10. ஆம் வகுப்பு – தமிழ்
மொழியை ஆள்வோம் இயல் -1
அ) :- மொழி பெயர்ப்பு:-
1.If you talk to a man in a language he
understand,thats goes to his head. If you talk to him in his own language that
goes to his heart – Nelson Mendela
2. Language is the road map of a culture. It tells you
where its people come from and where they are going – Rita Mae Brown
ஆ) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை தேரும்
சிலப்பதி காறமதை ஊனிலே
எம்முயிர் உல்லலவும் – நிதம் ஓதி
யுனர்ந்தின் புருவோமே” கவிமணி தேசிக விநாயகனார் |
|
இ) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
( குவியல், குலை,மந்தை,கட்டு )
ஈ) வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
1.கலையரங்கத்தில்
எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு
உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று என்னைச்
சந்தித்தார்.அவர் என் நண்பர்.
4.பொது அறிவு
நூல்களைத் தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.
ஈ) தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய
வேறு சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை மீள எழுதுக.
1. உலகில் வாழும் மக்களில் சிலர்
கனியிருக்கக் காய் புசித்தலைப் போல,இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.
2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத்
தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.
3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக்
கண்டு,அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக்
களி கொண்டனர்.
4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள்
மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.
5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும்
யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.
உ) நயம் பாராட்டுக:-
தேனினும்
இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும்
ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
வானினும்
ஓங்கிய வண்டமிழ் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி
தோங்குவாய் தண்டமிழ் மொழியே
இயல் -1
மொழியோடு விளையாடு
ஊ) சொற்களை
இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
எ) குறிப்புகளைக் கொண்டுவினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க:-
குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச்
சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்
ஏ) எண்ணுப்பெயர்களைக் கண்டு,தமிழ் எண்களில் எழுதுக.
செய்யுள் அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ்
எண் |
நாற்றிசையும் செல்லாத நாடில்லை |
|
|
எறும்புந்தன் கையால் எண் சாண் |
|
|
ஐந்து சால்பு ஊன்றிய தூண் |
|
|
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி |
|
|
ஆனை ஆயிரம் அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
|
|
மொழியை ஆள்வோம்
இயல் -2
அ) தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக:-
The
Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away
the dark.The milky clouds start their wandering.The colourful birds start
twitting their morning melodies in percussion.The cute butterflies dance around
the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows
everywhere and makes everything pleasant.
ஆ) சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-
சொற்கள் |
தொகை |
தொடர் |
இன்சொல் |
|
|
எழுகதிர் |
|
|
கீரிபாம்பு |
|
|
பூங்குழல்
வந்தாள் |
|
|
மலைவாழ்வார் |
|
|
முத்துப்பல் |
|
|
இ) சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்.நீக்காவிட்டாலும் வாசனை தரும். |
|
பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும் |
|
இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. |
|
நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும். |
|
ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம் |
|
செய்திகளைப்
படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
பூக்களைப்
பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்
பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும்
மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.
மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.
அகவிதழ் முதலிய உறுப்புகள்
இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.
பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.
இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை
அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.
1.
மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக.
2.
அரும்பாகி மொட்டாகி பூவாகி..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.
3.
நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயங்களையும் எழுதுக.
4.
அரிய மலர் –
இலக்கணக் குறிப்புத் தருக.
5.
தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.
இலுப்பைப்
பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.
இயல் – 3 மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்க்க:-
Respected ladies and
gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a
few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were
best in culture and civilization about two thousand years ago. Tamils who have
defined grammer for language have also defined grammer for life. Tamil culture
is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia,
Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been
updates consistently. We should feel proud about our culture. Thank you one and
all.
ஆ) பழமொழியை நிறைவு செய்க:-
1 |
உப்பில்லாப் |
|
2. |
ஒரு
பானை |
|
3 |
உப்பிட்டவரை |
|
4 |
விருந்தும் |
|
5 |
அளவுக்கு |
|
இ) கதையாக்குக:-
மனித
வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகுற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின்
உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.
ஈ) நயம் பாராட்டுக:-
“ கத்துகடல்
சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட
ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட
வெள்ளி எழும் “
காளமேகப் புலவர்
இயல் – 3 மொழியோடு விளையாடு
அ) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து
ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-
வினா |
குறிப்பு |
விடுபட்ட எழுத்து |
நூலின் பெயர் |
இ____கு |
பறவையிடம் இருப்பது |
இ-கு |
|
கு____தி |
சிவப்பு நிறத்தில் இருக்கும் |
கு-தி |
|
வா____ |
மன்னரிடம் இருப்பது |
வா- |
|
அ____கா |
தங்கைக்கு மூத்தவள் |
அ-கா |
|
ம_____ |
அறிவின் மறுபெயர் |
ம- |
|
பட_____ |
நீரில் செல்வது |
பட- |
ஆ) இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-
1 |
சிலை - சீலை |
|
2. |
தொடு - தோடு |
|
3 |
மடு - மாடு |
|
4 |
மலை - மாலை |
|
5 |
வளி - வாளி |
|
6 |
விடு - வீடு |
|
இயல் – 4 மொழியை ஆள்வோம் - 1
அ) மொழிபெயர்க்க:-
Malar:
Devi,switch off the lights when you leave the room
Devi : Yeah! We
have to save electricity
Malar : Our
nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future our country may launch
artificial moons to light our night time sky!
Malar: I have
read some other countries are going to launch these types of illumination
satellites near future.
Devi: Superb news! If we launch artificial moons,they can
assist in disaster relief by beaming light on areas that lost power!
2. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:-
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு.செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காது
கேட்கும்.
பறவைகளுக்கு பார்த்தல்,கேட்டல்
உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
ஆ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-
அ) இயற்கை – செயற்கை |
|
ஆ) கொடு - கோடு |
|
இ) கொள் - கோள் |
|
ஈ) சிறு - சீறு |
|
உ) தான் - தாம் |
|
ஊ) விதி - வீதி |
|
அ) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள்
சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து
மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து
திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம்
கடந்தது.
1.
பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2.
புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3.
பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4.
இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5.
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
2. நயம் பாராட்டுக:-
நிலாவையும்
வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும்
அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும்
மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின்
கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ? - பாரதியார்
இயல் – 4 மொழியோடு விளையாடு
அ) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:-
1.
நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____கற்றல்___
2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____கரு__
3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______சோறு____ ஆகும்.
4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து _____எழுத்து____
5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________பூவில்________
2.
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:- குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர் |
|
கொடுத்துச் சிவந்த |
|
மறைத்துக் காட்டு |
|
அருகில் அமர்க |
|
பெரியவரின் அமைதி |
|
புயலுக்குப் பின் |
|
இயல் – 5 மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்ப்பு:-
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக:-
Lute music |
|
Grand - daughter |
|
chamber |
|
rote |
|
To look up |
|
Didactic compilation |
|
2.
அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.
வேர்ச் சொல் |
எழுவாய்த் தொடர் |
பெயரெச்சத் தொடர் |
வினையெச்சத் தொடர் |
விளித் தொடர் |
வேற்றுமைத் தொடர் |
ஓடு |
அருணா ஓடினாள் |
ஓடிய அருணா |
ஓடி வந்தாள் |
அருணா ஓடாதே! |
அருணாவிற்காக ஓடினாள் |
சொல் |
அம்மா சொன்னார் |
|
சொல்லிச் சென்றார் |
|
கதையைச் சொன்னார் |
தா |
|
தந்த அரசர் |
தந்து சென்றார் |
அரசே தருக! |
|
பார் |
துளிர் பார்த்தாள் |
|
பார்த்துச் சிரித்தாள் |
|
துளிருடன் பார்த்தேன் |
வா |
குழந்தை வந்தது |
வந்த குழந்தை |
|
குழந்தையே வா |
குழந்தைக்காக வந்தாள் |
3. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
2. மரத்தை
வளர்ப்பது நன்மை பயக்கும்.
3. வாழ்க்கைப்பயணமே
வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.
4. கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும்.
5. குழந்தைகள்
தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
இயல் – 5 மொழியோடு விளையாடு
அ) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:-
தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை
பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை
சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை
சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை
வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன் நான்
யார்?
ஆ. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை
செய்க
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்
_______யாவும் அரசுக்கே சொந்தம்.
நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில்
___ __ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல்,புதைத்தல்)
2.
காட்டு விலங்குகளைச்
________தடை செய்யப்பட்டுள்ளது.
செய்த தவறுகளைச்
___________திருத்த உதவுகிறது.(
சுட்டல்,சுடுதல் )
3.
காற்றின் மெல்லிய
______ பூக்களைத் தலையாட்ட வைக்கிறது.
கைகளின் நேர்த்தியான
________பூக்களை மாலையாக்குகிறது.
( தொடுத்தல்,தொடுதல் )
4.
பசுமையான _______ஐக்__________ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)
5.
பொது வாழ்வில்______கூடாது _______இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.
( நடித்தல்,நடிப்பு )
இயல் – 6
மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்க்க:-
Kalaignar Karunanidhi is
known for his contributions to Tamil literature. His contributions cover a wide
range: poems, letters, screenplays, novels, biographies, historical novels,
stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for
Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and
books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil
language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar
wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an
architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari,
Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.
ஆ. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1.அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக
)
2. இன்னாசிரியார், புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி
வைத்தார்; புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு
எடுத்துக்கொடுத்தார். (தொடர்சொற்றொடராக மாற்றுக)
3. கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக்
கொண்டு வாழ்ந்தார். கலைஞர், எழுத்துவழியாகத் தமது
எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச்
சொற்றொடராக மாற்றுக)
3. முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத்
தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர். (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
4. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென
நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைப்பட்டது.
(தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)
பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட் பிஸ்கட் |
|
வெயிட் |
|
யூஸ் |
|
எக்ஸ்பெரிமெண்ட் ரிப்பீட் |
|
ஆல் தி பெஸ்ட் |
|
ஈக்வலாக |
|
பட் |
|
ஆன்சரை |
|
பத்தியைப்
படித்து வினாவிற்கு விடையளிக்க.
கண்ணுக்குக்
காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன
நிகழ்த்துக்கலைகள். கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களாக இருப்பவை இவை. வடிவங்களைக்கொண்டு நிகழ்த்துகலைகளை நான்கு வகைகளாகப்
பிரிக்கலாம்.
அ) கரகாட்டம், காவடியாட்டம்- தலையில் / தோளில் கருவியைச் சுமந்தபடி
ஆடுபவை.
ஆ) மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் வேடம்கட்டி ஆடுபவை.
இ) ஒயிலாட்டம், தப்பாட்டம், தேவராட்டம். சேர்வையாட்டம் - குழுவாக ஆடுபவை.
ஈ) தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து - கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள்.
தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக்கொண்டு ஆடும் கரகாட்டமும் தோளில்
காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மக்களால் விரும்பப்படும்
மரபார்ந்த கலைவடிவங்கள். மயில்வடிவக் கூட்டுக்குள் இருந்துகொண்டு, நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் மயிலாட்டமும்
குதிரைவடிவக் கூட்டுக்குள் இருந்து பாதத்துக்குக்கீழ் கட்டையைக் கட்டிக்கொண்டு 'டக்டக்' என்று ஆடும் குதிரையாட்டமும் புலி வேடமிட்டு ஆடும்
புலியாட்டமும் காண்பதற்கு உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகள். இசைக்கேற்ப
துணியைவீசிக் குழுவாக ஆடும் ஒயிலாட்டம், தப்பு என்னும் தோற்கருவியின் தாளத்திற்கு ஆடும் தப்பாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம் ஆகியவை கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள்.
இவற்றுக்கெல்லாம் சிகரமாகத் திறந்தவெளிகளையும் தெருமுனைகளையும் மேடையாக்கி எளிய
ஒப்பனைகளுடன் நிகழ்த்தப்படும் கலையாகத் தெருக்கூத்து விளங்குகிறது. கதையொன்றில்
இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவை இணைந்தவடிவமே தெருக்கூத்து ஆகும். இதே
கதை, பாடல், ஆடல்களுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத்
திரைச்சீலையில் ஒளி ஊடுருவும்வகையில் பொருத்தி, அவற்றை நாடகம்போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்தாகும். குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் கலையிது. ஊரக மக்களின் வாழ்வியலில் கலந்தவை
நிகழ்த்துகலைகள். இவை உழைப்பாளிகளின் உணர்வு வெளிப்பாடு; வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி ; மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும் பிரிக்கமுடியாத
பண்பாட்டுக்கூறு.இத்தகைய சிறப்புகளைக்கொண்டுள்ள நிகழ்த்து கலைகளை நாம்
பாதுகாக்கவேண்டும்.
வினாக்கள்:
அ) நிகழ்த்துக்கலைகள்
எத்தகைய சிறப்புகளைக் கொண்டவை?
ஆ) மரபார்ந்த
கலைவடிவங்கள் யாவை?
இ)
நிகழ்த்துக்கலைகளில் முத்தமிழும் உள்ளடங்கி உள்ளன- கருத்தை விளக்குக.
ஈ) பத்தியில் இருந்து
இரண்டு வினாக்களை உருவாக்குக.
விடை:
1. தோளில் கருவியைச் சுமந்தபடி ஆடுபவை எவை?
2.
வேடம்கட்டி ஆடுபவை. எவை?
3.
மக்களின் சமய வழிபாட்டிலும் வாழ்வியல் நிகழ்வுகளிலும்
பிரிக்கமுடியாத பண்பாட்டுக்கூறு எது?
4.
குழுவாக ஆடுபவை எவை?
5.
கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள் யாவை?
உ)
நிகழ்த்துக்கலைகளைப் பாதுகாக்க நம்மால் செய்ய இயலும் எவையேனும் இரண்டு
செயல்பாடுகளைக் குறிப்பிடுக.
மனிதனுக்கும்
மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;- (வினா எண்: 40)
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
------------------------
தொடரில் விடுபட்ட
வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1.
வானம் ---- தொடங்கியது.
மழை வரும் போலிருக்கிறது.
2.
அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம்
-----
3.
------மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ------- கதிரவனின் ----- வெயில் பரவிக்கிடக்கிறது.
5.
வெயில் அலையாதே;உடல் -----
விடும்.
ஆ. பொருத்தமானவற்றைச்
சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை,கவிழும்,விருந்து |
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு ---
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் -----
2. காலை ஒளியினில் மலரிதழ் ------
சோலைப் பூவினில் வண்டினம்-----
3. மலைமுகட்டில் மேகம்------ அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் -----
4. வாழ்க்கையில் -----மீண்டும்
வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் -------- கூத்து சொல்லும்.
5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ------ அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் ------
நிற்க அதற்குத்தக
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர்
எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின்
உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை
வரிசைப்படுத்துக.
இயல் – 7 மொழியை ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
Among the five geographical divisions of the Tamil
country in Sangam literature, the Marutam region was the fit for cultivation,
as it had the most fertile lands. The
properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains
and the fertility of the soil.Among these elements of nature,sunlight was
considered indispensible by the ancient Tamils.
ஆ) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
வரப் போகிறேன் |
|
இல்லாமல் இருக்கிறது |
|
கொஞ்சம் அதிகம் |
|
முன்னுக்குப் பின் |
|
மறக்க நினைக்கிறேன் |
|
இ) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக
மூவேந்தர்களால்
நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில்
அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
தொகைச்சொற்கள் |
பிரித்து எழுதுக |
தமிழ் எண்ணுரு |
மூவேந்தர் |
|
|
நாற்றிசை |
|
|
முத்தமிழ் |
|
|
இருதிணை |
|
|
முப்பால் |
|
|
ஐந்திணை |
|
|
நானிலம் |
|
|
அறுசுவை |
|
|
பத்துப்பாட்டு |
|
|
எட்டுத்தொகை |
|
|
இயல் – 7 மொழியோடு விளையாடு
அ) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-
ஊர் பெயர் |
மரூஉ |
ஊர் பெயர் |
மரூஉ |
ஊர் பெயர் |
மரூஉ |
புதுக்கோட்டை |
|
கோயம்புத்தூர் |
|
கும்பகோணம் |
|
திருச்சிராப்பள்ளி |
|
நாகப்பட்டினம் |
|
திருநெல்வேலி |
|
உதகமண்டலம் |
|
புதுச்சேரி |
|
மன்னார்குடி |
|
மயிலாப்பூர் |
|
சைதாப்பேட்டை |
|
தஞ்சாவூர் |
|
இயல் – 8 மொழியை ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
Once upon a time there were two beggars in Rome. The first begger used to cry in the streets of the city,”He is helped whom
God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”.
This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that
he decided to help the begger who popularized him in the streets of Rome. He
ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the
begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as
he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found
sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But
the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour,
the Emperor summoned him to his presence and asked him,” What have you done
with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold
it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the
Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the
beggar out his palace.
ஆ) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
மனக்கோட்டை |
|
அள்ளி
இறைத்தல் |
|
கண்ணும்
கருத்தும் |
|
ஆறப்போடுதல் |
|
இ) பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக
மாற்றுக;-
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு
!”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே !
அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.!
ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.
“சரிங்கண்ணே.”
ஈ) நயம் பாராட்டுக:-
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
-
வள்ளலார்.
இயல் – 8 மொழியோடு விளையாடு
அ) கண்டுபிடித்து எழுதுக:-
ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....
ஒன்று |
|
இரண்டு |
|
மூன்று |
|
நான்கு |
|
ஐந்து |
|
ஆறு |
|
ஏழு |
|
எட்டு |
|
பத்து |
|
ஆ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-
கானடை |
|
வருந்தாமரை |
|
பிண்ணாக்கு |
|
பலகையொலி |
|
இயல் – 9 மொழியை ஆள்வோம்
அ) மொழிபெயர்க்க:-
1. Education is what remains after one has forgotten what one has
learned in school – Albert Einstein
2. Tomorrow is often the busiest day
of the week – Spanish proverb
3. It is during our
darkest moment that we must focus to see the light – Aristotle
4. Success is not
final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston
Churchill
ஆ) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-
தாமரை இலை நீர்போல |
|
மழைமுகம் காணாப் பயிர்போல |
|
கண்ணினைக் காக்கும் இமைபோல |
|
சிலை மேல் எழுத்து போல |
|
இ) பாடலில் இடம் பெற்றுள்ள தமிழ்ப்புலவர்களின் பெயர்களைக் கண்டறிந்து
எழுதுக;-
கம்பனும்
கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும்
பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம்புலவரை,குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப்
பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
ஈ) பொருத்தமான
நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப்பெயர்களில்
கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன்
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
இயல் – 9 மொழியோடு விளையாடு
அ) கீழ்க்காணும் நாள்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக்
கொண்டு தமிழெண்களால் நிரப்புக:-
ஞாயிறு |
திங்கள் |
செவ்வாய் |
புதன் |
வியாழன் |
வெள்ளி |
சனி |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கலைச்சொல் அறிவோம்
1.
Vowel
2.
Consonant
3.
Homograph
4.
Monolingual
5.
Conversation
6.
Discussion
7.
Storm
8.
Land
Breeze
9.
Tornado
10.
Sea
Breeze
11.
Tempest
12.
Whirlwind
13.
செவ்விலக்கியம்
14.
காப்பிய
இலக்கியம்
15.
பக்தி
இலக்கியம்
16.
பண்டைய
இலக்கியம்
17.
வட்டார
இலக்கியம்
18.
நாட்டுப்புற
இலக்கியம்
19.
நவீன
இலக்கியம்
20.
Nanotechnology
21.
Space
Technology
22.
Biotechnology
23.
Cosmic
rays
24.
Ultraviolet
rays
25.
Infrared
rays
26.
Emblem
27.
Intellectual
28.
Thesis
29.
Symbolism
30. PLAY
WRIGHT
31. SCREENPLAY
32. STORYTELLER
33. AESTHETICS
34.
Consulate
35.
Patent
36.
Document
37.
Guild
38.
Irrigation
39.
Territory
40.
Belief
41.
Philosopher
42.
Renaissance
43.
Revivalism
44.
Humanism
45.
Cultural
Boundaries
46.
Cabinet
47.
Cultural
values
அகராதியில் காண்க.
அடவி |
|
அவல் |
|
சுவல் |
|
செறு |
|
பழனம் |
|
புறவு |
|
அகன்சுடர் |
|
ஆர்கலி |
|
கட்புள் |
|
கொடுவாய் |
|
திருவில் |
|
ஊண் |
|
ஊன் |
|
திணை |
|
தினை |
|
அண்ணம் |
|
அன்னம் |
|
வெல்லம் |
|
வெள்ளம் |
|
அவிர்தல் |
|
அழல் |
|
உவா |
|
கங்குல் |
|
கனலி |
|
மன்றல் |
|
அடிச்சுவடு |
|
அகராதி |
|
தூவல் |
|
மருள் |
|
தால் |
|
உழுவை |
|
அகவுதல் |
|
ஏந்தெழில் |
|
அணிமை |
|
மிரியல் |
|
வருத்தனை |
|
அதசி |
|
துரிஞ்சில் |
|
ஆசுகவி |
|
மதுர கவி |
|
சித்திர கவி |
|
வித்தாரகவி |
|
குணதரன் |
|
செவ்வை |
|
நகல் |
|
பூட்கை |
|
நிற்க அதற்குத் தக
இயல் - 1.
இன்சொல் பேசுவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுக
இயல் – 2
வானொலி அறிவிப்பு....
ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
மேற்கண்ட அறிவ்ப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை
வரிசைப்படுத்துக.
இயல் – 3
மருத்துவர் கு.சிவராமனின் கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?
இயல் – 4
தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை
பட்டியலிடுக.
இயல் – 5
பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.
இயல் – 6
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர்
எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்த பின்
உங்கள் துறையின் அறிவைக்கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை
வரிசைப்படுத்துக.
இயல் – 7
கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.
இயல் – 8
மாணவ
நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.
இயல் – 9
நீங்கள் செய்த,பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையைப் பட்டியலிடுக.
👉 வினா வங்கியைப் பதிவிறக்கம் செய்ய
👉 விடைக்குறிப்பைப் பதிவிறக்கம் செய்ய