7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 24-07-2023 முதல் 28-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.புலி தங்கிய குகை (கவிதைப்பேழை)
2. பாஞ்சை வளம் (கவிதைப்பேழை)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø கதைப்பாடல் படித்து நயங்களை அறிதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்க காலத்தா ய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செ ய்தியை அறியலாம்.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
செய்யுள் மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
புலி தங்கிய குகை
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி
நாட்டுப்புறக் கதைப்பாடல்களை எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
# 709- ஒன்றைப் படித்து முழுமையான பொருளை உணர்ந்த அதன் பயன்பாட்டினை கூறுதல்
# 712 - பல்வேறு வகை படித்ததற்கான செயல்பாடுகளில் அமைந்துள்ள வெவ்வேறு சொற்கள் சொற்றொடர்கள் சொலவடைகள் ஆகியவற்றையும் புரிந்துகொண்டு நயம் பாராட்டுதல்
# 713 - பல்வேறு கதைகள் /பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை ,உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்