7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON - FEBRUARY 1 ST WEEK

7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 29-01-2024 முதல் 02-01-2024         

மாதம்          பிப்ரவரி  

வாரம்     :   முதல் வாரம்                                                        

வகுப்பு  :   ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1. புதுமை விளக்கு

1.கற்றல் நோக்கங்கள்   :

  • பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் அறிதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • ஆழ்வார்கள் யார் தெரியுமா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிரத்  திவ்வியப் பிரபந்தம்.இதனைத் தொகுத்தவர் நாதமுனி என்பவராவார். 

  • பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

  • நமது பாடப்பகுதியில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் இயற்றிய பாடல்களுள் ஒவ்வொன்று தரப்பட்டுள்ளன.

  •  நமது பாடப் பகுதியில் தரப்பட்ட பாடல்கள் அந்தாதி எனும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தவை. 

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. ஆழ்வார்கள் எத்தனை பேர்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. பன்னிரு ஆழ்வார்கள் பெயரைப் பட்டியலிடுக

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. ஆழ்வார்கள் குறிப்பிடும் வழிபாட்டுமுறையை விளக்குக.

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

பல்வேறு வழிபாட்டு முறைகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டிவரச் செய்தல்

12.கற்றல் விளைவு:

   Ø 710 - பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு ஆராய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக்  கண்டறிதல்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை