10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL-4

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-4


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1) உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யார்,யாரிடம் கூறியது?

) குலசேகராழ்வாரிடம் இறைவன்          ) இறைவனிடம் குலசேகராழ்வார்         

) மருத்துவரிடம்,நோயாளி                      ) நோயாளி,மருத்துவரிடம்

2) தலைப்புக்கும்,குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி,அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது.

) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3) பரிபாடல் அடியில்விசும்பும் இசையும்என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

)வானத்தையும்,பாட்டையும்            )வானத்தையும்,புகழையும்                              

) வானத்தையும்,பூமியையும்             )வானத்தையும்,பேரொலியையும்

4) குலசேகர ஆழ்வார்வித்துவக்கோட்டம்மாஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்- ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே

) மரபு வழுவமைதி,திணை வழுவமைதி              )இடவழுவமைதி,மரபு வழுவமைதி

)பால் வழுவமைதி ,திணை வழுவமைதி             )கால வழுவமைதி,இட வழுவமைதி

5) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் யாது?

)துலா     )சீலா    )குலா   )இலா

6) ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்-----------

அ)வாட்சன்    ஆ) பெப்பர்   இ) டொனால்டு     ஈ) மெக்கன்சி

7) பெருமாள் திருமொழி பாடியவர்

அ) பொய்கையாழ்வார்  ஆ) நம்மாழ்வார்  இ) குலசேகர ஆழ்வார்   ஈ) பெரிய ஆழ்வார்

8) பெருமாள் திருமொழியில்------- பாடல்கள் உள்ளன

அ) 105    ஆ) 104    இ) 205    ஈ) 106

9) பரிபாடல்------------நூல்களுள் ஒன்று.

அ) பத்துப்பாட்டு   ஆ) பதினெண் கீழ்க்கணக்கு  இ) எட்டுத்தொகை   ஈ)  நீதி நூல்கள்

10) இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும்--------- ஆகும் .

அ)வழு    ஆ) வழாநிலை     இ) வழுவமைதி    ஈ) இயல்பு வழக்கு 

11) இலக்கண முறை இன்றிப் பேசுவதும் எழுதுவதும் ------------ஆகும்.

அ) வழு    ஆ) வழாநிலை    இ) இயல்பு வழக்கு   ஈ) தகுதி வழக்கு 

12) ’கத்துங் குயிலோசை -  சற்றே வந்து 

      காதிற் படவேணும்  என்ற வரிகள் பாரதியார் கவிதையில் இடம் பெற்றிருப்பது

அ) கால வழுவமைதி  ஆ) மரபு வழுவமைதி  இ) பால் வழுவமைதி  ஈ)திணைவழுவமைதி

13) தென்னை மரங்கள் நிறைந்த பகுதியைக் குறிப்பிடும் வழாநிலை

அ) தென்னந்தோட்டம்  ஆ) தென்னஞ்சோலை  இ) தென்னந்தோப்பு  ஈ) தென்னங்காடு

14) பின்வருவனவற்றுள் திணை வழுவமைதி எது?

அ) ’இந்தப் பாப்பா தூங்கமாட்டாள்’ என்று குழந்தை தன்னையே குறிப்பிடுவது

ஆ) இரவெல்லாம் நாய் கத்திக்கொண்டே இருந்தது.

இ) ‘வாடாச் செல்லம்’ எனத் தாய் மகளை அழைப்பது

ஈ) ‘ என் தங்கை வந்தாள்’ என்று பசுவைக் குறிப்பிடுவது

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

"விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி.

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்"

1. பாடல் இடம் பெற்ற நூல்

அ) புறநானூறு ஆ) அகநானூறு இ) பரிபாடல் ஈ) பதிற்றுப்பத்து

2. பாடலை இயற்றியவர்-

அ) கீரந்தையார்  ஆ) குலசேகராழ்வார்  இ) அதிவீரராம பாண்டியர்  ஈ) பெருங்கெளசிகனார்

3. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.

அ) கரு வளர் - உரு அறிவாரா  ஆ) உரு அறிவாரா - உந்து வளி 

) விசும்பில்கருவளர்  . விசும்பில் வானத்து

4. விசும்பு என்ற சொல்லின் பொருள்-

அ) மழை  ஆ) காற்று  இ) வானம்  ) நீர்

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28)   

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக

     எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

விடை: இயந்திரமனிதன், செயற்கைக்கோள்

2.வருகின்ற கோடைவிடுமுறையில் காற்றாலை மின்உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

விடை: எதிர்காலம் உறுதித் தன்மையின் காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி.

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

விடை: # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்

            # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்

            # அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியம்

4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்த வற்றைக் குறிப்பிடுக.

