10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL- 8

 10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-8


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1)மேன்மை தரும் அறம் என்பது-----------

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

 ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது 

இ)புகழ் கருவி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

2)வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்- இவ்வடி குறிப்பிடுவது

அ) காலம் மாறுவதை  ஆ) வீட்டைத் துடைப்பதை 

இ) இடையறாது அறப்பணி செய்தலை  ஈ) வண்ணம் பூசுவதை

3)உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன், சேரலாதன்  ஆ) அதியன், பெருஞ்சாத்தன்

இ) பேகன், கிள்ளிவளவன்    ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

4) காலக்கணிதம் கவிதை இடம்பெற்ற  தொடர்-------

அ)இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ)என் மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ)இகழ்ந்தால் இறந்து விடாது என் மனம் ஈ) என்மனம்  இறந்துவிடாது இகழ்ந்தால்

5) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா 

6) கவிதை வாழ்க்கையின் திறனாய்வு என்று கூறியவர்-------

அ) கால்டுவெல்   ஆ) அர்னால்டு   இ) மூ.வ   ஈ) பாவாணர் 

7) அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமையைப் பற்றிக் கூறியவர்-------

அ)ஏணிச்சேரி முடமோசியார்   ஆ) ஔவையார்   இ) கபிலர்   ஈ) பரணர் 

8) கண்ணதாசனின் இயற்பெயர்

அ) சுப்பையா   ஆ) முத்தையா   இ) வேணுகோபாலன்  ஈ) சுப்புரத்தினம்

9) யாப்பின் உறுப்புகள் மொத்தம்-----

அ) 5    ஆ) 6   இ ) 7   ஈ) 8

10) பா-------- வகைப்படும்

அ) ஆ) 5   இ) 4   ஈ) 8

11) வெண்பாவின் இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளால் வருவது

அ) சிந்தியல் வெண்பா  ஆ) நேரிசை வெண்பா   இ) குறள் வெண்பா  ஈ) கலிவெண்பா

பாடலைப்படித்து வினாக்களுக்கு (வினா எண்:12,13,14,15) விடையளிக்க

"உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;

இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்

வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்

சொல்லா தனசில சொல்லிட முனைவேன்"

1. பாடலின் ஆசிரியர் -

அ) கண்ணதாசன்  ஆ) பாரதிதாசன்  இ) வண்ணதாசன்  ஈ) பாரதியார்

2. கவிஞருக்கு உவமையாகக் கூறப்பட்டதைத் தேர்க.

அ) வண்டு  ஆ) காற்று  இ) அன்னம்  ஈ) மழை

3. பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க?

அ) தருவேன், தட்டுவேன் ஆ) உண்டா, வண்டா  இ) இல்லா, இல்லம் ஈ) சொல்லா, சொல்லிட

4. பாடல் இடம் பெற்றுள்ள கவிதையின் பெயர்---

அ) ஞானம்  ஆ) காலக்கணிதம்  இ) பூத்தொடுத்தல்  ஈ) சித்தாளு

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28)   

1. ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

  உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது

) அடியெதுகையை எடுத்தெழுதுக.                  

விடைகொள்வோர் ,உள்வாய் -ள்

)இலக்கணக்குறிப்பு எழுதுக- கொள்க,குரைக்க 

விடை : வியங்கோள் வினைமுற்று

2. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

விடை: வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

   (-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

               கோலொடு நின்றான் இரவு.

3. குறிப்பு வரைக:- அவையம்

விடை: அவையம்=மன்றம் அல்லது சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.

4.காலக்கழுதை கட்டெறும்பானதும்  கவிஞர் செய்வது யாது?

விடை: காலக்கழுதை கட்டெறும்பானதும்  இடைவிடாது அறப்பணி செய்தல்

5. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

விடை: வஞ்சிப்பாவிற்குத் தூங்கல் ஓசையும் , கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியது.

6)மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-

மனக்கோட்டை      

 

படிக்காமல் தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான்

அள்ளி இறைத்தல்

 

பணத்தை அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான்

கண்ணும் கருத்தும்

 

கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள்.

ஆறப்போடுதல்

 

கோபத்தை ஆறப்போட வேண்டும்

7) பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;-

தம்பீ? எங்க நிக்கிறே?”

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்

அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”

அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”

ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”

இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.

சரிங்கண்ணே.”

விடை:

தம்பி? எங்கே நிற்கின்றாய்?”

நீங்கள் சொன்ன இடத்திலே தான் அண்ணே! எதிர்ப்பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை இருக்கின்றது”.

அங்கேயே தேநீர் குடித்து விட்டு, செய்தித்தாள் படித்துவிட்டு இரு......நான் சீக்கிரமாக வந்துவிடுவேன்

அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டுவாருங்கள்  அண்ணா! அவனைப் பார்த்தே நீண்ட நாள்களாயிற்று!”.

அவன் பாட்டியுடன் வெளியூர் சென்று உள்ளான்.உன் ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்”.

மிகவும் சிறுவயதில் பார்த்தது அண்ணா! அப்போது  அவனுக்கு மூன்று வயது இருக்கும்!”.

இப்போது உயரமாக வளர்ந்து விட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது!ஊருக்கு எங்களுடன் வருவான்.

பார்த்துக்கொள்!.சரி,தொலைபேசியை வை. நான் புறப்பட்டு விட்டேன்..”

சரிங்கண்ணே”.

8) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-    

கானடை

கான் அடைகாட்டைச் சேர்

கான் நடைகாட்டுக்கு நடத்தல்

கால்நடைகாலால் நடத்தல்

வருந்தாமரை

வரும் + தாமரைவரும் தாமரை மலர்

வருந்தா + மரைதுன்புறாத மான்

வருந்து + + மரைதுன்புறும் பசுவும் மானும்

பிண்ணாக்கு

பிண் + நாக்குபிளவு பட்ட நாக்கு

பிண்ணாக்குஎண்ணெய் எடுத்தப் பின் கிடைக்கும் பொருள்

பலகையொலி

பல + கை + ஒலிபல கைகள் எழுப்பும் ஒலி

பலகை + ஒலிமரப் பலகையின் ஒலி

9) அகராதியில் காண்க:

1)     ஆசுகவி – கூறியவுடன் பாடுவது

2)    மதுரகவி – சுவையுடன் பாடுவது

3)    சித்திரகவி – எழுத்தைச் சித்திரமாக வடித்து பாடுவது

4)    வித்தாரக்கவி – விரிவாகப் பாடுவது

10) கலைச்சொல் அறிக

1)    Belief - நம்பிக்கை

2)   Philosopher - மெய்யியலாளர்

3)   Renaissance - மறுமலர்ச்சி

4)   Revivalism – மீட்டுருவாக்கம்

மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 29 முதல் 37)

1. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

விடை:

    ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான  நலன்களை  உருவாக்குகின்றன.

    )இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில்  நன்மை கிட்டும்  என  எண்ணாமல்  ,அறம் செய்ய வேண்டும்  என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

     ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று  சங்க  இலக்கியங்கள்  கூறுகின்றன.இக்கருத்து  இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

     ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்   தேவையே.

 

2. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

விடை:

ü  அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.

ü  ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.

ü  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்

3. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம்என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்புசுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

விடை:

ü  வீட்டைத்தூய்மையாக வைத்திருத்தல்

ü  மழைநீரைச் சேமித்தல்

ü  பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துதல்

ü  வீதிகளைத் தூய்மைப்படுத்தல்

ü  மரங்களை வளர்த்தல்

ü  இயற்கை உரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

4.வாளித்தண்ணீர்,சாயக்குவளை,கந்தைத்துணி,கட்டைத்தூரிகை-இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி ஒரு பத்தி அமைக்க

விடைவாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத்தூரிகை ஆகியவற்றையே மையமாகக் கொண்டு சிலரது வாழ்க்கை சென்றுகொண்டுள்ளது.எத்தனை முறை புழுதி ஒட்டினாலும்,எத்தனை முறை அழுக்கானாலும் சலிக்காமல் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர்.என்றாவது ஒரு நாள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில்

5. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

   தமிழர். போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார். முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர்.பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

அ. ஆவூர் மூலங்கிழாரின் போர் அறம் யாது?

விடை: தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆ. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

விடை: போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார். முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

இ. யாருக்கெல்லாம் தீங்கு வராதவண்ணம் போர் புரிய வேண்டும்?

விடை: போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர்.பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும்.

6) அலகிட்டு வாய்பாடு (மாதிரி)

சீர்

அசை

வாய்பாடு

தாளாண்மை

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

என்னும்

நேர்+நேர்

தேமா

தகைமைக்கண்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தங்கிற்றே

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

வேளாண்மை

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

என்னும்

நேர்+நேர்

தேமா

செருக்கு

நிரைபு

பிறப்பு

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1. கடிதம் எழுதுக. (வினாஎண்:39)

1. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

மின்வாரியஅலுவலருக்குக் கடிதம்

அனுப்புநர்

     .இளமுகில்,

     6,காமராசர் தெரு,

     வளர்புரம்,

     அரக்கோணம்-631003

பெறுநர்              

      உதவிப்பொறியாளர் அவர்கள்,

      மின்வாரிய அலுவலகம்,

     அரக்கோணம்-631001            

ஐயா,

    பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

நன்றி!!

                                                                                                                                    இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,

                                                                                                                                                  .இளமுகில்.

இடம்:அரக்கோணம்,

நாள்:15-10-2022.


2. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும், அதற்குப்  பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.  (வினாஎண்:39)

7, திருத்தணி,

14-05-2024

அன்புள்ள அத்தைக்கு,

            நலம். நலமறிய ஆவல். எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்பாராட்டி, பரிசு வழங்கினர். எனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியைத் தங்களுடனும்  பகிர விரும்புகிறேன். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.

நன்றி!

இப்படிக்கு

தங்கள் அன்புள்ள

வா.நிறைமதி.

3.மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.

(வினாஎண்: 42)

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

3)காட்சியைக்கண்டு கவினுற எழுதுக  (வினாஎண்:40 )

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!



 

4) மொழிபெயர்க்க:-  (வினாஎண்:42 )

            Once upon a time there were two beggars in Rome. The  first begger used to cry  in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.

விடை:

            ரோம் நகரத்தில் இரண்டு யாசகர்கள் ( பிச்சைக்காரர்கள் ) இருந்தார்கள்.அவர்கள் தினமும்  ஒருவன் கடவுள் என்னை காப்பார் எனக் கூறிக்கொண்டே இருந்தான். இன்னொருவன் அரசன் தன்னை காப்பாற்றுவான் எனக் கூறிக்கொண்டே இருப்பான்.ரோம் நகர அரசர் தன் புகழை பரப்புகின்றவனுக்கு உதவலாம் என முடிவெடுத்தார். தங்க கட்டிகள் கொண்ட ரொட்டி தயாரித்து அதனை அந்த யாசகருக்குக் கொடுத்தார். அந்த யாசகர் அந்த ரொட்டியை தனது சக யாசகருக்கு விற்று விட்டார். வீட்டுக்கு சென்று அவர் அந்த ரொட்டியை வெட்டும் போது அதனுள் தங்க கட்டிக் கண்டார். உடனே அவர்கடவுளுக்கு நன்றிக் கூறி விட்டு பிச்சை எடுப்பதை நிறுத்திக் கொண்டார்.

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 43 முதல் 45)

1. குறிப்புகளைக்  கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.       (வினாஎண்: 44)

  மாணவன் – கொக்கைப் போல , கோழியைப் போல – உப்பைப் போல –இருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடை க்கும் வாய்ப்பைப் பயன்ப டுத்திக்கொள் ளும் – குப்பையை க் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள் ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி .

முகில்:    வணக்கம் ஐயா!
ஆசிரியர்: வணக்கம் இன்றைய பாடம் முன்னேற்றம். கொக்கைப் போல வாய்ப்பு வரும் வரை       

                காத்திருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் பயன்படுத்த வேண்டும்.
முகில்:   ஐயா சிந்திக்காமல் செயல்படக்கூடாது என்று கூறுகிறது இவ்வரிகள்.
ஆசிரியர்: கோழி குப்பையைக் கிளறினாலும் தனக்குத் தேவையான உணவை மட்டுமே கொத்தித்  

               தின்னும். அதுபோல எந்த செயலிலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
முகில்:   புரிந்தது ஐயா!
ஆசிரியர்: அடுத்தது உப்பைக் கண்ணால் பார்க்கலாம். சுவையை நாவில் உணரலாம். அதுபோல,

               வெளித்தோற்றம் எப்படி இருப்பினும் குணங்களை ஆராய்ந்து உணர்ந்து  

               கொள்ள வேண்டும் உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும்

               உண்ணமுடியாது. அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் மற்றவர்களிடம்

               ஒவ்வொருவருடன்  உரிய அளவோடு பழகி இருப்போம்.
முகில்:   மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க்கை படத்தை புரிந்துகொண்டோம் நன்றி ஐயா.

2. குறிப்புகளைப் பயன்படுத்தி , “ சாலைப்பாதுகாப்பு” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக. (வினாஎண்: 45)

  முன்னுரை- சாலை விதிகளை அறிவோம் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளுக்கான காரணங்கள் – தேவையான விழிப்புணர்வு – நமது கடமை – முடிவுரை.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

சாலை விதிகளை அறிவோம்

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்

விபத்துகளுக்கான காரணங்கள்

தேவையான விழிப்புணர்வு

நமது கடமை

முடிவுரை.

 

\முன்னுரை:

      சாலை விதிகளை அறிந்து நடத்தல் நமக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் நல்லது. சாலைப்பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ஆகும். சாலை விதிகளின் அவசியத்தை இக்கட்டுரையில் காண்போம்.

சாலை விதிகளை அறிவோம்:

     சாலை விதிகளைப் பற்றி அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். தலைக்கவசம் அணிதல், சரியான வேகத்தில் வாகனங்களை இயக்குதல், வண்ண விளக்குகளின் நிலை அறிந்து சாலையைக் கடத்தல், மற்ற வாகனங்களை முந்தாமல் செல்லுதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

    சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்க வேண்டும். மஞ்சள் விளக்கு எரிந்தால் செல்லத் தயாராக இருக்க வேண்டும். பச்சை விளக்கு எரிந்தால் செல்ல வேண்டும். அனைத்து சாலை விதிகளையும் முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும்.

விபத்துகளுக்கான காரணங்கள்:

   வாகனங்களை முந்துதல், அதிக வேகம், தேவையற்ற இடங்களில் சாலையைக் கடத்தல், ஒருவழிப்பாதையில் செல்லுதல் உள்ளிட்டவை விபத்துகளுக்கான காரணங்களாகும்.

தேவையான விழிப்புணர்வு:

   சாலை விதிகள் நாம் அனைவரும் பாதுகாப்புடன் பயணிக்கவே ஏற்படுத்தப்பட்டன. அதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்.

நமது கடமை:

    சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதும், நம்மைச் சார்ந்தவர்களைப் பின்பற்றச் செய்வதும் நமது கடமையாகும்.

முடிவுரை:

     சாலைவிதிகளைப் பின்பற்றி நடப்போம். உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்வோம்.


PDF வடிவில் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை