இராணிப்பேட்டை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு
அரையாண்டுப் பொதுத் தேர்வு-2023 இராணிப்பேட்டை
மாவட்டம்
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
அ. மரபு |
1 |
2. |
ஆ. தந்தை பெரியார் |
1 |
3. |
ஆ . மூன்று |
1 |
4. |
ஆ. அச்சம் |
1 |
5. |
ஆ. ஓடை |
1 |
6. |
அ. வேற்றுமைத்தொகை |
1 |
7. |
ஆ.
மதுரை |
1 |
8. |
இ. பனையோலைகள் |
1 |
9. |
ஈ. வித்துகள் |
1 |
10. |
ஈ . பார்த்த |
1 |
11 |
அ. அமராவதி |
1 |
12 |
ஆ. தொல்காப்பியம் |
1 |
13 |
ஆ. காற்று |
1 |
14 |
ஈ. ஐம்பூதம் |
1 |
15 |
ஆ. தொல்காப்பியர் |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க (21 கட்டாய வினா) |
||
16 |
உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர், நீ,
காற்று, வானம் ஆகியவற்றால் ஆனது |
2 |
17 |
நடுவுநிலைமை |
2 |
18 |
சோழ
மன்னனின் படையிலுள்ள யானைகள் சினமுற்று இடியைப் போலப் பிளிறின;
அவ்வோசையைக் கேட்டு அஞ்சிய வீரர்கள் இருள் நிறைந்த குகைக்குள்
சென்று மறைந்தனர்; ஏனையோர் புறமுதுகுகாட்டி ஓடிப்
பிழைத்தனர். |
2 |
19 |
காவிரி, பவானி, நொய்யல்,
ஆன்பொருநை (அமராவதி) |
2 |
20 |
இன்று இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் என்று
பகத்சிங் கனவு கண்டார். |
2 |
21 |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை
அவன்கண் விடல். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
22 |
உயிரின்
முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு,
தலை, கழுத்து, மூக்கு
ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி,
இதழ், நாக்கு, பல்,
மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். |
2 |
23 |
பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும்
சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம்,
வினையெச்சம் என்று இருவகைப்படும். |
2 |
24 |
வல்லினம் மிக வேண்டிய
இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெயயிட்டு எழுதுவதும்
தவறாகும். இதனைச் சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை என்று
கூறுவர். |
2 |
25 |
அ. பருகு ஆ. கொய் |
2 |
26 |
அ. நூல் ஆ. வரி |
2 |
27 |
ஆ, எவ்வளவு அழகான காடு! |
2 |
28 |
இல்லாதது இருப்பதுபோலத் தோன்றுதல் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
29 |
ü மூங்கிலைக்
கொண்டு பலவகையான கைவினைப் பொருள்களைச் செய்யலாம். ü மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும்
பொருள்கள் ஆகும். ü பிறந்த குழந்தைக்குத் தொட்டில் முதல், இறந்தவரை சுமந்து செல்லும் பாடை
பயன்படுத்தப்படுகிறது. |
3 |
30 |
v கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுடபம். தமிழை வளர்க்கும்
முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை
என்னும் பழம்பாடடைநிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம்
தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன். v கலைகள் யாவும் தாய்மொழி
வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம்
ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார். |
3 |
31 |
அ. மாங்கனி நகரம் ஆ. பருத்தி,கரும்பு,மாம்பழம்,காப்பி,பாக்கு இ. ஜவ்வரிசி |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
வடக்கே பெரும்பாலை தெற்கே பழனி மலை, மேற்கே
வெள்ளிமலை, கிழக்கே மதிற்கூரை என
இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியாகக் கொங்கு மண்டலம் விளங்கியதாகக் கொங்கு
மண்டலச் சதகம் கூறுகிறது. |
3 |
|
33 |
v கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக்
காட்டவேண்டும். v ஆத்திரம் கண்ணை மறைத்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை
கொடுத்துஅமைதி காக்க வேண்டும். v பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க
வேண்டும். |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலை
யும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வா று செயலை யும் காலத்தையும்
வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்
எனப்படும். மெல்ல வந்தான் –
இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படை யாகக் காட்டவில்லை. மெதுவாக
என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல்
பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு
வினையெச்சம் எனப்படும் |
3 |
36 |
வேற்றுமை, வினை, பண்பு,
உவமை, உம்மைஆகிய தொகைநிலைத் தொடர்களுள்,
அவை அல்லாத வேறு பிறசொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல்
+ மொழி + தொகை) எனப்படும். |
3 |
37 |
நிலைமொழியும்
வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். சான்று: தாய் மொழி |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
அ) திரண்டு எழுந்த
மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின்கூரைகள் எல்லாம்
மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு
விழுந்தன (அல்லது) ஆ) ü
காலையும் ,மாலையும் நடைபயிற்சி
மேற்கொள்ள வேண்டும். ü
தூய்மையான
காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும். ü
குளித்த
பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க
வேண்டும். ü
அளவுடன்
உண்ண வேண்டும். |
5 |
39 |
அ) இடம்,நாள் ,விளித்தல்,நலம் வினவுதல்,இப்படிக்கு,உறைமேல்
முகவரி என்ற கூறுகளைக் கொண்டு கடிதம் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ)
அனுப்புநர்,பெறுநர்,ஐயா,பொருள்,கடிதத்தின் உடல்,இப்படிக்கு,இடம்,நாள், உறைமேல் முகவரி என்ற
கூறுகளைக் கொண்டு கடிதம் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
40 |
1.
ஆயிரங்காலத்துப்
பயிர் - அ. இயலாதசெயல். 2.
கல்லில்
நார் உரித்தல் – ஆ.
ஆராய்ந்து
பாராமல். 3.
கம்பி
நீட்டுதல் – இ.
இருப்பதுபோல்
தோன்றும்;
ஆனால்
இருக்காது. 4.
கானல்நீர்
– ஈ.
நீண்டகாலமாக
இருப்பது. 5.
கண்ணைமூடிக்கொண்டு
– உ.விரைந்து
வெளியேறுதல் விடை: 1- ஈ 2 – அ 3 – உ 4 – இ 5- ஆ |
5 |
41 |
அ.
போ ஆ. வா இ. கேள் ஈ. செல் உ. பேசு |
5 |
42 |
1. இடி உடன் மழைவந்தது. 2. மலர்விழி தேர்வின் பொருட்டு
ஆயத்தமானாள். 3. அருவி மலையில் இருந்து வீழ்ந்தது. 4. தமிழைக் காட்டிலும் சுவையான மொழியுண்டோ! 5.
யாழ், தமிழர் உடைய
இசைக்கருவிகளுள் ஒன்று |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும்
விடையளிக்க: |
||
43 அ. |
v தமிழரது நிலம்,நிறைந்த பண்பாடுகளும்
தத்துவங்களும் அடங்கியது.நோய்கள் எல்லாம் பேய்,பிசாசுகளால் வருகின்றன; பாவ, புண்ணியத்தால்
வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர்
தத்துவங்களா ன சாங்கியம்,
ஆசீவகம்
போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில்
ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின. v நோயை இயற்கையில்
கிடைக்கும் பொருள்கள்,
அப்பொருள்களின்
தன்மை,சுவை
இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர்.
தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறா க ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி
வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த
மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது. (அல்லது) ஆ) v அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில்
உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர். v தமிழகத்தில் பழங்காலந் தொட்டே இக்கலை வளர்ந்திருக்கிறது.
கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது,
மண்பாண்டங்கள் ஆகும். v சிந்துசமவெளி,
ஆதிச்சநல்லூர் செம்பியன் கண்டியூர்; கீழடி போன்ற பகுதிகளில் செய்த
அகழ்வாய்வில் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. v களிமண்ணால் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை
முதன்முதலில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகும். v மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால் செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள், பனையோலையால் செய்யப்படும் பொருட்கள்
இவையனைத்தும் கைவினைப் பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும்
நிகழாது. v மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால் செய்யப்படும் காகிதப்பொம்மைகள், பொருட்கள் அத்தனையும் கைவினைப்
பொருட்கள் ஆகும், v அரசு கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
கைவினைக் கலைஞர்களுக்கான சிறுதொழில் கடன் வசதியும் அளித்து வருகிறது. v அரசு அழகும்,
நலமும் வாய்ந்த இயற்கைப்
பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை வாங்குவோம்! கைவினைக்
கலைக்கு உயிர் தருவோம்! |
8 |
44 |
அ) முன்னுரை : காலம்
உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கள்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் ஆவார்.
நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும்
காட்டுவதாக இக்கதை அமைகிறது. சுப்ரமணியத்தின் கவலை: அனந்திகா
நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ் துணியகத்திலிருந்து
ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி அனுப்புவது
தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி/ நெய்ய தாமதமாகிறது.
மாணிக்கம் ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப் பாவும் சற்று
நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல் சுப்ரமணியம் மிகவும்
கலங்கிப் போனார். நண்பன் ரகுவின் உதவி
: நண்பர்
ரகு துணியகத்தில் கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள், அங்கே போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச் செல்கிறார்.
பதற்றத்துடன் வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன்
பாவு இணைக்க ஆள் வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார்.
அதற்கு ரகு மாயழகுவின் மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும்! என்கிறார். மாயழகும் ஒச்சம்மாவும்: ஒச்சம்மா
உரிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி மலை அடிவாரத்தில் கோம்பைத்
தொழுவு. திருமணமகள் பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ வேண்டும் என்பதற்காக
வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி
ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள். பாவு பிணைத்தல்:
ரகுஅனுப்பியதாகவும், தள்பிரச்சினையையும்
சுப்பிரமணியம்எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி
ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தவர்
கைக்குழந்தையுடான் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து
விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழத்தை
விழித்துக் கொள்கிறது. குழத்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை
முடித்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவலின் வீட்டிற்குக்
கொளண்டுபோய் சேர்க்கிறார். முடிவுரை: இரவு பகல் பார்க்காமல் தன் வறுமையின்
காரணமாகத் ததி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை செய்கின்றனர் என்பதை கதை மூலம்
அறிய முடிகிறது. (அல்லது) ஆ) v கிராமத்தில் பணி புரியும் ஆசிரியரின் வேட்டி
களவாடப்பட்டிருந்தது. v அதை அக்கிராமத்தைச் சேர்ந்த சிகாமணிதான் எடுத்திருப்பார் என
கிராம மக்கள் கூறுகிறார்கள். ஆசிரியருக்கும் அதே சந்தேகம். ஆனால் கேட்க
மனமில்லை.சிகாமணியின் மகன் சகாதேவன் அந்த ஆசிரியரிடம் மாணவளாகப் பயின்று
வருகின்றான். v வகுப்பில், திருக்குறளில்,
'பண்புடைமை' என்னும் அதிகாரத்தில் உள்ள, அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
எனும் குறளினை நடத்துகிறார். சிறந்த குடியில் பிறத்தல் என்னும் கருத்தினை சொல்ல
ஆசிரியருக்குத் தயக்கம். v சிறந்த குடியை உருவாக்குதல் என மாற்றிக் கூறினார். > அதற்கு காரணம், சகாதேவனின் குடும்ப பின்னணியே ஆகும்.திருடன்
மகன் திருடன் என்று பெயர் எடுத்தல் கூடாது. அதை வழிவழியாகத் தொடராமல், தான்நல்வழியில் வாழ்தல்தான் சிறந்த
குடிபிறப்பு என்று கூறினார். v அவன் தகப்பன் கெட்டவன். மகன் நல்லவன் என்று கூறுதல்
வேண்டும். அவ்வாறு பெயர் எடுக்கவேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தினார். v மனம் திருந்திய சகாதேவன், அவ்வூரில் உள்ள
கிருஷ்ணமூர்த்தியிடம், அவ்வேட்டியினைக் கொடுத்து அனுப்பினான். v கிருஷ்ணமூர்த்தி,
ஆசிரியரிடம் அதைக் கொடுத்துவிட்டு, அவன் அப்பா வீட்டில் மறைத்துவைத்த வேட்டியைத்
தங்களிடம் தருமாறு சகாதேவன் கூறினான் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினான் v ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார் தான் வகுப்பில் நடத்திய பாடம்.
மாணவனின் மனதை மாற்றியுள்ளதே என நினைத்து பூரித்துப்போனார் v மேலும், அவனுக்கு அவன் அப்பாவால் தண்டனை கிடைத்துவிடக் கூடாது
என்பதற்காக, ஊர் மக்களிடம்,
இதோடு, இப்பிரச்சனையை விட்டுவிடுமாறு
வேண்டினார். |
8 |
45 |
அ. முன்னுரை– நூலகத்தின் தேவை- வகைகள்- நூலகத்தில் உள்ளவை-
படிக்கும் முறை- முடிவுரை முன்னுரை: “நூலகம் அறிவின் ஊற்று” ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்” என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை
குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம்
எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண
இருக்கிறோம். நூலகத்தின் தேவை: “
சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான
நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக
உள்ளது. அன்றாட செய்தித்தாள்களைக் கூட அவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. ஆகவே,
இலவசமாக நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது . நூலகத்தின் வகைகள்: மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும். நூலகத்தில் உள்ளவை: மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள்,
சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது
நூலகத்தில் இடம் பெற்றிருக்கும். படிக்கும் முறை: நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள
இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த
முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும். முடிவுரை: “என்னை தலைகுனிந்து படித்தால், உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்” என்று புத்தகம் மனிதர்களைப்
பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. அறிவியலும் தொழில்நுட்பமும்
ஆயிரம் வளர்ச்சி ஏற்றினார்கள் நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன்
ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும். ஆ) கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள். முன்னுரை: கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
உனக்கில்லை ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல்
கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார்.கைத்தொழிலின்
இன்றியமையாமையை உணர்த்தும் பாடல் வரிகள் இவை.இக்கட்டுரையில் கைத்தொழிலின் அவசியம் குறித்துக் காண்போம்.
கைத்தொழில் வகைகள் . நமது நாட்டில் கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில்
பெரும்பாலோர் பயிர் தொழிலையே செய்கின்றனர்.பயிர் தொழில் செய்யும் விவசாயிகள்
ஆண்டில் பல மாதங்கள் வீணே காலத்தைக் கழிக்கின்றனர். அவர்கள் அக்காலத்தில் பல
குடிசைத் தொழில்களைச் செய்து, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத் தொழிலுக்குத் தேவையான
சில கருவிகளைச் செய்தல், நெசவுத்தொழில், பாய்பின்னுதல், கூடைமுடைதல், ஆடுமாடு, கோழி வளர்த்தல் போன்ற பல கைத்தொழில்களைச் செய்யலாம்.
கைத்தொழிலின் தேவை:
. காட்டுப் பகுதியில்
உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரச்சாமான்கள் செய்தல் போன்ற
தொழில்களைச் செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.குடிசைத் தொழில்களை
ஓய்வு நேர வேலையாக மேற்கொள்ளலாம் அல்லது முழுநேர வேலையாக மேற்கொள்ளலாம்.குடிசைத்
தொழிலின் மூலம் ஆக்கப்படும் பொருள்களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அவை
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன.அவை நாள்தோறும் பயன்படுத்தப்படுவதால்
அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத உற்பத்தியினால்
நிறைவேற்றலாம்.
பொருளாதார பயன்
. ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப்
பொருத்திருக்கிறது. தொழில்வளம் மிக்க நாடுகள் செல்வ செழிப்புகள் உள்ளதாக
இருக்கின்றன.உதாரணமாக ஜப்பானில் உள்ள பெண்களும் தம் ஓய்வு நேரங்களில் பூ வேலை
செய்தல், பின்னுதல்
போன்ற கைத்தொழில் செய்து வருகிறார்கள். ஆகையால் ஜப்பான் சிறுதீவுகளாக
காட்சியளித்தாலும் செல்வச் சிறப்புடன் விளங்குகிறது.அவர்களைப் போலவே நாமும்
உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும். இது
இயந்திரத்தின் உதவியின்றி, சிறிதளவு பணத்தைக் கொண்டு
கையால் செய்யப்படுவது. ஆகவே அனைவரும் இதனை எளிதில் மேற்கொள்ளலாம்.
முடிவுரை:
. எனவே
மாணவர்கள், கல்விப் பயிற்சி காலத்திலேயே நெசவு தையல்
போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் நாம் கற்ற
கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம் பிழைப்புக்கான ஊதியத்தை பெறலாம்.காந்தியடிகள்
கூறியது போல, நமது தேவையை நாமே நிறைவேற்றிக் கொள்ள
வேண்டும். அயலார் கையை எதிர்பார்க்காமல் சுயசார்பு உடையவர்களாக வாழ கைத்தொழில்
உதவும். |
8 |