விடை:

ü  ஐம்பூதங்களும்,ஒன்றனுள் ஒன்று ஒடுங்கின.

ü  நீண்ட காலத்திற்குப் பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின.

5. "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் - இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

விடை:  "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

6. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:-

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காது கேட்கும்.

பறவைகளுக்குப் பார்த்தல்,கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

7) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

) இயற்கைசெயற்கை

செயற்கையை விட இயற்கை சிறந்தது

) கொடு - கோடு

கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது

) கொள் - கோள்

கோள்களை அறிந்து கொள்

) சிறு - சீறு

சிறு பூனையும் சீறும்

) தான் - தாம்

தான் என்று இருக்காமல் தாம் என இருக்க வேண்டும்

) விதி - வீதி

விதியால் வீதிக்கு வந்தான்

8) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-

1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____கற்றல்___

2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____கரு__

3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______சோறு____ ஆகும்.

4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து _____எழுத்து____

5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________பூவில்________

9) குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:-

     குறிப்புஎதிர்மறையான சொற்கள்

மீளாத் துயர்

மீண்ட  துயர்

கொடுத்துச் சிவந்த

கொடுக்காது  சிவந்த

மறைத்துக் காட்டு

மறைக்காமல் காட்டு

அருகில் அமர்க

தொலைவில்  அமர்க

பெரியவரின் அமைதி

சிறியவரின்  அமைதி

புயலுக்குப் பின்

மழைக்கு  பின்

 

 

 

   

 

 

10) அகராதியில் காண்க

1.     அவிர்தல் –விளங்குதல்

2.    அழல் – நெருப்பு

3.    உவா- முழு நிலவு

4.    கங்குல் – இரவு

5.    கனலி – சூரியன்

11) கலைச்சொல் தருக

1.     Nanotechnology – மீநுண்தொழில்நுட்பம்

2.    Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்

3.    Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்

4.    Cosmic rays - விண்வெளிக் கதிர்கள்

5.    Ultraviolet rays - புறஊதாக் கதிர்கள்

6.    Infrared rays - அகச்சிவப்புக் கதிர்கள்

12) கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

 அ) அமைச்சர், நாளை விழாவிற்கு வருகிறார் - கால வழுவமைதி

 ஆ) 'இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால், அதை அனைவரும் ஏற்பர்" என்று கூறினான்

   - இட வழுவமைதி

 இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்  - கால வழுவமைதி

 ஈ) செல்வன் இளவேலன், இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார். -   பால் வழுவமைதி

 உ) அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்த மாகுங்கள். - இட வழுவமைதி

 11. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

 அ) தந்தை, 'மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா?" என்று சொன்னார்.    

 (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக)

 விடை:  தாய், "மகளே! நாளை உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா" என்று சொன்னாள்.

 ஆ) அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது, அம்மா வழியனுப்பியது.

 (வழுவை வழாநிலையாக மாற்றுக)

 விடை : அக்கா நேற்று வீட்டுக்கு வந்தார். அக்கா புறப்படும்போது, அம்மா வழியனுப்பினார்.

 இ) 'இதோ முடித்துவிடுவேன்" என்று, செயலை முடிக்கும்முன்பே கூறினார்.

(வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக)

 விடை: "இதோ, முடித்துவிட்டேன்" என்று, செயலை முடிக்கும்முன்பே கூறினார்.

 ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

   (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக)

 விடை : நீ என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.

 உ) குழந்தை அழுகிறாள் பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக)

 விடை : குழந்தை அழுகிறது பார்

 மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 29 முதல் 37)

1. "மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமைசுட்டும்செய்தியைவிளக்குக.

விடை:

    # மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார்.

    # நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார்.

    # அதுபோல, நீ துன்பங்கள் செய்தாலும், உனது அருளையே எதிர்பார்த்திருப்பேன் என்று குலசேகராழ்வார் கூறுகிறார்.

2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த

சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

விடை:

     # மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.

     # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.

3. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின்மென் பொருள். மனிதனைப் போலவே பேச , எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் எழுதுக.

விடை:

     # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

     # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

     # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன்

        தனது சேவையை அளிக்கும்.

4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்த து. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், "இலச்சுமி கூப்பிடுகிறாள்,  போய்ப் பார்" என்றார் . "இதோ சென்றுவிட்டேன்" என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளை யாடவேண்டுமா?" என்று கேட்டேன்.என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

     - இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.      

விடைகுட்டி- மரபு வழுவமைதி

            இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி

            இதோ சென்றுவிட்டேன்கால வழுவமைதி

            அவனைபால் வழுவமைதி   

5. பத்தியைப் படித்துப் பதில் தருக.

    பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோ ன்றியது. பின்னர் ப் புவி குளிரும்படியாகத் தொடர் ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்த து. அவ்வா று தொடர் ந்து பெய்த மழை யால் புவி வெள்ள த்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற் கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெ றும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.  மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?  - தொடர் மழையால்               

3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.  – பெய் மழை

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?  - புவியின் தோற்றம்

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?  - இயற்கை சார்ந்த வாழ்வு                      

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1. நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற  பின்வரும் சொற்பொழிவை தொடர்ந்து நிறைவு செய்க . ( வினா எண் : 38)

    பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை, நாடகம்என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டுஇயங்கிவரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்துவந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான  பரிபாடலில்……

விடை:

    # கீரந்தையார் பாடலில் ஊழிகளின் தோற்றம் குறித்த அறிவியலை எடுத்துரைத்துள்ளார்.
    #
எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே புலவர்கள் எடுத்துரைத்து உள்ள  அறிவியல்  உண்மைகள் வியப்பிற்குரியன.
    #
இப்பாடலின் ஐந்தாம் அடியில் பெருவெடிப்புக் கொள்கை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

    # ஐம்பூதங்களும்,ஒன்றனுள் ஒன்று ஒடுங்கின.நீண்ட காலத்திற்குப் பிறகு உயிர்கள் உருவாகி வளரத் தொடங்கின.

2) காட்சியைக்கண்டு கவினுற எழுதுக ( வினா எண்: 40)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!



3) நயம் பாராட்டுக ( வினா எண்:42)

 நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

       நேர்ப்பட வைத்தாங்கே

  குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

       கோல வெறிபடைத்தோம்;

  உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

       ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

  பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

            பாடுவதும் வியப்போ ?                                           - பாரதியார்

திரண்ட கருத்துபாரதியார் தனது மகிழ்ச்சியைக் கொண்டாடும் செயல்களைப் பட்டியலிடுகிறார்

மையக்கருத்துமகிழ்ச்சி

அணிநயம்:        உருவக அணி

எதுகை நயம்:     நிலாவையும், குலாவும் ,லாவும், லாவின்

மோனை நயம் நிலாவையும், நேர்பட      குலாவும், கோ

இயைபு நயம்:     வெறிபடைத்தோம், மகிழ்ந்திடுவோம்;

4) மொழி பெயர்க்க:-   ( வினா எண்:42)                                                        

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

விடை:

மலர்: தேவி,அறையை விட்டு வெளியே வரும் போது மின்விளக்கை அணைத்துவிட்டு வா.

தேவி: ஆமாம்! நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.

மலர்: நம்முடைய தேசம் தெருவிளக்குகளுக்கு அதிக மின்சாரத்தை செலவிடுகிறது.

தேவி: யாருக்கு தெரியும்? எதிர்காலத்தில் இரவில் வெளிச்சம் தர செயற்கை நிலவையும் படைக்கலாம்.

மலர்: நான் படித்திருக்கிறேன். சில நாடுகள் செயற்கைக்கோள் வழியாக செயற்கை நிலவை உருவாக்கி வெளிச்சம் பரப்புகிறார்கள்

தேவி: அருமையான செய்தி. நாமும் இது போல் செயற்கை நிலவை உருவாக்கி, வாழும் பகுதியில் வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தோமானால்,நிறைய மின்சக்தி செலவாவதைத் தடுக்க இயலும்

5) நிற்க அதற்குத் தக  ( வினா எண்:42)

      தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.

1.குழு விளையாட்டுகள் விளையாடுதல்.

2.உலக நிகழ்வுகளைப் பற்றி  கலந்துரையாடுதல்.

3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.

4நூல்களைப் படித்தல்.

5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.

6) இந்திய மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக ( வினா எண் 38)

விடை:

தமிழ் மருத்துவம்:

v  தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் .

v  தாவரம், விலங்கு, உலோகம், பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்கானது

v  இலை, காய், கனியிலிருந்தே மருந்தைக் கண்டனர்

v  தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை.

 நவீன மருத்துவம்:

v  நவீன மருத்துவத்தில் பக்க விளைவுகள் உண்டு

v  நோய்க்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன

v  நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது

v  இம்மருத்துவத்தால் நோய்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன.

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 43 முதல் 45)

1. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச்செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்' பற்றி ஒரு கட்டுரை எழுதுக. ( வினா எண்: 43)

விடை:

   # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.

   # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.

   # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.

   # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

   # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

   # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன்  தனது சேவையை அளிக்கும்.

2.பொதுக்கட்டுரை: விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்  ( வினா எண்: 45)

முன்னுரை:

    இந்தியாவில் பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

              விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

நமது கடமை:

            விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது.

 முடிவுரை:

         “வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்


 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை