10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 14-09-2022 முதல் 18-09-2022
மாதம் : ஆகஸ்டு
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பன்முகக் கலைஞர்
2. பூத்தொடுத்தல்
3.முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ்
1.கற்றல் நோக்கங்கள் :
கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப்பற்றி அறிவதன் வாயிலாகச் சமூகத்திற்குத் தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்க முன்வருதல்
எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறம றிந்து தானே கற்றல்.
கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன், அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர் ந்து படித்தல், படைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø கலைஞர் என்று அழைக்கப்படுபவர் யார்? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
# சில ஹைக்கூ கவிதைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
# பிள்ளைத்தமிழ் என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
# நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ்க் கலைஞர், கவிதைக் கலைஞர், செம்மொழிக் கலைஞர்
# பூத்தொடுப்போரின் வாழ்வியலின் இயல்பை அறிந்து கொள்ளுதல்
# சிற்றிலக்கியங்களின் தன்மையை அறிதல்
# வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமாரசாமியைப் பாட்ட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழின் கருத்துகளை அறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø கலைஞரின் பன்முகத் திறமைகளைத் தெளிவுற விளக்குதல்
Ø இலக்கணக்குறிப்பை எளிமையாக விளக்குதல்
Ø பகுபத உறுப்பிலக்கணத்தை ஒவ்வொரு படிநிலையாக விளக்குதல்
# சிற்றிலக்கியச் சுவையை மாணவர்களை உணரச்செய்தல்.
6.கருத்துரு வரைபடம்:
பன்முகக் கலைஞர்
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
1027 - தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மை யறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச்செய்யவும் தங்களின் பங்களிப்பை நல்குதல்.
1028- எளிய சொற்களும் கருத்துகளும் கவிதைப் பொருளாகும் திறமறிந்து தானே கற்றல்.
1029- கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாட ப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன்அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்.