10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 3 RD WEEK

          10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 16-10-2023 முதல் 20-10-2023        

மாதம்         அக்டோபர்  

வாரம்     :  மூன்றாம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.புறப்பொருள் இலக்கணம் 

                                            2.சங்க இலக்கியத்தில் அறம்

                                            3.ஞானம்   

1.கற்றல் நோக்கங்கள்   :

     @ பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து,அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.

 @ அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல்.

      @ கட்டுரை,நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும்கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்ப டுத்துதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

கற்பித்தல் துணைக்கருவிகளைப் பதிவிறக்க


3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  திரைப்படங்களில் போர்க்காட்சிகளைப் பார்த்துள்ளீர்களா?

      Ø யாருக்காவது உதவி செய்துள்ளீர்களா?

       ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   Ø  வெட்சி முதல் பெருந்திணை வரையிலான 12 புறத்திணைகள் உள்ளன.

    @ அறத்தில் வணிகநோக்கம் கூடாது.@ அரசியலிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

@  அறங்கூறும் அவையங்கள் சங்க காலத்திலேயே இருந்துள்ளன

@  போர்,பிறருக்கு உதவுதல்,உண்மை பேசுதல் முதலியவை அனைத்திலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

 # நம் பாடப்பகுதியில் உள்ள “ஞானம்” கவிதையை இயற்றியவர் வேணுகோபாலன்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

     Ø  இலக்கணக்குறிப்பை விளக்குதல்

     Ø  உரைநடைப் பகுதியை விளக்க நிகழ்காலச்சான்றுகளைக் கூறுதல்

6.கருத்துரு வரைபடம்:

புறப்பொருள் வெண்பாமாலை


சங்க இலக்கியத்தில் அறம்

7.மாணவர் செயல்பாடு:

    Ø உரைநடைப் பகுதியை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
   Ø  செய்யுளில் காணும் அருஞ்சொற்களை அடையாளம் காணுதல்.
    Ø  தற்காலத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை உரிய சான்றுகளுடன் புரிந்துகொள்ளுத்ல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    1. புறத்திணைகள் -----வகைப்படும்.
    2. வாய்மை என்பதன் பொருள் என்ன?
    3.ஞானம் கவிதையை இயற்ரியவர் யார்?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
   4.வெட்சித்திணையை விளக்குக.
   5.அவையம்-குறிப்பு வரைக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  6.தற்காலத்தில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய அறங்கள் யாவை? விளக்குக
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

        @ 1039- புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச் செய்யுள்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய போர்முறைகளைத் தெரிந்து கொள்ளுதல்.

 @ 1040 - அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப்

 பொருளறிதல், உரைநிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி

 நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்.

      @ 1041 - ககுறிப்பு பொருள் உணர்த்தும் புதுக்கவிதை இயல்பறிந்து படித்தல்,

மையக்கருத்துணர்தல்.



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை