கல்வி வளர்ச்சிநாள்- சிறப்பு கட்டுரைப்போட்டி
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் அருமை மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். ஆண்டுதோறும் ஜூலை 15 ஆம் நாளைக் கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இது யாருடைய பிறந்தநாள் என்று நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆம். கல்விக்கண் திறந்த முதல்வர் திரு காமராஜர் ஐயா அவர்களின் பிறந்த நாளே கல்வி வளர்ச்சி நாளாகும்.
இக்கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, தமிழ்ப்பொழில் வலைதளம் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.போட்டி குறித்த விவரங்கள்:
- கல்வி வளர்ச்சி நாள் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அனுமதி இலவசம்.
- ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பெறலாம்.
- 6-8 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 3 பக்கங்களும்,
- 9-10 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 5 பக்கங்களும்,
- 11-12 ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்தபட்சம் 7 பக்கங்களும் A4 தாளின் SINGLE SIDE மட்டும் எழுதி SCAN செய்து PDF வடிவில் அனுப்பவும்
- 12-07-2023 ஆம் தேதிக்குள்ளாக மாணவர்களின் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
முதல் மூன்று சிறந்த கட்டுரைகளுக்கு முறையே தலா 500 ரூபாய், 300 ரூபாய், 200 ரூபாய் பரிசாக வழங்கப்படும். மேலும் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றதற்கான இலவச மின்சான்றிதழ் அவரவர் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு:
கல்வி வளர்ச்சி நாள் (அல்லது) காமராசரின் கல்விப் பணிகள்
கட்டுரையை அனுப்பும் முறை:
கட்டுரையைப் பின்வரும் இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கட்டுரையை எழுதியவர்களுக்கான பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும். கட்டுரையின் முகப்புத் தாளில் மாணவர்கள் அவர்களது பெயர்,வகுப்பு,பிரிவு,பள்ளி,ஊரின் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்ற முழு விவரங்களையும் எழுத வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று கட்டுரைகள் மற்றும் அதை எழுதியவர்களின் பெயர் தமிழ்ப்பொழில் வலைதளத்தில் கல்வி வளர்ச்சி நாள் அன்று வெளியிடப்படும்.
மேலும் உடனடித் தகவல்களுக்கு தமிழ்ப்பொழில் புலனத்தில் இணைக👇