல்.

8.வலுவூட்டல்:

     Ø  கவிதையை மீண்டும் வாசித்தல்

          Ø  விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
     Ø வசன கவிதையை அறிமுகப்படுத்தியவர் யார்?
     Ø ப்ராண ரஸம் என்பதன் பொருள் யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
     Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
     Ø  உலக காற்றுநாள் எப்போது கொண்டாடப் படுகிறது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
      @ பாரதியார் காற்றிடம் வேண்டுவது யாது?
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       1006 இயற்கையின் இன்றியமையாத ஆற்றலான காற்றின் தேவையையும் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வையும் ஊட்டத்தக்கவாறு மொழியைப் பயன்படுத்துதல்.

Ø          @  1007 கவிதைகளிலும் கதைகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளைச்

 சுவையுணர்ந்து படித்தல், அவற்றின் மொழிக் கூறுகளை உணர்ந்து பேசுதல்,

எழுதுதல் மற்றும் அவை போன்ற படைப்புகளை உருவாக்குதல்.

10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க






 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை