10 TH STD TAMIL QUARTERLY QUESTION PAPER AND ANSWER KEY TIRUPPATHUR DIST

10.ஆம் வகுப்பு தமிழ்

காலாண்டுத்தேர்வு வினாத்தாள்

👉திருப்பத்தூர்  மாவட்டம் 


வினாத்தாளைப் பதிவிறக்க👇

காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 திருப்பத்தூர் மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.     

அ. வேற்றுமை உருபு

1

3.     

ஆ. 3,1,4,2

1

4.     

ஈ . இலா

1

5.     

ஆ. இறைவனிடம், குலசேகராழ்வார்

1

6.     

ஈ. வானத்தையும் பேரொலியையும்

1

7.     

அ. அருமை + துணை

1

8.     

இ. கல்வி

1

9.     

இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

1

10.    

ஈ. உறவினர்

1

11.    

ஈ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

12.   

இ. காற்றே வா

1

13.   

அ. பாரதியார்

1

14.   

இ. மயங்கச்செய்

1

15.   

இ. மகரந்த - மயலுறுத்து

1

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

சரியான தொடர்கள்:

             * ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன

             * ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

          பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது.

2

17

பொருந்திய வினாத்தொடரைச் சரியாக இருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

18

 வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

19

இயந்திரமனிதன், செயற்கைக்கோள்

2

20

'பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைச் செய்யாதவர்' என்பது பொருள்.

2

21

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

2

                                                                                பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

சிரித்து சிரித்துப் பேசினார்

2

23

அ. அ   ஆ. க00

2

24

வருக - வா(வரு) + க

வா - பகுதி

வரு எனத் திரிந்தது விகாரம்

- வியங்கோள் வினைமுற்று விகுதி

2

25

. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

2

26

பொருந்திய விடையைச்  சரியாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

27

அ. பண்புத்தொகை  ஆ. வேற்றுமைத்தொகை

2

28

.உரையாடல்   .மெய்யெழுத்து

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                              பிரிவு-1                                                                     2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ. முன்பின் அறியாத புதியவர்  ஆ. விருந்தே புதுமை  இ. விருந்து

3

30

1.     உயிராய் நான் ; மழையாய் நான்

2.     நானின்றி பூமியே சுழலாது  

3.    பூமித்தாயின் குருதி நான்.

3

31

ü  தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார்

ü  மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பரவலாக்கினார்

ü  2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார்

3

                                                                          

 

                                                                              பிரிவு-2                                                                       2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழி

3

33

ü  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார்.

ü  மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் , நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

3

34

 

.

வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய

பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவன் வடிவென்பதோ ழியாவழ குடையான்.

.

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், "கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்" என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்          

3

                                                                           பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை , தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை.

3

36

-     இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

அணி இலக்கணம்:

      உவமை, உவமேயம், உவம உருபு மூண்ரும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

விளக்கம்:

      மக்களிடம் வரி வாங்குவது அரசன் வழிப்பறி செவதற்குச் சமம்.

அணிப்பொருத்தம்:                                                                                              

      உவமை- வழிப்பறி செய்பவன் , உவமேயம்அரசன் வரி வாங்குவது, உவம உருபுபோலும்

3

37

ஆற்றுநீர்ப் பொருள்கோள்தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.

3

                                                                                    பகுதி-4                                                                   5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

 (அல்லது)

)

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

5

39

ஆ.

அ.

வாழ்த்து மடல்

 

நெல்லை,

26-12-2021.

அன்புள்ள நண்பா/தோழி,

          நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                                                                இப்படிக்கு,

உனது அன்பு நண்பன்,

.மகிழினியன்.

உறைமேல் முகவரி:

      க. இளவேந்தன்,

      86, மருத்துவர் நகர்,

      சேலம்-2.

ஆ)

அனுப்புநர்

        அ.எழில்வேந்தன்,

        12,கம்பர் தெரு,

         அரக்கோணம்.

பெறுநர்

         உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

         ஆணையர் அலுவலகம்,

         அரக்கோணம்.

ஐயா,

    பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக.

    வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                                                         இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

அ.எழில்வேந்தன்.

இடம்:அரக்கோணம்,

நாள்:08-01-2022.

உறைமேல் முகவரி:

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

1.       தேவையான உணவுப்பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்துக் வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

)   

      மரியாதைக்குரியவர்களே.என் பெயர் இளங்கோவன்.நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளை கூற விளைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்,நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா,ஸ்ரீலங்கா,ம்லேசியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

5

                                                                              பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

   தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

(அல்லது)

. பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

8

44

அ. பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

(அல்லது)

)  

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

8

45

)  முன்னுரை:

   உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

முச்சங்கம்:

      பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

சிற்றிலக்கியங்கள்:

    96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன.

காலந்தோறும் தமிழ்:

   சங்க காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில்

பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

முடிவுரை:

    இவ்வாறு தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை.      (அல்லது)

)  மழைநீர் சேமிப்பு

முன்னுரை

          ”விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

            பசும்புல் தலைகாண்ப தரிது.”

    என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப மழையே இந்த உலக உயிர்கள் செழித்து வாழ்வதற்கு முதன்மையான காரணமாக அமைகிறது. இத்தகைய உயிர்த்துளிகளைச் சேமிக்கும் முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நீரின்றி இயங்காது உலகம்

          ஓரறிவு  உயிரான புல் முதல் ஆறறிவு உயிரான மனிதன் வரையில் அனைத்து உயிர்ளும் வாழ்வதற்கு நீரே அடிப்படை. பரிணாம வளர்ச்சிக் கோட்பாடின்படி உயிரினங்கள் தோன்றியதே நீரில்தான். நீர் இல்லையெனில் உழவுமில்லை; உணவுமில்லைவள்ளுவரின்துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை’  என்னும் குறள் நீரின் அவசித்தை உணர்த்தும்.

நீர்ப்பற்றாக்குறைக்குக் காரணம்

          மனிதன் தன் தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தி வீணாக்குவதாலும் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதாலும் மரங்களை வெட்டியதன் விளைவால் வந்த மழைப்பொழிவு குறைவினாலும் நீரிநிலைகள் ஆக்கரமிப்பாலும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகிறது.

சேமிக்கும் முறைகள்

          நீருக்கு ஆதாரமாக் விளங்கக்கூடிய குளம், ஏரி, ஆறு  முதலிய நீர்நிலைகளை ஆழப்படுத்தி மழைநீரைச் சேமிக்கலாம். அந்நீர்நிலையைச் சுற்றிலும் மரங்களை நட்டு நீராவிப் போக்கினைத் தடுப்பதோடு மழைவளமும் பெறலாம்.

மழைநீர் சேமிப்புத் தொட்டி

          நம் வீடுத்தேடிவரும் விருந்தினரான மழையினை வீணாக்காமல் மழைநீர் சேகரிப்புத் தொட்டியினை அமைத்து, மழைநீரினைச் சேகரிக்கலாம். மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைப்பது மிக எளிது. குறிப்பிட்ட ஆழத்திற்குப் பள்ளம் தோண்டி அதில் மணல் மற்றும் சிறுக் கல்துண்டுகளைப் பாதியளவு நிரப்பு, வான்மழை வந்து சேரும்வண்ணம் வழி அமைத்தால் மழைநீர்ச் சேகரிப்புத்தொட்டி தயாராகிவிடும்.

மழைநீரின் பயன்கள்

          உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமான உணவினை உருவாக்கிக் கொடுப்பதோடு தானும் உணவாகும் தன்மை உடையது மழை. மேலும், உலகிற்கு உணவினை வழங்கும்  பயிர்த்தொழில் செழிப்பதும்  இம்மழையால்தான். ‘ ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றி கால்’  என்னும் குறள் மழைநீரின் பயனை விளக்குகிறது.

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்!

          மரமில்லையேல் மழையில்லை என்பதை உணர்ந்து மழை வளத்திற்குக் காரணமான மரங்களை அழிகாமல் காப்பதோடுமரக்கன்றுகளை வீடுதோறும் வீதிதோறும் நட்டு மழை வளம் பெறுவோம்.

முடிவுரை

          ’யாசிக்கும் பூமிக்கு வானம் வழங்கும் வைரக் காசுகள்தான் மழை’ . வைரத்தைக் காப்பதுபோல மழையினைச் சேமித்துப் பாதுகாத்து உலகினை வளம்பெற செய்வோம்!

8

 

 பதிவிறக்கம் செய்ய

   

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை