10. ஆம் வகுப்பு - தமிழ்
பாடலைப்படித்து விடையளித்தல்
விடைக்குறிப்புகள்
உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக.
1.
(அ)
தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?
விடை: விளைபொருள் வகைகள்
(ஆ)
கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை: சம்பாக் கோதுமை, குண்டுக்
கோதுமை. வாற்கோதுமை
(இ)
தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.
விடை: செந்நெல், வெண்ணெல்,
கார்நெல்
2.
(அ) அரசனின்
அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை ?
விடை: அறம் கூறும்
மன்றங்கள்
(ஆ) அவையம்
பற்றி புறநானூறு கூறுவது யாது ?
விடை: அறம் கூறு அவையம்
பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு
(இ)
மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது ?
விடை: துலாக்கோல் போல
நடுநிலை மிக்கது
3.
(அ)
பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
விடை: மீண்டும் மீண்டும்
(ஆ) புவி ஏன்
வெள்ளத்தில் மூழ்கியது ?
விடை: தொடர்ந்து பெய்த
மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
(இ) பெய்த
மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
விடை: பெய் மழை
4.
(அ)
எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது ?
விடை: போலச்செய்தல்
(ஆ)
பொய்க்கால் குதிரையாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை ?
விடை: புரவி ஆட்டம், புரவி
நாட்டியம்
(இ) யாருடைய
காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது ?
விடை: மராட்டியர்
5.
(அ)
ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன ?
விடை: 5000 நூல்கள்
வரை மொழி பெயர்க்கப்படுகின்றன.
(ஆ) தமிழ்
நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது ?
விடை: ஆங்கிலம்
(இ) மொழிபெயர்ப்பின்
பயன் என்ன ?
விடை: மொழிபெயர்ப்பினால்
புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
6.
அ. ஆவூர் மூலங்கிழாரின்
போர் அறம் யாது?
விடை: தம்மைவிட வலிமை
குறைந்தாரோடு போர் செய்வது கூடாது
ஆ. போர் அறம் என்பது எதனைக்
குறிக்கிறது?
விடை: போர்
அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமை
இ. யாருக்கெல்லாம் தீங்கு
வராதவண்ணம் போர் புரிய வேண்டும்?
விடை: பசு, பார்ப்பனர்,
பெண்கள், நோயாளர், புதல்வரைப்
பெறாதவர்
7.
அ. திறன்பேசியைத் திறக்கும்
பழைய முறைகள் எவை?
விடை: கடவுச்சொல்லும்
கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.
ஆ. திறன்பேசியில் படம்
எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது?
விடை: உரிமையாளரின்
முகத்தை அடையாளம் கண்டு திறப்பது
இ. உயர்வகைத்
திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது?
விடை: செயற்கை நுண்ணறிவு
8.
அ. ம.பொ.சி அவர்கள் கேள்வி
ஞானத்தை அதிகமாக யாரிடம் பெற்றதாகக் குறிப்பிடுகிறார்?
விடை: திருப்பாதிரிப்புலியூர்
ஞானியாரடிகள்
ஆ. ம.பொ.சி அவர்கள் இலக்கிய
அறிவினை எவ்வாறு பெற்றார்?
விடை: அம்மானை பாடல்கள், சித்தர்
பாடல்கள், சொற்பொழிவுகள் போன்றவற்றின் மூலமாக.
இ. ஏட்டுக்கல்வி பெற இயலாத
ம.பொ.சி. அதனை எவ்வாறு ஈடு செய்தார்?
விடை: கேள்வி ஞானம் மூலம் ஈடு செய்தார்.
9.
அ. பழந்தமிழ் மக்களின்
எந்தெந்த எச்சங்களை அறிவதற்கு நிகழ்கலைகள் துணைசெய்கின்றன?
விடை: கலை, அழகியல்,
புதுமை
ஆ. நிகழ்கலைகளின் பயன்கள்
இரண்டினை எழுதுக.
விடை: மக்களை மகிழ்விக்கின்றன , பழங்கால எச்சங்களை அறிய உதவுகின்றன.
இ. நிகழ்கலைகள் எப்பகுதி
மக்களின் வாழ்வியல் கூறுகளில் ஒன்றாகத் திகழ்கின்றன?
விடை: சிற்றூர் மக்களின்
10.
1. காசி நகரத்தின்
பெருமையைக் கூறும் நூல் யாது?
விடை: காசிக்காண்டம்
2. முத்துக்குளிக்கும் நகரம் எது?
விடை:
கொற்கை
3. சீவலமாறன்
என்பது யாருடைய பட்டப்பெயர்?
விடை: அதிவீரராம பாண்டியர்
11.
1. தமிழக வடக்கு – தெற்கு எல்லைக்
கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த அமைப்பு யாது?
விடை: தமிழரசுக் கழகம்
2. தெற்கெல்லைப் பகுதிகளைத் தனவசம் வைத்திருந்த அரசு எது ?
விடை: திருவிதாங்கூர்
3.
இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.
விடை: எல்லைப்போராட்டங்கள்
12.
அ) இரவீந்திரநாத் தாகூர்
வங்கமொழியில் எழுதிய கவிதை நூல் எது?
விடை: கீதாஞ்சலி
ஆ) இரவீந்திரநாத்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்போது?
விடை: கீதாஞ்சலியை
ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகு
இ) மகாகவியான பாரதியின்
கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் எவை கிடைத்திருக்கும்?
விடை: உலக அளவில் உயரிய
விருதுகளும், ஏற்பும் கிடைத்திருக்கும்
13.
1) எதை
சிறந்த அறமாக சங்க இலக்கியம் பேசுகிறது?
விடை: வாய்மை
2) நா
என்பதன் பொருள். யாது?.
விடை: நாக்கு
3) மனிதனை நா
எப்பொழுது தாழ்த்துகிறது?
விடை: பொய் பேசும் நா
மனிதனை தாழ்த்துகிறது
14.
அ) கல்வியைப் போற்றுதல்
எக்காலத்தில் இருந்து தொடர்கிறது?
விடை: புறநானூற்றுக்
காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்கின்றது
ஆ) நூல்களை நாடிச்சென்று
அறிவு பெறுதல் எதனோடு ஒப்பிடப்படுகிறது.
விடை: தேன் பருகும்
வண்டுகள்
இ) கற்றவர் வழி அரசு
செல்லும் என்று கூறும் இலக்கியம் எது?
விடை: திருக்குறள்
15.
அ) விருந்தினர் என்போர்
யாவர்?
விடை: முன்பின் அறியாத
புதியவர்களுக்கே விருந்தினர்
ஆ) விருந்து குறித்துத்
தொல்காப்பியர் கூறியது யாது?
விடை: 'விருந்தே
புதுமை'
இ) இவ்வுரைப்பத்திக்குப்
பொருத்தமான தலைப்பு ஒன்று தருக
விடை: விருந்து
16.
1. உலகமே
வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?
விடை: அதியன்
2. மறுமை
நோக்கிக் கொடுக்காதவன் என்று பரணர் யாரைக் கூறுகிறார்?
விடை: பேகன்
3. குமணன்
வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் எதனைக் குறிப்பிடுகிறார்?
விடை: தன்னை நாடி வந்த
பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது
17.
1) பாட்டுக்கொரு
புலவன் எனப்பாராட்டப்பட்டவர் யார்?
விடை: பாரதியார்
2) பாரதியார்
பணியாற்றிய இதழ்கள் யாவை?
விடை: இந்தியா, சுதேசமித்திரன்
3)'இப்பத்திக்குப்
பொருந்திய தலைப்பொன்று தருக.
விடை: மகாகவி பாரதியார்